என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேதி"

    • காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா அமேதி தொகுதியில் 1990-ல் போட்டியிட்டார். பின்னர் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார்.
    • அதே சூழ்நிலை ஏற்பட்டால் தானும் அமேதி தொகுதியில் இருந்து மாறுவேன் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    அமேதி தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தமுறை சோனியா காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அமேதி தொகுதில் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, விசுவாசமான கிஷோரி லால் சர்மா நிறுத்தப்பட்டுள்ளார்.

    காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை என்ற முடிவின் மூலம் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது என பா.ஜனதாவின் கிண்டல் செய்தனர். மேலும் பயந்து ஓடிவிட்டார் என விமர்சனம் செய்திருந்தது.

    இந்த நிலையில், பா.ஜனதாவின் ஆணவம் அடித்து நொறுக்கப்படும். அமேதி தொகுதியில் என்னுடைய வெற்றி, காந்தி குடும்பத்தின் வெற்றியாக இருக்கும் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    பிடிஐ நிறுவத்திற்கு பேட்டியளித்த அவர் அமேதி தொகுதி குறித்து கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மா அமேதி தொகுதியில் 1990-ல் போட்டியிட்டார். பின்னர் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறினார். அதே சூழ்நிலை ஏற்பட்டால் தானும் அமேதி தொகுதியில் இருந்து மாறுவேன் என கே.எல். சர்மா தெரிவித்துள்ளார்.

    சதீஷ் சர்மா 1991 மற்றும் 1996-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998-ல் தோல்வியடைந்த நிலையில், ராகுல் காந்திக்காக ரேபரேலி தொகுதிக்கு மாறினார். சோனியா காந்தி 1999-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சரண் அடைந்து விட்டதாக பா.ஜனதா கூறுவது அவர்களின் ஆணவத்தை காட்டுகிறது. அதற்கு மே 20-ந்தேதி மக்கள் பதில் அளிப்பார்கள். முடிவு ஜூன் 4-ந்தேதி தெரியவரும்.

    ஆங்கிலேயர்களின் காலத்தில் காந்தி குடும்பத்தினர் ஓடிப்போனதில்லை, இப்போதும் ஓடிப்போனதில்லை, எதிர்காலத்திலும் அப்படி ஓடிப்போக மாட்டார்கள். மற்றவர்களை ஓட வைப்போம். ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக ஓடுவதை உறுதி செய்து வருகிறார்.

    இவ்வாறு கிஷோரி லால் சர்மா தெரிவித்துள்ளார்.

    • ராகுல் காந்தியை தோற்கடிப்பதே தனது ஒரே நோக்கமாக ஸ்மிரிதி இரானி கொண்டுள்ளார்.
    • உங்கள் எம்.பி. மற்றும் பாஜக-வினர் தேர்தல் நேரத்தில் வருவார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, பா.ஜனதா கடவுளின் பெயரில் வாக்கு கேட்பதாக குற்றம் சாட்டினார்.

    அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவை ஆதரித்து பல தெருமுனை கூட்டங்களில் (நுக்கட் சபா- nukkad sabhas) பேசிய பிரியங்கா காந்தி இது தொடர்பாக கூறியதாவது:-

    கடந்த 70 ஆண்டுகளில் செய்யாத பணிகளை தனது அரசாங்கம் 10 ஆண்டுகளில் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் கூறுகிறார். கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

    ராகுல் காந்தியை தோற்கடிப்பதே தனது ஒரே நோக்கமாக ஸ்மிரிதி இரானி கொண்டுள்ளார். உங்கள் எம்.பி. மற்றும் பாஜக-வினர் தேர்தல் நேரத்தில் வருவார்கள். ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, விவசாயத்தை மேம்படுத்துவது, உங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது போன்றவற்றை பேசாமல், உங்கள் வீடுகளுக்கு வந்து, கடவுளின் பெயரால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகின்றனர். இதை அவர்கள் செய்யவில்லையா?. அவர்கள் உங்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்கள் 10 வருடங்களில் செய்த வேலையின் பெயரில் ஏன் வாக்குகள் கேட்கவில்லை?.

    நாங்களும் மதங்களை கொண்டுள்ளோம். நாம் அனைவருக்கும் கடவுள் மற்றும் மதம் மிகவும் பிரியமானது. ஆனால் அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்துவது தவறு.

