என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே.வாசன்"

    • சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது சிறப்புக்குரியது.
    • வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் மனு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

    இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கம் பெற்றிருக்கும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பாக்கர் தாய் நாட்டிற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.

    இவர் ஏற்கனவே சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றிருப்பது சிறப்புக்குரியது.

    வீராங்கனையின் வெற்றிக்கு துணை நின்ற பெற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

    ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்திய நாட்டிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்திருக்கும் மனு பாகெர் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைப் படைத்துமென் மேலும் வளர, வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் உரிய பட்டு கைத்தறித் தொழில் நலிவடைந்து போகும்.
    • கைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விசைத்தறி தொழிலில் ஈடுபடுபவர்களால் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதையும், தரம் மிக்க அசல் வஸ்திரங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதாவது 1985 ரக ஒதுக்கீடு தடைச்சட்டத்தில் உள்ள கோட்பாடுகள் முறையாக சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு விசைத்தறியில் எந்தவித ஜரிகையும் பயன்படுத்தி சேலை நெசவு செய்யக்கூடாது என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் உரிய பட்டு கைத்தறித் தொழில் நலிவடைந்து போகும். இதனால் கைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர். இச்சூழலில் கைத்தறி தொழிலில் ஈடுபட நெசவு செய்யும் தொழிலாளர்கள் வரத் தயங்குகிறார்கள்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, கைத்தறி தொழிலைப் பாதுகாத்து, கைத்தறி நெசவாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் முன்னேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
    • எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உள்ளூர் தொழில் அமைப்பினருடன் ஜி.எஸ்.டி சம்பந்தமாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய தமிழ் நாடு ஒட்டல்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசனிடம், உண்மை நிலையை வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இது சம்பந்தமாக சமூக ஊடகத்தின் மூலமாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.

    உண்மை நிலை இப்படி இருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக எதிர்க்கட்சிகள் உண்மை சம்பவத்தை மறைத்து தவறான அறிக்கைகள் கொடுப்பதும், சமூக ஊடகங்களில் இந்த சம்பவத்தை தவறாக சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. இதன் மூலம் தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய நிதியமைச்சகத்துக்கும், தொழில் அமைப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்த முயற்சிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான்.

    எனவே ஜி.எஸ்.டி சம்பந்தமாக உள்ள நியாயமான கோரிக்கைகள் நிறைவேற அடித்தளமாக அமைந்த இந்த கூட்டத்தை அரசியல் கண்ணோட்டத்திற்காகப் புரிந்தும், புரியாமலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது நியாயமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம்.
    • மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

    தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி தமிழக முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணி வருகிற 15-ந்தேதி முடிவடையும். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறுகிறார்.

    1999-ம் ஆண்டு முதலே தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் மூப்பனார் தலைமையில் ஒரு அணி பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைந்த போது இந்த கருத்து வலுவாக அப்போது கூறப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிமை உள்ளது என்று கூறுவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எண்ணம்.

    அதே நேரத்தில் ஒரு இலக்கு இருக்க வேண்டும். என்னவென்றால் கூட்டணியோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்ற வேண்டும். இலக்கை நாம் சரியாக முறையாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயமாக வருங்காலத்தில் தொண்டர்கள், தலைவர்கள் நினைப்பது போல எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.

    முழு பூசணிக்காயை எந்த கட்சி வேண்டுமானாலும் சோற்றில் மறைக்க பார்க்கலாம். ஆனால் உண்மை நிலை இதுவாக தான் இருக்க முடியும். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நினைப்பது இந்த கால அரசியலில் எந்த கட்சி தொண்டர்கள் நினைத்தாலும் அது தவறு கிடையாது.

    மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் காலத்தில் இருந்து மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையை உறுதிப்பட எல்லா கூட்டங்களிலும் பேசிக்கொண்டு இருக்கின்றோம். படிப்படியாக தமிழகத்தில் மது ஒழிப்பு தேவை என்பதை வலியுறுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

    மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம் என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் தான். எனவே பல வழிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தி இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜய சீலன், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாநகர தலைவர் ரவிக் குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5 க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது.
    • வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேபோன்று மற்றொரு இந்திய வீரரான விதித் போட்டியில் டிரா செய்தார். இதன் மூலம் 11-வது பிரிவில் 3.5-05 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

    இதே போன்று, மகளிர் பிரிவில் அசர்பைஜான் அணியை 3.5 க்கு 0.5 என்ற கணக்கில் இந்தியா வெற்றியை பெற்றது. இதன் மூலம் மகளிர் பிரிவில் 19/ 22 போட்டி புள்ளிகளை கைப்பற்றி இந்திய மகளிர் அணியும் தங்க பதக்கத்தை வென்றது. இதே போன்று இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் திவ்யா மற்றும் வந்திகா ஆகியோர் தனி நபர் பிரிவில் தங்கத்தை கைப்பற்றினர். வரலாற்று சாதனைப் படைத்த தமிழக செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், ஆடு மாடு வாங்குவதற்கான கடன் வழங்கப்படும்.
    • விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் எவ்வித சமரசமும், காரணமும் இருக்கக்கூடாது.

