என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி பாலியல் வன்கொடுமை"
- கைதான இருவருக்கும் ஜனவரி 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
- இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அ.தி.மு.க. வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் வழக்கை சரியாக விசாரிக்காத மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
இதனிடையே, எழும்பூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதான இருவருக்கும் ஜனவரி 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 103-வது வட்ட செயலாளர் சுதாகர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
- சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைப்பு.
- சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.
சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசியுள்ளார்.
16 வயது சிறுவனின் முகத்தில் சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் பேச்சால் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
- மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார்.
- கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?
3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை நியாயப்படுத்தும் வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அவருக்கு, பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம்.
விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேரும் சிறையில் இருந்து போலீஸ் வேன் மூலம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
- நீதிபதி எம்.ராஜலட்சுமி திடீரென விடுப்பு எடுத்ததன் காரணமாக நேற்று அவர் கோர்ட்டுக்கு வரவில்லை.
சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது உறவினர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாயார் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர்கள், சிறுமியை சீரழித்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு, இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்பட 21 பேரும் குற்றவாளிகள் என கடந்த 15-ந் தேதி அறிவித்தது.
மேலும் இவர்களுக்கான தண்டனை விவரம் 19-ந் தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக நேற்று அந்த வழக்கு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் பட்டியலிடப்பட்டது.
இதற்காக இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேரும் சிறையில் இருந்து போலீஸ் வேன் மூலம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆனால் நீதிபதி எம்.ராஜலட்சுமி திடீரென விடுப்பு எடுத்ததன் காரணமாக நேற்று அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 21 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.