என் மலர்
நீங்கள் தேடியது "லுக் அவுட் நோட்டீஸ்"
- சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜான் ஜெபராஜ் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனார். ஜான் ஜெபராஜ் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அவர் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
பாலியல் புகாரில் சிக்கிய மதபோதகர் ஜான் ஜெபராஜ், எந்த பகுதியில் பதுங்கி உள்ளார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவர் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன் அந்த நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபர் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பிடிபட்டால் தகவல் தெரிவிக்க வேண்டிய போலீஸ் நிலைய எண், அதிகாரிகளின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனவே மதபோதகர் கண்டிப்பாக வெளிநாடு தப்பிச்செல்ல முடியாது. அத்துடன் அவரை விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
- பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .
இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இதனையடுத்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
- கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .
இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்.
இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் - இதுதான் மோடியின் உத்தரவாதம்!" என்று தெரிவித்துள்ளார்.
- லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதால் அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி போலீசார் ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே எஸ்.ஐ.டி. குழுவில் இடம்பெற்றுள்ள மைசூரு போலீஸ் சூப்பிரண்டு சீமாலட்கர் தலைமையிலான போலீசார் ஹோலே நரசிப்பூர் தாலுகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து படுவலஹிப்பே கிராமத்தில் உள்ள ரேவண்ணாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு இருந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை சேகரித்தனர்.
மேலும் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் கன்னிகடா மற்றும் கமேன ஹள்ளி அருகே உள்ள மற்ற 2 பண்ணை வீடுகளுக்கும் சென்று எஸ்.ஐ.டி. போலீசார் அங்கும் விசார ணை மேற்கொண்டனர். ஆபாச வீடியோவில் உள்ள இடமும், இதுவும் ஒன்றா என்றும் விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த ஊழியர்களிடம் சிலரின் போட்டோக்களை காட்டி எஸ்.ஐ.டி. போலீசார் இவர்களை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு ஊழியர்கள் இல்லை என்று பதில் அளித்தனர்.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரும், பிரஜ்வாலுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகார் செய்யலாம் என்றும், அவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிறப்பு குழுவினர் அறிவித்து உள்ளனர்.
- பலமுறை காவல்துறை வலியுறுத்தியும் நூபுர் சர்மா விசாரணைக்கு ஆஜராகவில்லை.
- அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் நூபுர் சர்மா மனு.
கொல்கத்தா:
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கட்சி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், நூபுர் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்களில் நூபுர் சர்மா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவருக்கு பலமுறை காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குற்ற வழக்கில் தேடப்படும் நபர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் சுற்றறிக்கை வெளியிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் நூபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக தம் மீது பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்கள், ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து மட்டும் 150-க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.
இந்த சிலைகளை முறைப்படி வாங்கியதாக ஏற்கனவே ரன்வீர் ஷா ஆதாரங்கள் சமர்ப்பித்து இருந்தாலும், அவை முறையாக இல்லாததால் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது ரன்வீர் ஷாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அளித்துள்ளது.
அனைத்து விமான நிலையங்களுக்கும் அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் மூலம், ரன்வீர் ஷா சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வது தடுக்கப்பட்டுள்ளது. #Idols #RanveerShah