    சென்னை:

    த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, விவசாயிகளுக்கு விவசாயக் கடனை முறையாக காலத்தே வழங்கி விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் துணை நிற்க வேண்டும். தமிழக அரசு மாநிலம் முழுவதும் விவசாயத்தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கு விவசாயக் கடனை வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

    விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், ஆடு மாடு வாங்குவதற்கான கடன் வழங்கப்படும். தள்ளுபடி செய்யப்படும் கடன்களுக்கு அரசு நிதிஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

    விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் எவ்வித சமரசமும், காரணமும் இருக்கக்கூடாது. விவசாயத்திற்கு தான் முதலில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயத் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. எனவே தமிழக அரசு விவசாயக் கடனுக்காக காத்திருக்கும் விவசாயிகள் பயிர் செய்யும் பரப்பளவிற்கு தாமதமின்றி காலத்தே கடன் வழங்க உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.
    • மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றி வருவது ஏற்புடையதல்ல. ஏற்கனவே தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த நிலையில், தற்போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.

    தமிழக அரசு பதிவுத் துறையின் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியதால் தற்போதைய பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்படும். முத்திரைத்தாள் கட்ட ணம் மூலமாக அரசாங்கம் வருவாயைப் பெருக்க நினைப்பதை விட மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம்.
    • பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தெரிவிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ கனமழையோ பெய்ய வாய்ப்புண்டு.

    கடந்த காலத்தில் மழை, கனமழை, அதி கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் அனுபவித்த சிரமங்கள், துன்பங்கள் ஏராளம்.

    குறிப்பாக விவசாய நிலங்கள் மழையால், புயல், வெள்ள நீரால் சேதமடைந்து, பயிர்கள் பாழாகி, விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தார்கள். மேலும் மக்களும் மழைக்கால நோயினால் பாதிக்கப்பட்டார்கள்.

    இப்படி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தமிழக அரசு, மழைக்காலத்தில் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகள் என மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்களை, விவசாயத்தை, கால்நடைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.
    • மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்து 11-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) நவம்பர் 28, 2014 ல் துவக்கப்பட்டு 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது.

    பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இயக்கத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்து வருவது இயக்கத்திற்கு பலம் சேர்க்கிறது.

    குறிப்பாக இயக்கத்தினர் இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப் பணிகள் மேற்கொண்டதும், இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.

    பொது மக்களின் அவசர, அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் பணிகள் செய்வதும், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் பெருமைக்குரியது. மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், எஸ்.சி.எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது

    இப்போது 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு காரணம் இயக்கத்தின் ஒவ்வொருவரின் கடின உழைப்பே. இந்நிலையில் த.மா.கா.வினர் தொடர்ந்து இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக உறுப்பினர் சேர்ப்பு பணியில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருவதும் பாராட்டுக்குரியது.

    ஒவ்வொருவருக்கும் பெருந்தலைவர், மக்கள் தலைவர் ஆசியோடு எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயக்கத்திற்கும், இயக்கத்தினருக்கும் வருங்காலம் வசந்தகாலமாக அமையும் என்ற உறுதியோடு உங்களில் ஒருவராக நானும் தொடர்ந்து கடினமாக உழைத்து வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்குவோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்கிறது. மகிழ்ச்சிக்குரியது.
    • அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ்சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குடியரசு தினத்தை முன்னிட்டு 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில் 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ என மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையில் சிறந்து விளங்கிய நல்லிக்குப்புசாமி செட்டியார், கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித் குமார், அவர்களுக்கும் மற்றும் நடனக் கலைஞர் ஷோபனா சந்திரகுமார் பத்ம பூஷண் விருதும், இலக்கியம்-கல்வி இதழியல் துறையில் சிறந்து விளங்கிய தினமலர் லட்சுமிபதி ராமசுப்பையர், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரான அஸ்வின் அவர்களுக்கும், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் அவர்களுக்கும் மற்றும் சமையல் கலை வல்லுனர் தாமோதரன் அவர்களுக்கும் பத்மஸ்ரீ விருது என தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்கிறது. மகிழ்ச்சிக்குரியது.

    அனைவரையும் தமிழ் மாநில காங்கிரஸ்சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ் மொழியை முதல் மொழி மூத்த மொழி என்று பெருமையாக கூறுகின்றோம்.
    • சமூக வலைதளங்களில் வரும் சர்ச்சைக்குரிய பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    மதுரை:

    மதுரை திருநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மொழியை முதல் மொழி மூத்த மொழி என்று பெருமையாக கூறுகின்றோம். அப்படி என்றால் உலக அளவில் தமிழ் மொழியை பரப்புவது நமது கடமையாகும். ஆனால் தமிழகத்தில் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை உயர்த்திக் கொள்ள விருப்பப்பட்ட 3-வது மொழியை படிப்பதற்கு அரசே தடையாக இருந்தால் நமது செம்மொழி தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் படிக்க அவர்கள் எப்படி முன் வருவார்கள்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கி விட்டது. நேற்று சென்னையில் முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதேபோல தமிழகம் எங்கும் கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

    கூட்டம் முடிந்தவுடன் எங்கெங்கு தொய்வாக உள்ளதோ? அங்கு வலு சேர்க்கும் முயற்சி எடுக்க உள்ளோம். அதையடுத்து கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்.

    சமூக வலைதளங்களில் வரும் சர்ச்சைக்குரிய பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இதனை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் என்பது ஒரு வரலாறு அவரது ஆட்சியை யாரும் மறைக்கவும் முடியாது. திரும்பக் கொண்டு வரவும் முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
    • 5 விசைப்படகுகளை ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்று வழக்கம்போல் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 பேரையும் கைது செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் பயன்படுத்திய 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவக்குடும்பங்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். காரணம் வருமானம் ஈட்ட முடியாமல், வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 32 பேரை விடுவிக்கவும், அவர்களின் 5 விசைப்படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×