    இங்குள்ள அரசியலின் பாரம்பரியம் என்பது மக்களுக்கு சேவை செய்வதே. அதை தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்றுகின்றனர். அந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. எனவே நீங்கள் எப்போதும் எங்களை ஆதரித்து எங்களை பலப்படுத்துகிறீர்கள். ஒருவரையொருவர் பலப்படுத்தும் வகையில் உறவு இருந்தது.

    ஆனால்... என் சகோதரர் தோற்கடிக்கப்பட்டார், அவர்கள் எங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் சிலரை தவறாக வழி நடத்துவதில் வெற்றி பெற்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளில், அவர்களின் புதிய வகையான அரசியலை நீங்கள் பார்த்தீர்கள், அதாவது இந்த பகுதியில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை.

    நான் எங்கு சென்றாலும் மக்களுக்கு வேலை கிடைத்ததா? அல்லது விவசாயிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதா? என்று மக்களிடம் கேட்கிறேன். எந்த வேலையும் களத்தில் காணப்படவில்லை. ஆனால், தொலைக்காட்சியில் கடந்த 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, 10 ஆண்டுகளில் மோடி ஜி செய்துள்ளதை பார்க்கலாம்.

    நீங்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றால், யாருடைய வாழ்க்கை மேம்பட்டது? 10 ஆண்டுகளில், பெரிய முதலாளிகளின் நிலை மேம்பட்டது மற்றும் அவர்களின் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன, ஆனால் விவசாயிகளுக்கு அல்ல.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    • அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு இது மூன்றாவது தேர்தல் ஆகும்.
    • ஸ்மிருதி இரானி அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார்.

    நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிருதி இரானி தற்போது ஜவுளித்துறை மந்திரியாக உள்ளார். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தையும் வைத்திருக்கிறார்.

    2003-ல், இரானி பாஜ.க.வில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, அவர் 2004-ல் மகாராஷ்டிர இளைஞர் பிரிவில் துணைத் தலை வராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் போது, அவர் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் வெற்றிபெறவில்லை.

    2004 டிசம்பரில், பா.ஜனதாவின் தேர்தல் தோல்விக்கு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கூறிய இரானி, அவர் ராஜினாமா செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மிரட்டினார். இருப்பினும், பா.ஜ.க.வின் மத்திய தலைமையின் சாத்தியமான நடவடிக்கை யின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை வாபஸ் பெற்றார்.

    கட்சிக்கு இரானி செய்த பங்களிப்புகள் அவரை பா.ஜ.க.வின் மத்திய குழுவின் செயற்குழு உறுப்பினராக நியமிக்க வழிவகுத்தது. 2009-ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலின்போது தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

    2010-ம் ஆண்டின் தொடக்கத்தில், இரானி பா.ஜ.க.வின் தேசிய செயலா ளராக நியமிக்கப்பட்டார், மேலும் ஜூன் 24 அன்று, பா.ஜ.க.வின் மகளிர் பிரிவான பா.ஜ.க. மகிளா மோர்ச்சாவின் அகில இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    2011-ல், இரானி பாராளு மன்றத்தில் அறிமுகமானார், குஜராத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மேல்சபை எம்.பி. ஆக பதவியேற்றார்.

    2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், ராகுல் காந்தியை எதிர்த்து உத்தரப்பிர தேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் இரானி போட்டியிட்டார். துரதிர்ஷ்ட வசமாக, அவர் ராகுலிடம் 107,923 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    என்றாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரி சபையில் மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை நியமித்தார்.

    மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக இரானி பதவி வகித்த காலத்தில், பல்கலைக்கழகங்களில் சீர்திருத்தங்களைத் தொடங்கினார்.

    2016-ல், ஆறு கூடுதல் பல்க லைக்கழகங்களில் புதிய யோகா துறைகளை நிறுவுவதாக அறிவித்தார்.

    2016-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தில், இரானி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டார்.

    2017-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் வெங்கையா நாயுடு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

    2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், இரானி அமேதியில் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார், ராகுல் காந்தியை தோற்கடித்தார்.

    தற்போது மீண்டும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை பா.ஜ.க. மேலிடம் களம் இறங்கி உள்ளது.

