என் மலர்
நீங்கள் தேடியது "ஏஞ்சலினா ஜோலி"
- ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
- உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.
ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்டின் 18 வயது மகள் ஷிலோ நோவல் ஜோலி பிட் தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது பெயருடன் இணைந்து இருக்கும் தந்தையின் பிட் பெயரை நீக்கி விட்டு ஷிலோ நோவல் ஜோலி என்று சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இதுபோல் ஷிலோ நோவலோடு உடன் பிறந்தவர்களும் பிட் பெயரை தங்கள் பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள்.
பிராட் பிட் தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினார் என்று ஏஞ்சலினா ஜோலி ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இதனை பிராட் பிட் மறுத்தார். தற்போது அவரது குழந்தைகள் பிட் பெயரை நீக்கியதன் மூலம் அவர் துன்புறுத்தியது உண்மையாக இருக்குமோ என்று பலரும் பேசி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாக பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை விதிப்பு.
- பெண்கள் வெளியே வரும் போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய உடையை அணிய வேண்டும்.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் கல்வி கோர்க்கவும் வேலைக்குச் செல்லவும் தலிபான் அரசு அனுமதி மறுத்து வருகிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய உடையை அணிய வேண்டும் என்றும் ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியில் செல்லக் கூடாது, விமானங்களில் பயணிக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாக பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலிபான் அரசு எச்சரித்துள்ளது.
தாலிபான் அரசின் இந்த கொடூர சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.

- போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர்
- இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மேலும் போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர். எனவே மொத்தம் ஆறு குழந்தைகளை அவர்கள் வளர்த்து வந்தனர்.
ஆனலும் ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-ல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த விவாகரத்து வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே இதுநாள்வரை 6 குழந்தைகளின் பொருளாதார செலவை இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.
இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது. 6 குழந்தைகளை யார் கவனிப்பது, தொழிற்சாலையைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படாததால் விவகாரத்து வழக்கில் தீர்ப்பு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஏஞ்சலினா மற்றும் பிராட் பிட் இருவரும் இந்த பங்கீடு தொடர்பாக ஒரு முடிவை எட்டியுள்ளனர்.
ஏஞ்சலினாவின் வழக்கறிஞர், ஜேம்ஸ் சைமன், இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார். எனவே விவாகரத்து வழங்கி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2003 ஆம் வெளியான மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 10 வருடங்களாக காதலித்து 2014 இல் திருமணம் செய்த இவர்களுக்கு போரில் அகதிகளான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
