search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனிதர்கள்"

    • வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது.
    • இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

    உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்று கூறிவந்த நிலை வழக்கொழிந்து தற்போது உலகம் செயற்கைத் நுண்ணறிவான ஏ.ஐ மயமாக மாறி வருகிறது என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் இணங்கத் தொடங்கியுள்ளது. இந்த இணக்கம் ஒரு படி மேலே சென்று மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஏ.ஐ மாறும் என்ற அச்சமும் பரவி வருகிறது.

    போலியான DEEP FAKE புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடங்கி மனிதர்களின் வேலையை பறிப்பது வரை இந்த 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஏ.ஐ மாறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏ.ஐ மூலம் இயங்கும் சாட் பாட்கள் [CHAT BOT] மனிதர்களின் கட்டளை இன்றியே பொய் சொல்லத் தொடங்கியுள்ளது.

     

    வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது. அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று சேல்ஸ் பிரிவில் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ரோபோ கால் சர்வீஸ் மூலம் பிளான்ட் என்று அதிநவீன ஏ.ஐ சாட் பாட்டை பணியமர்த்தியுள்ளனர்.

     

    இந்த சாட் பாட் வாடிக்கையாளர்களிடம் மனிதரைகளைப் போலவே பேசுமாம். இந்நிலையில் நிறுவனத்தின் முன்னாள் நின்றுகொண்டு விஷயம் தெரிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவே, போனை அட்டென்ட் செய்த சாட் பாட் பெண்ணைப் போலவே அவரிடம் பேசியுள்ளது.தான் ஒரு சாட் பாட் தான் என தனது குரலில் காட்டிக்கொள்ளவில்லை.

     

    தான் உயிருள்ள மனிதன் தான் என நம்பவைக்க நிறுவனத்துக்குள் வேலை நேர இரைச்சல் இருப்பது போன்ற சத்தங்களை உருவாக்கி அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியுள்ளது சாட் பாட். ஆனால் ஏ.ஐ சாட்பாட்டை உருவாக்கிய நிறுவனம் இது எதையும் புரோக்ராம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.ஐ ஆகவே இவ்வாறு ஏமாற்ற கற்றுக்கொண்டுள்ளது.

     

    இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு ஏ.ஐ சாட் பாட் களுடன் உரையாடி வல்லுநர்கள் நடத்திய செய்து ஏஐ தொழில்நுட்ப பாட்கள் மனிதர்களின் கட்டளை இல்லாமலேயே இந்த செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மனித குலத்துக்கு வருங்காலங்களில் ஏஐ மூலம் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றுஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

     

    • வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
    • பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.

    ஈரோடு:

    அறச்சலூரில் உள்ள கொடுமுடி சாலை சந்திப்பில் வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வன உயிரினங்க ளுடனான சந்திப்பின்போது தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் வன உயிரினங்களின் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்த பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.

    நிகழ்வில் ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர் சந்தோஷ், வனக்காவலர்கள் துரைசாமி, ராமசாமி, கோமதி, ரீனுபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    • உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
    • டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்,கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில் :- அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை. கோடை காலங்களில் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும், குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல அது நம்முடைய கடமை, மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது எனறு கூறி சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்யவேண்டும் என்று கூறினார். பிறகு பறவை ஆர்வலர் கீதாமணி,கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம்,பூபதி ராஜா, ரமேஷ்,மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு இயற்கையை காப்பாற்ற சிட்டுக்குருவிகள் அவசியம் என்பதை உணர்ந்து சிட்டுக்குருவி தினத்தன்று அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் முகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறன் கொண்டவை என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக நாய் திகழ்கிறது. இது மனிதர்களின் நண்பனாக மாறியுள்ளது. வீட்டில் பாதுகாப்பிற்காகவும், தனிமையை குறைப்பதற்காவும் பலர் நாய்களை வளர்க்கின்றனர். நாய் மிகவும் நன்றியுள்ள மிருகமாக கருதப்படுகிறது. இந்நிலையில், மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறன் நாய்களுக்கு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஸ்பிரிஞ்சர் என்ற தனியார் நிறுவனம் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. நாய்கள் தங்கள் எஜமான்களின் முகபாவத்திற்கு ஏற்ப தலையை திருப்புகின்றன. கோபம், பயம் மற்றும் சந்தோஷமாக இருக்கும் போது தலையை இடது பக்கமாக திருப்புகின்றன. ஆச்சரியமாக முகத்தை வைத்திருக்க்ம் போது வலது பக்கமாக தலையை திருப்புகின்றன.

    ஒருவேளை அவர்கள் சோகமாக இருந்தால் நாய்களின் இதயத்துடிப்பு மிகவும் அதிகரிக்கிறது. இந்த ஆய்வு மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே உள்ள பாசத்தை எடுத்துக்காட்டுகிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழ்வதன் மூலம் நாய்கள் புதிய பண்புகளை வளர்த்துக்கொண்டுள்ளன. அவற்றின் மூலம் மனிதர்களுடன் பேசிப்பழகுகின்றன.

    நாய்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவற்றின் மூளை செயல்பாடு குறித்து அறிய முடிந்தது. மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் நாய்களின் மூளை தான் பெரும் பங்கு வகிக்கிறது.

    ×