search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்விட்டர்"

    • மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது.
    • பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவின் மற்ற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

    அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியது. உலக அளவிலும் சொற்ப தலைவர்களுக்கே இந்த அளவிலான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

     

    பிரதமர் மோடி, கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ்[ட்விட்டர்] தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் உரிமையாளர் எலான் மஸ்க் மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    மஸ்க் தனது எக்ஸ் பதிவில், உலகில் அதிகம்  பின்தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு மோடியை எக்ஸ் [ட்விட்டர்] தளத்தில் பின்தொடரும் கணக்குகளில் 60 சதவீதம் போலியானவை என்று சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும்

    அமெரிக்காவைச் சேர்ந்த  உலக பணக்காரரும் முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமீபத்தில் அவர் சொந்தமாக்கிக்கொண்ட சமூக வலைதளமான எக்ஸ் [ட்விட்டர்] ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த பேட்டியில் தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

     

    கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு சட்டத்தின்படி, பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் பாலினம் மற்றும் பெயரை பள்ளித் தரவுகளில் மாற்றினால் அதை ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது LGBTQ+ மாணவர்களுக்கான தனியுரிமையாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்தாலும், இதற்கு முன்பு சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும்  பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக மஸ்க் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் [HAWTHRONE] பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் இந்த ராக்கெட் சோதனை  தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் மாகாணங்கள் சுயாட்சி பெற்று இயங்கிவருவது  குறிப்பிடத்தக்கது.

     

    • பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
    • மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    பேஸ்புக், வாட்சப், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலிதளங்களை நிர்வகிக்கும் மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் மற்றும் எக்ஸ் [ட்விட்டர்]  உரிமையாளரும் ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

     

    இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தின்போது, கோட் சூட் அணிந்தவாறு ஒரு கையில் அமெரிக்க கோடியை ஏந்தியவாறும், மறு கையில் பீர் குவளையை பிடித்தவாரும் மார்க் கடலில் யாட்ச்சில் சர்ஃபிங் செய்து விடுமுறையை கொண்டாடும் வீடியோவை இன்ஸ்ட்டாகிராமில் பகிரவே அது  இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் மார்க்கை கலாய்த்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் யாட்ச்களில் பொழுதைப்போக்கி கொண்டாட்டங்களில் ஈடுபடட்டும்.அதைவிட நான் வேலை செய்யவே விரும்புகிறேன். I prefer to work என்று தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கைபடி  பணக்காரர் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்கைவிட எலான் மஸ்க் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • ட்விட்டர் புளூ பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை வழங்கி வெரிஃபை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
    • தற்போதுள்ள புளூ செக்மார்க்குகள் அடுத்த சில மாதங்களில் படிப்படியாக நீக்கப்பட்டு விடும் என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.

    இந்திய பயனர்களுக்கான ட்விட்டர் புளூ சந்தா விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டரான முகுல் ஷர்மா ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டு இருக்கிறார். எனினும், இதுபற்றி ட்விட்டர் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சிறு இடைவெளிக்கு பின் ட்விட்டர் புளூ மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ட்விட்டர் புளூ இந்திய விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

    ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சந்தாவுக்கான கட்டணம் ரூ. 999 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த சேவைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ சந்தாவின் விலை அதிகமாக இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    சர்வதேச சந்தையில் ட்விட்டர் புளூ ஐஒஎஸ் விலையை ஒப்பிடும் போது இந்திய விலை சற்று அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. இந்தியா தவிர தற்போது ட்விட்டர் புளூ சேவை வெளியிடப்பட்டு இருக்கும் நாடுகளில் ஐஒஎஸ் பயனர்கள் மாத சந்தாவாக 11 டாலர்கள் செலுத்த வேண்டும். ட்விட்டர் வெப் பயனர்கள் மாதம் 7 டாலர்கள் வரை சந்தாவாக செலுத்த வேண்டும் என தெரிகிறது. எனினும், இது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ட்விட்டர் புளூ சந்தாவில் பயனர்களுக்கு, ட்விட்களை எடிட் செய்யும் வசதி, 1080 பிக்சல் தரத்தில் வீடியோ அப்லோடு செய்யும் வசதி, ரீடர் மோட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி ட்விட்டர் வெரிஃபிகேஷன் செக்மார்க்குகள் புது நிறங்களில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி வியாபாரங்கள் மற்றும் கோ-ஆபரேஷன்களுக்கு கோல்டு நிறமும், அரசு, சர்வதேச அக்கவுண்ட்களுக்கு கிரே நிறமும் வழங்கப்படுகிறது.

