என் மலர்
நீங்கள் தேடியது "பாரதிய ஜனதா"
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில்:
பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.
அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முன் விரோதம் காரணமாக தாக்குதல்
- ண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது37). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜென்சிமலர் (35). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபுராஜ் (38). கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிரிஜா (35). இவர் இரணியல் பேரூராட்சியில் 4-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்து வருகிறார்.
ஜென்சிமலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரணியல் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்திருந்தார். இதனால் இவருக்கும் கிரிஜாவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜென்சிமலர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். கிரிஜா வீட்டு அருகில் வந்தபோது அங்கு நின்ற பிரபுராஜ், ஜென்சிமலரை தடுத்து நிறுத்தி எங்களுக்கு தெரியாமல் குடிநீர் இணைப்பு கேட்பாயா என அவதூறாக பேசி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இருவரும் ஜென்சிமலரிடம் இருந்த செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் சேதப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இவற்றின் சேதமதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும்.
காயம் அடைந்த ஜென்சி மலர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பிரபுராஜ், கிரிஜா ஆகிய இருவர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள அவர்களைதேடி வரு கின்றனர்.
- தக்கலை - ராமன்பரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
- உண்ணாவிரதம் இருக்கலாம் ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்த போலீசாருடன் கடும் வாக்கு வாதம்
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் நகரட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தக்கலை - ராமன்பரம்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிபட்டு வந்தனர், சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கவுன்சிலர் கீதா பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை.
இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தக்கலை பஸ் நிலையம் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாரதிய ஜனதாவினர் பேராட்டத்திற்கு திரண்ட னர். உண்ணாவிரதம் இருப்பவர் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்தனர்.
இதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பந்தலை அகற்ற பாரதிய ஜனதாவினர் மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உன்னி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்துக்கு பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ், மாவட்ட நிர்வாகிகள் குமரி ரமேஷ், டாக்டர் சுகுமாரன், ஷண்முகம், துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தக்கலையில் காவடி கட்டத் தடை-அனுமதியால் பரபரப்பு
- இன்று காலை தாமதமாக தொடங்கியது ஊர்வலம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தக்கலை குமார கோவிலில் அமைந்துள்ள வேளிமலை முருகன் கோவில்.
இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் போலீஸ், பொதுப்பணி என அரசு துறைகள் சார்பிலும் காவடி எடுப்பது உண்டு.
காவடி கட்டிய பின்னர் அதனை யானை மீது வைத்து ஊர்வலம் நடைபெறும். இந்த ஆண்டு ஊர்வலம் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை நடை பெற்றது.முன்னதாக ஊர்வலம் செல்லும் சாலையோரம் காவடிகளை வரவேற்கும் விதமாக வாழைக்குலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.
ஊர்வலத்தில் பங்கேற்ப தற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காவடி கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தக்கலை போலீஸ் நிலையத்திலும் காவடி கட்டுவதற்கான பணிகள் மற்றும் பூஜை ஏற்பாடுகள் நேற்று மாலை யில் தொடங்கியது.
ஆனால் இரவு 9 மணிக்கு மேல் பணிகள் எதுவும் நடைபெறாமல் ேபாலீஸ் நிலையம் களையிழந்து காணப்பட்டது. இந்த சூழலில் போலீஸ் நிலையம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இங்கு வைத்து காவடி கட்டக் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் பாரதிய ஜனதா வினர் அதிருப்தி அடைந்த னர். அவர்களும், இந்து முன்னணி அமைப்பினரும் நள்ளிரவு 12 மணிக்கு தக்கலை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இன்று அதிகாலை 2 மணி வரை அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமர சம் செய்ய முயன்றனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரம் போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணியும் நடைபெறவில்லை. இத னால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதற்கிடையில் போலீஸ் காவடி இல்லாமல், வேளி மலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்லக் கூடாது. நாளை (இன்று) காலை அனைத்து பகுதி களில் இருந்து எடுக்கப்படும் காவடிகளும் தக்கலை போலீஸ் நிலையம் முன்பு வரவேண்டும் என போரா ட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சூழலில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் இருந்து யானையுடன் காவடி ஊர்வலங்கள் புறப்பட்டன. அவை தக்கலை போலீஸ் முன்பு வரக்கூடும் என்பதால் பல இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலங் காலமாக செந்தூர் முருகன் காவடி, தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வேளிமலை முருகன் சந்நிதியில் நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சி னையால் இன்று அதிகாலை தொடங்க வேண்டிய பூஜை சடங்குகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லை.
