என் மலர்
நீங்கள் தேடியது "சண்டிகர்"
- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார்.
- துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று காலையில் நடந்தது. 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜகவுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம்ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 7 கவுன்சிலர்களும், சிரோன்மணி அகாலி தளத்திற்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர்.
மேயர் பதவிக்கு குமாரை ஆம் ஆத்மி கட்சி முன் நிறுத்தியது. பாஜக மனோஜ் சோங்கரை வேட்பாளராக நிறுத்தியது. மூத்த துணை மேயர் பதவிக்கு, காங்கிரஸின் குர்பிரீத் சிங் காபியை எதிர்த்து பாஜகவின் குல்ஜீத் சந்து போட்டியிட்டார்.
துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார்.

இந்நிலையில் மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பாஜக மோதியது. தலைமை அதிகாரி அனில்மசிஹ், மேயர் பதவிக்கான வாக்கெடுப்பு பணியை தொடங்கினார்.
சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் அலுவல் உறுப்பினராக வாக்குரிமை பெற்ற சண்டிகர் எம்.பி கிரோன்கெர் முதலில் வாக்களித்தார். அவர் காலை 11.15 மணிக்கு வாக்களித்தார்.
இந்த மேயர் தேர்தலில் பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ்சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகள் பெற்றனர். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதில், மேயர் பதவியை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மனோஜ் சோங்கர் வென்றார். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் குல்தீப் குமாரை அவர் எளிதில் தோற்கடித்தார்.
அதை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார்.

வாக்கெடுப்பு பணியின்போது, வீடியோ பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கும் முன், மாநகராட்சி இணை ஆணையர், பின்பற்ற வேண்டிய செயல்முறை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
மேயர் தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
மேயர் தேர்தல் முதலில் ஜனவரி 18- ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 ஆண்டுகளாக மேயர் பதவியை வகித்து வரும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதால் இது முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.
- பக்சிஷ் சிங் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவியது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பந்தலா கிராமத்தில் உள்ள குருத்வாரா வளாகத்திற்குள் பக்சிஷ் சிங் என்ற வாலிபர் நுழைந்து அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பின் சில பக்கங்களை கிழித்ததாக கூறி அவரை சிலர் கும்பலாக சரமாரியாக தாக்கினர்.
படுகாயம் அடைந்த அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
பக்சிஷ் சிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக அவர் 2 ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது தந்தை லக்விந்தர் சிங் தெரிவித்தார். தனது மகனைக் கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசில் புகார் செய்தார்.
அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பக்சிஷ் சிங் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவியது. அதில் பக்ஷிஷ் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பதும், ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து தாக்குவதும் இடம் பெற்றுள்ளது.
- பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
- பா.ஜனதா வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறது.
சண்டிகர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
அரியானாவில் வருகிற 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கியுள்ளது. குரு ஷேத்ரா தொகுதியில் மட்டும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது மற்ற 9 தொகுதியிலும் காங்கிரஸ் நிற்கிறது.
பா.ஜனதா 10 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த முறை பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஜனநாயக ஜனதா காட்சி மற்றும் இந்திய தேசிய லோக்தளமும் களத்தில் உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பா.ஜனதா, காங்கிரசார் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 10 தொகுதிகளையும் பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் இந்த தேர்தலிலும் அங்குள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜனதா புதிய வியூகம் அமைத்துள்ளது.
பிரதமர் மோடி நேற்று அரியானாவின் அம்பாலா, சோனிபட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அரியானாவின் மறுபெயர் துணிச்சல், நான் அரியானா கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை சாப்பிடுகிறேன். அதனால்தான் நான் வலுவாக இருக்கிறேன்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். மத்தியில் வலுவான அரசு பதவியேற்றது. அதேபோல் இந்த முறையும் பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு பின்னர் அங்கு பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நயாப் சிங் சைனியை முதல்-அமைச்சராக நியமித்ததன் மூலம் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் இருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் மத்தியில் பா.ஜனதா மிகுந்த ஆதரவை பெற்றுள்ளது.
பா.ஜனதாவினர் ராமர் கோவில் கட்டியது, 370-வது சட்டபிரிவு நீக்கப்பட்டு காஷ்மீர் தற்போது வளர்ச்சி பாதையில் செல்வது, நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்தியது, மத்தியில் வலுவான அரசு அமைவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு எதிரான நிலைபாட்டை பா.ஜனதா கடைபிடிப்பதாகவும் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்துள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினர்களையும் காயப்படுத்தும் கொள்கை களை பா.ஜனதா பின்பற்றுவதாக காங்கிரஸ் மற்றும் ஐ.என்.எல்.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஐ.என்.எல்.டி. மற்றும் ஜே.ஜே.பி. ஜாட் இன மக்கள் வாக்குகளை பிரிப்பதால் காங்கிரசுக்கு சில தொகுதிகளில் இது சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 58 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 28 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.
மே 25-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் கர்னால் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்-மந்திரியாக பதவியேற்ற சைனி போட்டியிடுகிறார். அங்கு பா.ஜனதா வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுமோ அந்த கட்சியின் ஆதிக்கமே சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.
- விவசாயிகள் போராட்டத்தில் அந்த பெண் காவலரின் தாய் பங்கேற்றிருந்தால், தனது தாயை தீவிரவாதி என்று சொன்னவர் மீது அந்த பெண்ணுக்கு கோபம் வருவது இயல்பே.
- ஒரு எம்.பி தாக்கப்படுவது சரியல்ல தான். ஆனால் விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Yea slap can't be justified but why not speak about this slap by Kangana's goon to a lady right when Kangana was there?Why didn't Kangana spoke about that also?Someone slap Kangana she cries and anyone else got slapped she laughs with her troll armypic.twitter.com/5oLFAAttXc
— pawan yadav (@pawanyadav8) June 6, 2024
மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்தததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிராவில் (உத்தவ் தாக்கரே) சிவா சேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் அவர் பேசுகையில், சிலர் வாக்குகளை தருவார்கள், சிலர் அடியைத் தருவார்கள், இந்த விஷயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஒருவேளை விவசாயிகள் போராட்டத்தில் அந்த பெண் காவலரின் தாய் பங்கேற்றிருந்தால், தனது தாயை தீவிரவாதி என்று சொன்னவர் மீது அந்த பெண்ணுக்கு கோபம் வருவது இயல்பே.