    முதற்கட்டமாக ட்விட்டர் புளூ சந்தா அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்குவது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

    • ட்விட்டரில் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் அளவை எலான் மஸ்க் விரைவில் மாற்றுகிறார்.
    • முன்னதாக ட்விட்களின் அளவு 140 எழுத்துக்களாக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டரில் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் அளவு 280-இல் இருந்து 4 ஆயிரமாக அதிகரிக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். ட்விட்டரில், ட்விட் செய்வதற்கான அளவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்து இருந்தார். அதில், ஆம் என்று குறிப்பிட்டு இருந்தார். 2017 வாக்கில் ட்விட் அளவை 280 ஆக அதிகரிக்கும் முன் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக ட்விட்டரில், ட்விட் செய்ய 140 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும். பின் 2018, நவம்பர் 8 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 280 ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த சுமார் 1.5 பில்லியன் அக்கவுண்ட்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எலான் மஸ்க் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

    இவைதவிர ட்விட்டர் புளூ சேவையை மீண்டும் வெளியிடும் பணிகளில் ட்விட்டர் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டர் புளூ மூலம் பயனர்கள் புளூ செக்மார்க் பெற முடியும். எனினும், இம்முறை ட்விட்டர் புளூ சேவைக்கான கட்டணம் ஐஒஎஸ் தளத்தில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஐஒஎஸ் பயனர்களுக்கு ட்விட்டர் புளூ கட்டணம் 11 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வலைதளத்தில் ட்விட்டர் புளூ சேவையில் இணையும் போது பயனர்கள் 8 டாலர்களை கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆப்பிள் நிறுவனம் அறிவித்த 30 சதவீத கமிஷன் தொகையை கருத்தில் கொண்டு ட்விட்டர் விலை உயர்வை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மேலும் பல ஆயிரம் பேர் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க், தனது சமூக வலைதளத்தில் புதிதாக இணைவோர் (சைன்-அப்) எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். நவம்பர் 16 ஆம் தேதியில் இருந்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் தினந்தோரும் சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் சைன் அப் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    இது கடந்த ஆண்டு இதே வாரத்துடன் ஒப்பிடும் போது 66 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் பயனர் தளத்தில் செலவிடும் நேரம் வரலாறு காணாத வகையில் அதிகரித்து இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஏழு நாட்களில் பயனர் தளத்தில் செலவிடும் நேரம் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 8 பில்லியன் நிமிடங்கள் ஆகும். இது கடந்த ஆண்டு இதே வாரத்தை விட 30 சதவீதம் அதிகம் ஆகும்.

    ட்விட்டரில் இருந்து வந்த வேற்றுமை கருத்துக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட இந்த ஆண்டு நவம்பர் மாதம் பெருமளவு சரிவடைந்து இருக்கிறது. ட்விட்டரை வாங்குவதன் மூலம், தனது நீண்ட நாள் கனவு- எல்லாவற்றுக்குமான செயலியான X உருவாக்கும் இலக்கை வேகப்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

    எலான் மஸ்கின் "ட்விட்டர் 2.0 தி எவ்ரிதிங் ஆப்" என்க்ரிப்ட் செய்யப்பட்ட டைரக்ட் மெசேஜ்கள், நீண்ட வடிவம் கொண்ட ட்விட்கள் மற்றும் பேமண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ட்விட்டர் மாதாந்திர பயனர் எண்ணிக்கை பில்லியனை தாண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

    • ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த சில வாரங்களாக ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
    • எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அந்நிறுவனம் பற்றிய தகவல்கள் வைரலாகி வருகின்றன. நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களில் பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுதவிர ட்விட்டர் புளூ சந்தா, புளூ டிக் விவகாரம் என ஏராளமான புது மாற்றங்கள் ட்விட்டரில் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்த நிலையில், ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதிதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ்-இல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் வெளியானதில் இருந்தே, புதிய பாதுகாப்பு அம்சம் ட்விட்டர் தளத்தை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை விட பாதுகாப்பானதாக மாற்றுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

    ட்விட்டர் மெசேஜஸ்-இல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை செயல்படுத்தும் விவரங்களை ஆப் ஆய்வாளர் ஜான் மன்குன் வொங் கண்டறிந்துள்ளார். மேலும் இந்த தகவல்களை அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதில், "ட்விட்டர் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்குவதற்காக புது அம்சம் உருவாக்கப்படும் அறிகுறிகளை பார்க்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

    இவரது ட்விட்டர் பதிவுடன், குறியீட்டு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவதை உணர்த்துகிறது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இவரது பதிவுக்கு எலான் மஸ்க் கண் சிமிட்டும் எமோஜியை பதிலாக அளித்து இருக்கிறார். இவரது பதிலில் இருந்தே ட்விட்டர் மெசேஜஸ்-இல் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியை வழங்குவதன் மூலம் ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சம் சிக்னல் மற்றும் வாட்ஸ்அப்-க்கு இணையாக பார்க்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சம் சரியான தருணத்தில் கொண்டுவரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதி பயனர் அனுப்பும் குறுந்தகவல்களை யாரும் பார்க்க முடியாத வகையில் பாதுகாப்பானதாக மாற்றும்.

    • எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்லாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • மேலும் ட்விட்டர் தளத்தில் ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் எலான் மஸ்க் தனது ஊழியர்கள் தன்னை கேள்வி எழுப்புவதை விரும்பவில்லை என்பது வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏராளமானோர் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், பொறியாளராக பணியாற்றி எரிக் ஃபிரான்ஹோஃபர்-ஐ மட்டும் எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் வைத்து பணிநீக்கம் செய்து இருக்கிறார்.

    பொது வெளியில் எலான் மஸ்க்-இடம் வாக்குவாதம் செய்த காரணத்தால் எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். ட்விட்டரில் வாக்குவாதம் செய்த எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, எலான் மஸ்க் ட்விட்டரிலேயே தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆனது. பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட்-ஐ அவர் அழித்து விட்டார்.

    "பெரும்பாலான நாடுகளில் ட்விட்டர் மிக மோசமாக செயல்படுவதற்கு மன்னிக்கவும். செயலி மிக மோசமாக பேட்ச் செய்யப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட RPC-க்களால் ஹோம் டைம்லைனை ரெண்டர் செய்ய இயலவில்லை" என எலான் மஸ்க் ட்விட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த எரிக், "நான் ஆறு ஆண்டுகளாக ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பணியாற்றி வருகிறேன், இது பொய் என்பதை என்னால் கூற முடியும்." என பதில் அளித்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மற்றும் எரிக் இடையே ட்விட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இடையே பொது மக்களும் எலான் மஸ்க் உடன் இணைந்து எரிக் பொது வெளியில் வாக்குவாதம் செய்வது தவறு என கருத்து தெரிவித்தனர். இது தொடர்பான வாக்குவாதத்தில் எலான் மஸ்க் அளித்த பதில் ஒன்றில் எரிக் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

    தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எலான் மஸ்க் பதிவிட்ட ட்விட் மூலம் அறிந்து கொண்ட எரிக், அதற்கு சல்யுட் அடிக்கும் எமோஜியை பதிலாக பதிவிட்டார். 41 வயதான எரிக் கடந்த எட்டு ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின் இது பற்றி ஃபோர்ப்ஸ்-க்கு எரிக் பேட்டி அளித்து இருக்கிறார். அதில், "எனது லேப்டாப் ஷட் ஆஃப் ஆகி விட்டது தற்போது, அதனை என்னால் இயக்க முடியவில்லை." என்று தெரிவித்து இருக்கிறார்.

    "நிறுவனத்திற்குள் யாரும் யாரையும் நம்புவதில்லை. எப்படி உங்களால் செயலாற்ற முடியும்? ஊழியர்கள் புதிய நிர்வாகத்தை நம்பவில்லை. நிர்வாகமும் ஊழியர்களை நம்பவில்லை. இந்த சூழலில் எப்படி வேலை பார்க்க முடியும்? இதன் காரணமாக தான் ப்ரோடக்‌ஷன் தடைபடுகிறது, துணை தலைவர்களின் அனுமதி இன்றி பணியை மேற்கொள்ள முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    • எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து அந்நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
    • முன்னதாக ட்விட்டர் புளூ சந்தாவுடன் எவ்வித வெரிபிகேஷன் இன்றி புளூ டிக் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான் மஸ்க் கடந்த வாரம் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். பணி நீக்கம் பற்றிய முழு விவரங்களை ட்விட்டர் இதுவரை வெளியிடவில்லை.

    இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்களில் பலரை பணிநீக்கம் செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட பணிநீக்க நடவடிக்கையில் 4 ஆயிரத்து 400-இல் இருந்து அதிகபட்சம் 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என கூறப்படுகிறது.

    இம்முறை பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த விதமான தகவலோ அல்லது அறிவிப்போ முன்கூட்டியே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களில் பலர் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் செய்வதற்கு முன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அலுவல்பூர்வ மின்னஞ்சல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    ட்விட்டரில் ஊழியர்களை பணியமர்த்த ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனத்திற்கும் பணிநீக்கம் தொடர்பான மின்னஞ்சல் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடைசி நேரத்தில் அனுப்பப்பட்டதாக கூறுப்படுகிறது. இதோடு பணிநீக்கம் ட்விட்டர் நிறுவனத்தின் "சேமிப்பு மற்றும் மறுமதிப்பீடு" நடவடிக்கையின் அங்கமாக நடத்தப்பட்டதாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் கடைசி பணி நாள் நவம்பர் 14 என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உலகம் முழுக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் தான் பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
    • பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை இந்திய சிஇஒ ஒருவர் வெளியிட்டு உள்ளார்.