எனவே அனைத்து முருக பக்தர்களும், பாரதிய ஜனதா நிர்வாகிகளும், பொது மக்களும் தக்கலை காவல் நிலையம் முன்பு நியாயம் கேட்க திரள வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
ஆண்டு தோறும் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய காவடி ஊர்வலம் இன்று தொடங்கப்படாதது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் போலீஸ் காவடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் காவடி கட்டும் பணிகள் தொடங்கின.
இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் புறப்பட்ட காவடிகள், வேளிமலை முருகன் கோவிலை நோக்கி ஊர்வலமாகச் சென்றன.
இந்த நிலையில் தக்கலைக்கு வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில் பாரம்பரியமாக தக்கலை காவல் நிலையத்தில் இருந்து ்பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசு அமைப்புகள் சார்பில் குமாரகோவிலுக்கு காவடிக்கட்டு செல்வது பாரம்பரியமாக நடை பெற்று வருகிறது
ஆனால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மேடைகளிலும் பொது வெளியிலும் மத ஒற்றுமையை பற்றி பேசி விட்டு இது போன்ற பாரம்பரியமான நிகழ்ச்சி களுக்கு திட்டமிட்டு தடை ஏற்படுத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல் படுகின்றனர். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு போன்ற அதிகாரிகள் குறைந்த கால கட்டங்களில் மாவட்டத்தில் பணிபுரிவார்கள். ஆனால் உள்ளூர் அமைச்சர் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
- விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்
- சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
கன்னியாகுமரி:
தமிழக பா.ஜ.க. தலை வர் அண்ணாமலை வருகிற 12-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதையொட்டி கன்னி யாகுமரிக்கு வரும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோ சிப்பதற்காக அகஸ்தீஸ்வரம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வ ரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் சுயம்பு லிங்கம், தெற்கு வட்டாரத் தலைவர் சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
கன்னியாகுமரிக்கு வருகிற 12-ந்தேதி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்தது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கன்னியாகுமரி:
தென்தாமரைகுளம் பேரூராட்சி பாரதிய ஜனதா கவுன்சிலரும், பாரதிய ஜனதா மாவட்ட ஐ.டி பிரிவு துணைத் தலைவருமான சுபாஷ் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நேற்று மாலை தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை தாங்கினார். தென்தா மரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், ஒன்றிய பாரதிய ஜனதா பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், பேரூர் தலைவர் தாமரைபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ குரு சிவச்சந்திரன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், பாஜக பொரு ளாதார பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.
போராட்டத்தில் மைலாடி பேரூர் தலைவர் பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாய், பாமா, மேனகா, அமுதா, பாரதிய ஜனதா நிர்வாகிகள் ராஜகுமாரன், சந்திரசேகர், சிவகுமார், முத்துகிருஷ்ணன், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்
- போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி :
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செட்டிகுளம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
அப்போது பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பினரும் காயமடைந்த னர். இந்த மோதல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட 22 பேர் மீதும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ் உட்பட 31 மீதும் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன் மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் நிர்வாகிகள் டைசன், லாரன்ஸ், ஜோஸ்லின் ஜெலின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த கோர்ட் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. 6 பேரும் தினமும் காலை, மாலை கோட்டார் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து இன்று காலை பாளையங் கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், டைசன், ஜோஸ்லின் ஜெலின் ஆகிய6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.விடு விக்கப்பட்ட நிர்வாகிகள் பாளையங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தனர். இைதயடுத்து ஆரல்வாய்மொழியில் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், கிருஷ்ணமூர்த்தி, ராஜா, இன்ஸ்பெக்டர்கள் ராமர், கோபி அகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா நிர்வாகிகளின் வாகனங் களையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட கார்களில் வந்திருந்தனர். 5 கார்களை மட்டுமே அனுமதிப்போம் என்று போலீசார் தெரி வித்தனர். மற்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். முதலில் 5 கார்கள் சென்ற பிறகு மற்ற கார்களை போலீசார் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பிரச்சினைகள் எதுவும் நடை பெறாமல் இருக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது
- பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கியாஸ் விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடி
நாகர்கோவில்:
மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து திருவட்டார் காங்கிரஸ் கிழக்கு வட்டார ஓ.பி.சி. பிரிவு சார்பில் ஆற்றூர் சந்திப்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது, பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சியில் வந்தவர்கள், இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கியாஸ் விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்திக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடியை கொடுத்து, அவர் மேடையில் பேசிய ஒரு விஷயத்தை வைத்து அவருக்கு நெருக்கடி கொடுத்தது, தண்டனை கொடுத்து, அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர். பா.ஜ. க.வை பொறுத்தவரையில் அவர்கள் செய்வதுதான் சரி என்று கூறி அரசு நிறுவனங்களை தனியாரி டம் கொடுத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஒரு சிலரை பணக்காரர்கள் ஆக்க வேண்டும் எனவும், அவர்களை வைத்து லாபம் அடைய வேண்டும் எனவும், செயல்படும் அவர்களின் செயல்பாட்டை கண்டித்து, ராகுல் காந்தி 2024-ம் ஆண்டு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் மக்களை சந்தித்து பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். 3, 4 மாதங்களாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து சென்றார். அது சாதாரண விஷயம் அல்ல. மக்களை சந்தித்து, அவர்களின் குறை களை கேட்டு மக்களுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அந்த யாத்தி ரை நடத்தினார். அந்த எண்ணம் தான் இந்தியாவை ஒருங்கிணைக்கும், புதிய மாற்றத்தை கொண்டு வரும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு 2024-ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கு வதற்கு ஒருங்கி ணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்குமார், மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாவட்ட மகிளாக காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்
- மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் எனது (தர்மராஜ்) தலைமையில் நடைபெற உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கடந்த 4-ந்தேதி நடைபெற இருந்த குமரி சங்கமம் நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ள இருந்தார். ஆனால் கடந்த 3-ந்தேதி ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை சோகத்தில் ஆழ்ந்ததால் நாகராஜா கோவில் திடலில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட குமரி சங்கமம் நிகழ்ச்சி வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் எனது (தர்மராஜ்) தலைமையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் மீனாதேவ், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக இணை பார்வையாளர் சுதாகர்ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றுகிறார். எனவே நிகழ்ச்சியில் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் தப்பி ஓட்டம்
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசாரிடம் வழங்கி உள்ளார்கள்.
நாகர்கோவில் :
மத்திய பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனை களை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் பார திய ஜனதாவினர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் நாகர்கோவில் நாகராஜா திடலில் வருகிற 2-ந்தேதி குமரி சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். இது தொடர்பாகவும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரங்கள் நடந்து வருகிறது. தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட இளைஞரணி சார்பில் பூதப் பாண்டி, செண்பகராமன்புதூர் பகுதியில் வாகன பிரசாரம் நேற்று நடந்தது.
கல்லுமடமுக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞரணியினர் பிரசாரம் மேற்கொண்டு வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறினார்கள். திடீரென அந்த பகுதியில் கிடந்த கல்லை எடுத்து வாகனத்தின் மீது வீசினார்கள்.
இதையடுத்து பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கே திரண்டனர். இதற்கிடையில் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரில் பாரதிய ஜனதா சார்பில் நடந்த வாகன பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி கல்வீசி தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதுடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசாரிடம் வழங்கி உள்ளார்கள்.
அந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளில் அந்த வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் எண் தெளிவாக பதிவாகியுள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் விசாரணை
- பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.
கன்னியாகுமரி:
பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.
நாகர் கோவில் நாகராஜா திடலில் நாளை மறுநாள் (2-ந்தேதி) நடைபெறும் குமரி சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இது தொடர்பாகவும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.
செண்பகராமன் புதூர் பகுதியில் தோவாளை இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் வாகன பிரசாரம் நடை பெற்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இதுகுறித்து மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சி.சி.டி.வி. காமிராவில் பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டி சென்றவர்களின் வாகன எண் பதிவாகி இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டிய வர்கள் குறித்து அடையாளம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குமரி சங்கமம் நிகழ்ச்சியில் மேடையில் அனுமதிக்காததால் முடிவு
- கவுன்சிலர் ரோஸிட்டாவிற்கு மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில் நாகராஜா திடலில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் குமரி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் ரோஸிட்டா, நாகர்கோவில் கிழக்கு மாநகர பொருளாளர் திருமால் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், மாவட்ட தலைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.
இது பாரதிய ஜனதாவி னர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் திருமால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்ற பகுதி 24-வது வார்டுக்குட்பட்ட பகுதி ஆகும்.
எனவே கவுன்சிலர் ரோஸிட்டாவிற்கு மேடையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு அணிவிக்க ஆளுயர ரோஜாப்பூ மாலை மற்றும் செங்கோலும் தயார் செய்து வைத்திருந்தார்.
ஆனால் ரோஸிட்டாவை மேடையில் அனுமதிக்க வில்லை. இதனால் அண்ணாமலைக்கு போட வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலை மற்றும் செங்கோலை வழங்க முடியவில்லை. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலை யில் தான் அண்ணாமலைக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த மாலையை கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் ஊர்வலமாக சென்று வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு அணிவித்துள்ளனர்.