#WATCH | Mumbai: On Kangana Ranaut slapped by CISF woman constable, Shiv Sena (UBT) leader Sanjay Raut says, " Some people give votes and some give slaps. I don't know what has happened actually... If the constable has said that her mother was also sitting, then it is true. If… pic.twitter.com/CdrBypPxyc
— ANI (@ANI) June 7, 2024
இந்த விவகாரத்தில் "இந்தியா சட்டத்தின் ஆட்சி நடக்கும் தேசம் என்றும் சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி சொல்லக்கூடும். ஆனால் தங்களது உரிமைகளுக்காக போராடிய விவசாயிகளும் இந்த தேசத்தின் பிள்ளைகள் தான். ஒவ்வொரு பெண்ணும் பாரத மாதா தான். அந்த வகையில் பாரத மாதாவை ஒருவர் தீவிரவாதி என்று கூறுவாராயின் அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். ஆனாலும் கங்கானாவுக்காக நான் வருந்துகிறேன். அவர் இப்போது எம்.பி. ஒரு எம்.பி தாக்கப்படுவது சரியல்ல தான். ஆனால் விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

- சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
- பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார்.
சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பூதாகரமாக மாறியுள்ளது.
பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.
குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.
பலரும் அந்த பெண் காவலருக்கு வேலை வாய்ப்பும், ரொக்க பணமும், தங்க மோதிரமும் பரிசளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் மேலும் ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித் அவரது மனைவியை தரக்குரைவாக பேசியதால் காமெடியனை மேடையில் வைத்து அறைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அச்சம்பவம் மிகப்பெரிய வைரல் ஆகி பேசுப்பொருள் ஆனது. அச்சம்பவத்திற்கு 2022 ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் பதலளிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டது தற்பொழுது வைரலாகி வருகிறது.
அப்பதிவில் "என் அம்மாவையோ தங்கையின் உடல்நல குறைவை வைத்து யாராவது ஒரு இடியட் கிண்டல் செய்தால் நானும் வில் ஸ்மித்தை போல் அவனை அடித்திருப்பேன் " என்று வில் ஸ்மித்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவு செய்து இருந்தார்.
இப்பொழுது அதே சம்பவம் இவருக்கு நடக்கையில் அதை வேறு விதமாக கையாளுகிறார். இவரை அறைந்த பெண் காவலர் மீது புகாரளித்து, தீவிரவாதி, சீக்கியர்களே முரடர்கள் என பேசி வருகிறார். கங்கனாவின் பழைய இன்ஸ்டா பதிவை நெட்டிசன்கள் தற்போது பதிவிட்டு கமென்ட் செய்து வருகின்றனர்.
- ஓட்டுநரும் நடத்துனரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்க வில்லை.
- கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார்.
சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி ஒருவர் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட நபர் அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியே பேருந்து வந்துள்ளது. ஆனால் ஓட்டுநரும் நடத்துநரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் பேருந்தின் கதவின் அருகே தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் பயணித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததன் அடிப்படையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்.
- சண்டிகர் விமான நிலையத்தில் நான் மாட்டிக்கொண்டுள்ளேன்.
இந்தியாவில் சமீப காலமாக விமான சேவைகளின் தரம் குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. வெடிகுண்டு மிரட்டல்களால் விமான நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இதுபோன்ற விமர்சனங்கள் அந்நிறுவனங்களுக்கு மேலும் அவப்பெயரை உருவாகியுள்ளது.
அதுவும் பல குற்றச்சாட்டுக்கள் பிரபலங்களால் முன்வைக்கப்படுகிறது. தற்போது இண்டிகோ விமான சேவை குறித்து பாலிவுட் நடிகை ஷமிதா செட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்.