    இந்த நிலையில் அவர் அமேதி தொகுதியில் குடும்ப உறவுகளை ஏற்படுத்துவதாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, அமேதி தொகுதியில் வாக்காளராக மாறியுள்ளார்.

    அமேதி தொகுதியில் உள்ள கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மேடன் மாவாய் கிராமத்தில் தனக்கென ஒரு வீட்டைப் பெற்று வாக்காளராக விண்ணப்பித்தார். அவர் இப்போது கிராமத்தின் வாக்காளராக மாறியுள்ளார்.

    ஸ்மிருதி இரானி அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார். அமேதி குடும்பத்தின் மத்தியில் வாழ்வதற்காக அவர் தனது குடியிருப்பை இங்கு கட்டியுள்ளதாக கூறியுள்ளார்கள்.

    அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட்டு இருந்தால் ஏற்பட்டிருக்கும் களத்தின் விறுவிறுப்பு, தற்போது போட்டியில்லை என்பதால் ஏமாற்றம் அளிக்கிறது.

    அதே நேரத்தில், இந்த முறை போட்டி ஒரு புதிய முனையைக் கொண்டுள்ளது: "பியூன்" என்று அழைக்கப்படுபவருக்கும் ஒரு மத்திய மந்திரியும் இடையிலான யுத்தம்.

    இங்கு காந்தியின் தேர்தல் பிரசாரங்களை 40 ஆண்டுகளாக நிர்வகித்து, பா.ஜ.க.வால் "பியூன்" என்று அழைக்கப்பட்ட முகம் தெரியாத காங்கிரஸ் தேர்தல் மேலாளர் கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். மறுபுறம், ஸ்மிருதி இரானி தன்னைப் போராடி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த மந்திரியாக காணப்படுகிறார், அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    சர்மாவின் காந்தி குடும்ப பக்தி அவரது வலிமையான மற்றும் பலவீனமான புள்ளிகள் என்றால், பா.ஜ.க தொண்டர்கள் ஸ்மிருதி இரானியின் செல்வாக்கு மற்றும் அது அவர்களுக்கு எவ்வாறு பலனளிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு இது மூன்றாவது தேர்தல் ஆகும், 2014 இல் ராகுலிடம் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 2019-ல் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அமேதியில் தான் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை மட்டுமே ஸ்மிருதி இரானி ஏற்படுத்தி வருகிறார். உண்மையில் ஸ்மிருதி இரானிக்கு எதிரான சில அதிருப்தியை அமேதியில் காண முடிகிறது.

    காங்கிரஸ் தனது பிரச்சாரத்தில், அமேதியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கப்பட்டு பா.ஜ.க. ஆட்சியின் கீழ் தடுக்கப்பட்ட திட்டங்களை மேற்கோள் காட்டுகிறது, டிரிபிள் ஐ.ஐ.டி 2016-ல் மூடப்பட்டு பிரயாக்ராஜுக்கு மாற்றப் பட்டது. மெகா புட் பார்க்' மற்றும் ஒரு காகித ஆலை, ஒருபோதும் வெளிச் சத்தைக் காணவில்லை. "பழிவாங்கும் அரசியல்" என்று கூறி, ராஜீவ் காந்தி காலத்தில் வந்த பி.ஹெச்.இ.எல், எச்.ஏ.எல், ஆர்டினன்ஸ் பேக்டரி, சிமென்ட் ஆலை போன்ற திட்டங்களை வாக்காளர்களிடம் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