    உலகம் முழுக்க பெரும்பாலான நிறுவனங்களில் பணி நீக்கம், ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் அதன் செலவீனங்களை குறைப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதே போன்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

    முன்னணி நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டோர், புதிய வேலையை தேடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் H1B விசா வைத்திருப்பவர்கள் நிலைமை சற்று கடினமாகி இருக்கிறது. ஏனெனில், பணிநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து சரியாக 60 நாட்களில் வேறு நிறுவனத்தில் அவர்கள் பணியில் சேர வேண்டும்.

    இவ்வாறு பணியில் சேராத பட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவர். இது போன்ற இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு டிரீம்11 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ஜெயின், இந்தியர்கள் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பெற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவர் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையாக பணி வாய்ப்பு வழங்கி வருகிறார். மேலும் தனது நிறுவனம் சிறந்த திறமைசாலிகள், டிசைன், பிராடக்ட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் தலைமை பிரிவுகளில் நல்ல அனுபவம் மிக்கவர்களை தேடி வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இதோடு தனது நிறுவனம் பணி உத்தரவாதம் அளிக்கும் வகையில் நல்ல நிதி நிலைமை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    "2022 ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 52 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியர்கள் மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு திரும்ப நினைவூட்டும் செய்தியை பரப்புங்கள். இவ்வாறு செய்யும் போது இந்திய தொழில்நுட்பங்கள் அடுத்த தசாப்தத்தில் அதிகளவு வளர்ச்சியடையும் என்பதை உணர செய்ய முடியும்," என ஹர்ஷ் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

    • ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பெருமளவு மாற்றங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மேலும் ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும் முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் அமலுக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமின்றி புதிய ட்விட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. தற்போது புதிய புளூ சந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்டமாக ட்விட்டர் புளூ சந்தாவுக்கான விலை மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது அறிமுக சலுகை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஐஒஎஸ்-இல் ஏற்கனவே ட்விட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்கள் புதிய விலைக்கு அப்டேட் செய்து கொண்டால் புளூ செக்மார்க் வழங்கப்படும்.

    ஆண்ட்ராய்டு மற்றும் வெப் பயனர்களின் புளூ சந்தாவை அவர்களாகவே ரத்து செய்து கொள்ளலாம். மாறாக ட்விட்டர் தரப்பில் பயனர்களுக்கு தகவல் கொடுத்த பின் சேவை ரத்து செய்யப்படும். புது மாற்றங்களின் பழைய ட்விட்டர் விதிகளின் கீழ் வெரிபைடு புளூ செக்மார்க் பெற்றவர்கள் மற்றும் புதிய புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்றவர்கள் என இரண்டு புளூ செக்மார்க்குகள் உள்ளன.

    ட்விட்டர் புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் பெற்ற அக்கவுண்ட்களில், புதிய ட்விட்டர் விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது போன்று எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் தளத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
    • முன்னதாக உலக நாடுகளில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    எலான் மஸ்க்-இன் சமூக வலைதளமான ட்விட்டர், சில வெரிபைடு அக்கவுண்ட்களுக்கு "Official" லேபல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அடங்கும். இந்த வழிமுறை புதிய 8 டாலர்கள் சந்தா முறை அமலுக்கு வரும் போது பயன்பாட்டுக்கு வரும். ட்விட்டரில் எட்டு டாலர்கள் சந்தா முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ட்விட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் பிரிவு அதிகாரி எஸ்தர் கிராஃபோர்டு ட்விட்டர் புளூ சந்தா முறையில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி புதிய ட்விட்டர் புளூ சந்தா முறை பயனர்களுக்கு வெரிபைடு புளூ டிக் வழங்கும். இவ்வாறு வழங்கும் போது எந்த விதமான சோதனையும் மேற்கொள்ளப்படாது. இந்த வழிமுறைக்கு பலரும் எதிர்ப்பு மற்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

    முன்னதாக வெரிபை செய்யப்பட்டு புளூ டிக் பெற்று இருக்கும் அக்கவுண்ட்களுக்கு புதிய "Official" லேபெல் வழங்கப்படாது. எனினும், இதனை பணம் கொடுத்து வாங்கிட முடியாது. இந்த லேபெல் முதன்மையாக அரசாங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், வியாபாரங்கள், முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் சில பொது நபர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்பட இருக்கிறது. 

    ×