தற்போது தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட வீடியோவில் ஷமிதா பேசியதாவது,
ஜெய்ப்பூரில் இருந்து நிகழ்ச்சி ஒன்றுக்காக நான் சண்டிகாருக்கு இண்டிகோ விமானத்தில் வந்தடைந்தேன்.ஆனால் என்னுடையதும் எனது மேக் அப் ஸ்டைலிஸ்ட் உடைய பைகளை ஜெய்ப்பூரிலேயே எடை தொடர்பான பிரச்சனையால் என்னைக் கேட்காமலேயே விமானத்திலிருந்து இறக்கிவைத்திருக்கின்றனர்.
இப்போது ஜெய்ப்பூரில் இருந்து அடுத்த விமானம் சண்டிகாருக்கு வரும்போது அதில் எனது பைகளை அனுப்பி வைப்பதாக விமான ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே சண்டிகர் விமான நிலையத்தில் நான் மாட்டிக்கொண்டுள்ளேன். இந்த ஊழியர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. இண்டிகோ, உங்கள் விமானங்களில் பறப்பது என்பது மிகவும் s*** ஆன அனுபவம் ['IndiGo you're a pretty s*** airline to fly on!] என்று கடுமையான சாடியுள்ளார். இந்நிலையில் ஷமிதா செட்டியிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
- காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ வைரலானது.
- இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சண்டிகரில் ஓடும் காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கருப்பு நிற ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடித்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சண்டிகர் உட்பட வட இந்தியாவின் பல நகரங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த பின்பு காற்றின் தரம் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.
- சண்டிகரில் மேயர் தேர்தலில் 19 வாக்குகளை பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது.
- 17 வாக்குகள் மட்டுமே பெற்று ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.
சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகளை பெற்று பாஜக வெற்றி பெற்றுள்ளது. 17 வாக்குகள் மட்டுமே பெற்று ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.
ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதாவை தோற்க்கடித்து பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா சண்டிகர் மேயராக வெற்றி பெற்றுள்ளார்.
மேயர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்றத்தால் ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்ஸ்ரீ தாக்கூர் நியமிக்கப்பட்டிருந்தார்.
வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு பாஜக வென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி வெற்றி பெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என ஆடைகளை அணிந்து இருந்தனர்.
- மூவர்ணக் கொடி வடிவத்தில் நின்று கின்னஸ் சாதனை படைத்தனர்.
நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, சண்டிகர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சண்டிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5,885 மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து நின்று மனிதவடிவ பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கினர்.
இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தையொட்டி நடைபெற்ற இதில் பங்கேற்ற மாணவர்கள், காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என தனித் தனியே ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.
மனிதர்களை கொண்டு காற்றில் அசையும் தேசிய கொடியின் உருவம் அந்த மைதானத்தில் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு நிறுவனம் செய்த முந்தைய சாதனையை இந்த புதிய சாதனை முறியடித்தது.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
என்ஐடி அறக்கட்டளை மற்றும் சண்டிகர் பல்கலைக்கழகம் ஒன்றிணைத்து, தேசபக்தியின் உணர்வைக் கொண்டாடி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய விதம் முற்றிலும் பாராட்டுக்குரியது என ஆளுநர் புரோஹித் தெரிவித்துள்ளார்.