    அமேதியில் புதிய கோகோ கோலா பாட்டில் ஆலை பற்றி ஸ்மிருதி இரானி பேசுகிறார், மேலும் காந்தி குடும்பம் 50 ஆண்டுகள் தொகுதியில் இருந்தபோதிலும், தனக்கு 5 ஆண்டுகள் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்டு, மேலும் ஆதரவு தேடுகிறார். இப்போது அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு சொந்தமாக வீடு உள்ளது என்பதை அவரும் பா.ஜ.க.வினரும் குறிப்பிடுகின்றனர். மற்றும் விரைவில் பிரதமர் மோடி அமேதியில் திட்டமிடப்பட்ட பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    மறுபுறம், காங்கிரசின் அமேதி மற்றும் ரேபரேலி (ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி) பிரச்சாரங்களை பிரியங்கா பொறுப்பேற்றுள்ளார். பிரியங்கா ஏற்கனவே சர்மாவுடன் அமேதியில் 15க்கும் மேற்பட்ட "தெருமுனை சந்திப்புகளை செய்திருப்பதால், அவரது நுழைவு காங்கிரஸ் பிரசாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    அமேதியுடன் தனது குடும்பத்தின் பழைய தொடர்பை பிரியங்கா தொடர்ந்து வலியுறுத்துகிறார். ராஜீவ் காந்தியால் அமேதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மாவுக்கு தொகுதியின் ஒவ்வொரு பாதையும் தெரியும் என்கிறார் பிரியங்கா.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்மிருதி இரானியும் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார். அவர் வெற்றி உறுதி என்று பா.ஜ.க. நம்புகிறது. அவர் எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவை விட இந்தியா கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை தோற்கடித்த பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லாலிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளார்.

    கிஷோரி லால் 5,39,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானியை அவர் தோற்கடித்துள்ளார்.

    • அமேதி தொகுதியில் கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி.
    • காங்கிரஸ் கட்சியினரை பெருமைப்பட வைத்திருக்கிறது.

    டெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போதைய மக்களவை தேர்தலை போன்று, கடந்தமுறை (2019) நடந்த தேர்தலிலும் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    கடந்தமுறை அவர் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திரபிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொகுகளில் நின்றார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஸ்மிருதிரானி தோற்கடித்தார்.

    காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல்காந்தி தோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் ராகுல்காந்தி கடந்தமுறை தோல்வியை தழுவிய அமேதியில் போட்டியிடவில்லை.

    அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிஷோரிலால் சர்மா களமிறக்கப்பட்டார். அந்த தொகுதியில் இந்த முறையும் பாரதிய ஜனதா கட்சி சாரபில் ஸ்மிருதி ரானியே போட்டியிட்டார்.

    கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை தோற்கடித்த அவரை, இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் ஈடுபட்டனர்.

    அதற்கு தகுந்தாற்போல் தேர்தல் பிரசாரத்துக்கு பிரியங்கா காந்தி தலைமை தாங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டினர். மேலும் சமாஜ்வாடி கட்சியினரும் பிரசாரத்தில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ரானியை 1½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    கடந்த முறை தேர்தலில் ராகுல்காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி ரானியை, தற்போது தோற்கடித்திருப்பது காங்கிரஸ் கட்சியினரை பெருமைப்பட வைத்திருக்கிறது. இந்த வெற்றி அவர்களுக்கு இனிப்பான பழிவாங்கலாக இருக்கிறது. 

    • கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுலை வீழ்த்தி ஸ்மிருதி இரானி வென்று அமைச்சரானார்.
    • இந்த தேர்தலில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

    2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திரபிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொக்குகளில் நின்றார். இதில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல்காந்தி தோல்வியை தழுவினார்.

    அதன் பின்னர் ஸ்மிருதி இரானி மோடியின் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார்.

    இந்நிலையில் இந்தாண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் மீண்டும் ஸ்மிருதி இரானி பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிஷோரிலால் சர்மா போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கிஷோரிலால் சர்மா அமோக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி ரானியை 1.67 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதனையடுத்து, தேர்தலில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், ஸ்மிருதி இரானி வகித்து வந்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை தற்போது பாஜக எம்.பி. அன்னபூர்ணா தேவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

    தனது தொகுதியான அமேதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார். #RahulGandhi
    லக்னோ :

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தனது தொகுதிக்குட்பட்ட அரசு விளைபொருள் கொள்முதல் கூடத்தில் இரு நாட்கள் காத்திருந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார். பின்னர், புர்ஸத்கஞ்ச் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், பயணத்தின் இரண்டாம் நாளான இன்று தொகுதி மக்களின் குறை கேட்பு கூட்டதில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை ராகுல் கேட்டறிந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து, தாலா எனும் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் சந்திப்பில் பங்கேற்று விவசாயிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

    இறுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையின் போது கடந்த 20-ம் தேதி பலியான துணை ராணுவ வீரரான அனில் மயூரியாவின் வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி ஆறுதல் கூறுவார் என மாநில காங்கிரஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi
    ×