என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக மாணவர்கள்"
- கல்லூரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
- ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?
துரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களையும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆளுநருக்கு இந்த செயலுக்கு திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?
பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ" என்று பதிவிட்டுள்ளார்.
- பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலால் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கல்விக் கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அப்போது, நான் சொல்கிறேன்; நீங்களும் திரும்ப செல்லுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்.
மதச்சார்பற்ற கல்வி நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களையும் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட வைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
- ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- மாணவ சமுதாயத்திடம் சாதி பாகுபாடை தூண்டும் விதமாக செயல்பட வேண்டாம் என அண்ணாமலை வலியுறுத்தல்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவ சமுதாயத்திடம் சாதி பாகுபாடை தூண்டும் விதமாக செயல்பட வேண்டாம் எனவும், தேர்தல் அறிக்கையின்படி மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கல்விக் கடன் ரூ.48.95 கோடி ரத்து என்று அறிவித்துள்ளது திமுக அரசு. ஒவ்வொரு தேர்தலின்போதும், அலங்கார வாக்குறுதியாக, கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது, திமுகவின் வழக்கம். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை மொத்தம் ரூ. 16,302 கோடி. இந்த நிலையில் வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்?
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159ல், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்று கூறி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி, கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, வாராக்கடனாக, ரூ. 4,124 கோடி அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளைச் சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.
தற்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது. கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக.
நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான். இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?
உடனடியாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதன்படி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது.
- பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?
அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.
இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
- தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.
மாணவர்களின் கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல் PM SHRI திட்டத்தில் தமிழகம் இணைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாதவது:-
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, இந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.
மத்திய அரசு இந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி.
ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள்.
தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாளை +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இன்று இரவு நன்றாக உறங்குங்கள். உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள்.
முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையவும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்கவும்.
ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால், ஆழமாக பெரு மூச்சு விட்டு, சில நொடிகள் அமைதி காத்தால் - தெளிவாகும் நமது மனம் விடைகளை கண்டுபிடிக்கும்.
அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்களுக்கான உங்களுடைய உணர்வுபூர்வ ஆதரவு முக்கியமானது.
தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது. இதை விமர்சித்து வரும் தி.மு.க. ‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். அதை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கூறியது.
இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய தொகுப்பிற்கு தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்வானார்கள் என்பதே உண்மை. இந்த நிலை தற்போது மாறி இருக்கிறது.
சமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவபட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை.
இந்தாண்டு இந்திய அளவில் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய 1,43,148 பேரில் 79,633 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17,067 பேரில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் தேர்வெழுதிய 15,451 பேரில் 7,441 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் தேர் வெழுதிய 15,216 பேரில் 9,219 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆந்திராவில் தேர்வு எழுதிய 10,885 பேரில் 6,323 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

நீட் தேர்வால் சாமானியர்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில முடியும் என்பதே இன்றைய நிதர்சனம். நீட் தேர்வால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு விலை பேசி விற்கப்படாமல் தகுதி, மதிப்பெண் அடிப்படையில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் சாமானியர்களும் மருத்துவராக முடிகிறது.
நீட் தேர்வை பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டதால் முன்பு இருந்ததை விட ஏறத்தாழ 2 மடங்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள். இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு 1 வருடம் விலக்கு அளித்தது.அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படித்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
நீட் தேர்வு கருத்துருவாக்கம் திமுக காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தான் உருவானது.அதன் இறுதிவடிவம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மோடி அவர்கள் அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP #NEETExam
சென்னை:
ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்க வேண்டும், எம்.பி.பி.எஸ். படித்து டாக்டராக வேண்டும், என்ஜினீயர் ஆக வேண்டும் என்பது பல தமிழக மாணவர்களின் கனவாக உள்ளது.
இதற்கு போதிய பாடத் திட்டங்களும், பயிற்சியும் அவசியம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்த வரை பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மொத்தம் 6 பாடங்கள் வைக்கப்படுகின்றன. முதல் மொழிப் பாடம், 2-ம் மொழிப்பாடம், கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல் என 6 பாடங்களை தமிழக மாணவர்கள் படித்தாக வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் எந்தப் பிரிவை எடுத்தாலும் 6 பாடங்கள்தான்.
ஆனால் ஆந்திரா-தெலுங்கானாவில் பிளஸ்-2 வகுப்புக்கு 5 பாடங்கள் மட்டுமே. ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டுமே அவர்கள் படிக்கின்றனர். மேலும் பெரும்பாலான பள்ளிகளில் ஐ.ஐ.டி. சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளன.
வகுப்பில் பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் நடத்தப்படுவதில்லை. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.
எனவே ஐ.ஐ.டி. கனவில் இருக்கும் மாணவர்கள் ஆந்திரா- தெலுங்கானா சென்று படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆந்திரா- தெலுங்கானாவில் பொது அறிவை வளர்க்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பொது நுழைவுத் தேர்வு ஒன்றையே மையமாக வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதால் தமிழக மாணவர்கள் ஆந்திரா- தெலுங்கானா சென்று பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் கலாசாரம் சில ஆண்டுகளாக பெருகி வருகிறது.
பெரும்பாலான தமிழக மாணவர்கள் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக பெற்றோரும் ஆந்திரா- தெலுங்கானா சென்று குடியேறுகிறார்கள்.
அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்ட என்ஜினீயரிங் தர வரிசைப் பட்டியலில் 8-வது இடம் பிடித்த என்.ஏ.நிஷா, 9-வது இடம் பிடித்த எஸ்.நிதிஷ்குமார், 10-வது இடம் பிடித்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் ஆந்திராவில் பிளஸ்-2 வரை படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர் நிதிஷ்குமார் ஐதராபாத் நாராயணா ஜுனியர் கல்லூரியில் 9-ம் வகுப்பில் இருந்து படித்து வருகிறார். 4 ஆண்டுகள் அங்கு படித்து முடித்த நிலையில் மும்பை ஐ.ஐ.டி.யில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
அவரது தாய் உஷா கூறுகையில், “நான் மகன் படிப்புக்காக ஐதராபாத்தில் தங்கி இருக்கிறேன். எனது கணவர் செல்வராஜ் இங்கு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். எனது மகனை ஐ.ஐ.டி.யில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான பயிற்சி இங்கு அளிப்பதால் சேர்த்தோம்” என்றார்.
ஆந்திராவில் படித்த மற்றொரு மாணவரான மணிகண்டன் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பதியில் நாராயணா குரூப் பள்ளியில் படித்தார்.
இதே போல் மாணவி நிஷா திருவள்ளூர் மாவட்டம் கொடி வளசல் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆந்திராவின் புத்தூரில் படித்தவர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் 2-வது இடம் பிடித்த மாணவர் ராஜ்செந்தூர் அபிஷேக் விஜயவாடாவில் படித்தவர்.
மாணவர்கள் கூறும் போது, ஆந்திராவில் நுழைவுத் தேர்வை மையமாக வைத்து பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது ஐ.ஐ.டி. மருத்துவம், என்ஜினீயரிங் போன்றவற்றில் சேர வசதியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இதுபற்றி தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடங்களின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க வேண்டும், இல்லையெனில் ஆந்திராவில் படித்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர். #NeetExam #JEEAdvance