என் மலர்
நீங்கள் தேடியது "சிஎஸ்கே"
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
- அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 146 ரன்களை மட்டுமே எடுத்தது.
சென்னை:
ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா, ஆர்.சி.பி. அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும், தேவ்தத் படிக்கல் 27 ரன்னும், டிம் டேவிட் 22 ரன்னும் எடுத்தனர்.
சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார். அவர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஆர்.சி.பி. சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆர்சிபி 196 ரன்கள் குவித்தது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும் எடுத்தனர்.
சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கி ஆடி அவ்ருகிறது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் இடையிலான போட்டியை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்டு களித்தார்.
- ரஜத் படிதார் அரைசதம் அடித்தார்.
- டிம் டேவிட் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் பதிரனா, ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.
தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். விரட் கோலி நிதானமாக விளையாட பில் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தொடக்கத்தில் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
5-வது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட் ஆட்டமிழந்தார். எம்.எஸ். தோனி மின்னல் வேகத்தில் சால்ட்-ஐ ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். அப்போது ஆர்சிபி 5 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்தது. சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்கருடன் 32 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து தேவ்தத் படிக்கல் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி 14 பந்தில் தலா 2 பவுண்டரி, சிக்சருடன் 27 ரன் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கோலி உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். ரஜத் படிதார் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ரன்அவுட் மிஸ், கேட்ச் மிஸ் என படிதாருக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுத்தனர்.
மறுமுனையில் விராட் கோலி 30 பந்தில் 31 ரன்கள் எடுத்து நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.
ஏராளமான வாய்ப்புகள் பெற்ற ரஜத் படிதார் 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார்.
ஜித்தேஷ் சர்மா 12 ரன்களும், லிவிங்ஸ்டன் 10 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் டிம் டேவிட் 3 சிக்சர்கள் விளாச இறுதியாக ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே அணியில் சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். பதிரனா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், நூர் அகமது 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே பேட்டிங் செய்து வருகிறது.
- சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி சார்பில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோர் முதலில் களமிறங்கி விளையாடினர். ஆட்டத்தின், 5வது ஓவரின்போது நூர் அகமதின் பந்து வீச்சில் பில் சால்ட் பேட்டிங் செய்தார்.
அதிரடியாக விளையாடி வந்த பில் சால்டை, கீப்பராக நின்றுருந்த டோனி மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்து வெளியேற்றினார்.
முன்னதாக, சிஎஸ்கே - மும்பை அணி இடையேயான ஆட்டத்தின்போது சூர்யா குமார் யாதவை இதேபோன்று டோனி அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிஎஸ்கே அணியில் பதிரனா இடம் பெற்றுள்ளார்.
- ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி விவரம்:-
விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவி, ஹேசில்வுட், யாஷ் தயால்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-
ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சாம் கர்ரன், ஜடேஜா, எம்எஸ் டோனி, அஸ்வின், நூர் அகமது, பதிரனா, கலீல் அகமது.
- நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
- வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
என தோனி கூறினார்.
- 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
- 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
சென்னை:
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுடன் நூர் அகமது குறித்து ஒரு வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் பிரபலமான டயலாக்கான நான் ஒரு தடவ சொன்னா நூரு தடவ சொன்ன மாதிரி என்ற டயலாக்கை நூர் அகமது பேசியுள்ளார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுக்கு Baasha of spin என தலைப்பிட்டுள்ளது.
- ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐ.பி.எல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.
எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.
இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சென்னை அணி பந்து வீசும் போது பால் டேம்பரிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கலீல் அகமது தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை கேப்டன் ருதுராஜ் கையில் கொடுப்பார். அதனை வாங்கி கொண்ட ருதுராஜ், மறைத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்.
இந்த வீடியோவை வைத்து மும்பை ரசிகர்கள் உள்பட ஐபிஎல் ரசிகர்கள் சென்னை அணி பால் டேம்பரிங் செய்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சூதாட்டத்தில் சிக்கியதாக 2 ஆண்டு சிஎஸ்கே அணி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
- மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.
ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ளன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கியது. இதில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.
இதற்கிடையே, ஆட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டானார்.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார்.
அதன்படி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா மோசமான இடத்தை சமன் செய்துள்ளார்.
- இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- 43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் ஆவார்.
பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 3-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் பேசிய எம்.எஸ். தோனி, "சென்னை அணிக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என்னால் விளையாட முடியும். அது என்னுடைய அணி உரிமை. நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் இருந்தாலும், என்னை சி.எஸ்.கே. அணிக்காக விளையாட இழுத்துச் செல்வார்கள்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
43 வயதான தோனி, 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மிக வயதான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். 2025 தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
- சென்னை அணியில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளார்.
பத்து அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று ( ஞாயிற்றுக்கிழமை) 2 போட்டிகள் நடைபெற உள்ளன. ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த சீசனில் எம்.எஸ். தோனி அன்கேப்டு வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வகையில் தோனி எந்த வரிசையில் ஆடுவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் வழக்கமான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாததால் சூர்யகுமார் யாதவ் அணியை வழி நடத்துகிறார். இரு அணிகளுமே ஐ.பி.எல்.கோப்பையை 5 முறை வென்றுள்ளன. இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.