என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேசம்"

    • ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
    • 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடதுக்கீட்டை எதிர்த்து கடந்த வருடம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

    இதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பிரதமர் மாளிகையில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இன்று வரை அவர் இந்தியாவிலேயே உள்ளார்.

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசாங்கம் ஷேக் ஹசீனாவை நாடுகடத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ஷேக் ஹசீனா மட்டுமின்றி மேலும் 12 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன.
    • போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.

    வங்கதேசத்தில் கடந்த வருடம் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் தற்போது வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர்பபேஷ் சந்திர ராய் (வயது 58) மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்நாட்டில் பாலஸ்தீன தாக்குதல்களை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வங்கதேசம் செல்லும் அமெரிக்க பயணிகளை அந்நாட்டு எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் காக்ராச்சாரி, ரங்கமதி மற்றும் பந்தர்பன் உள்ளிட்ட சிட்காங் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அரசு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வகுப்புவாத வன்முறை, குற்றச் சம்பவங்கள், பயங்கரவாதம், கடத்தல் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பயணிகள் இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடாது" என்று தெரிவித்துள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், இந்தப் பகுதியில், குடும்ப தகராறுகளால் தூண்டப்பட்ட கடத்தல்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் அரசியல் வன்முறைகளும் இப்பகுதிக்கு வருபவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.

    மேலும் IED குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்க குடிமக்கள் அனைத்து கூட்டங்களையும், அமைதியான கூட்டங்களையும் கூட தவிர்க்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.

    ஏனெனில் சிறிய எந்நேரமும் அவை வன்முறையாக மாறக்கூடும். வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் உட்பட பயங்கரவாத வன்முறை அபாயம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

    • சமீபகாலமாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
    • பபேஷ் சந்திர ராய் உடலை ஒரு வேனில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி மாணவர் போராட்டத்தால் கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உருவான இடைக்கால அரசின் தலைவராக அமைதிகான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதிவு ஏற்றார்.

    ஆனால் அந்நாட்டில் அமைதி திரும்பிய பாடில்லை. முஸ்லீம் பெரும்பான்மை வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த வருட  இறுதியில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இஸ்கான் தலைவர் சாமியார் சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்ட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இந்த நிலையில் தற்போது இந்து தலைவர் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வங்கதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தினாஜ்பூர் மாவட்டம் பசுதேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பபேஷ் சந்திர ராய் (வயது 58). இவர் வங்காதேச பூஜா உத்ஜபன் பரிஷத்தின் பீரால் பிரிவின் துணைத் தலைவராகவும், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தின் முக்கிய தலைவராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் பபேஷ் சந்திர ராய் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் பபேஷ் சந்திர ராயை கடத்தி சென்றனர். நராபரி கிராமத்திற்கு கொண்டு சென்று அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் பபேஷ் சந்திர ராய் உடலை ஒரு வேனில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். 

    • ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
    • யூனுஸால் இதை நியாயப்படுத்த முடியுமா?.

    வங்கதேசத்தில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    இதன்பின் அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு அமைந்தது. கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீவா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. முகமது யூனுஸ் அரசை ஷேக் ஹசீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனது அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களிடம் வீடியோவில் உரையாற்றிய அவர், வங்கதேசத்தின் வரலாற்றை, குறிப்பாக நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவாமி லீக்கின் பங்களிப்புடன் தொடர்புடையவற்றை யூனுஸ் அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

    அவர் கூறியதாவது, "வங்காளதேச சுதந்திர இயக்கத்தின் அனைத்து அடையாளங்களும் அகற்றப்படுகின்றன. சுதந்திரப் போராளிகள் அவமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து மாவட்டங்களிலும் நினைவகங்களை நாங்கள் கட்டினோம், ஆனால் அவை தற்போது எரிக்கப்படுகின்றன.

    யூனுஸால் இதை நியாயப்படுத்த முடியுமா?. நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் எரித்துவிடும். அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர் (யூனுஸ்), அதிகார பசி, பண பசிக்காக, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அழிக்கிறார்.

    வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்" என்று தெரிவித்தார். 

    • இந்த ரத்து உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களும் நிலத்தால் சூழப்பட்ட பகுதி.

    வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டு வந்த TRANS SHIPMENT வசதியை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

    நேற்று (ஏப்ரல் 8) மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    அதில், வங்கதேசம் தனது ஏற்றுமதி சரக்குகளை மூன்றாம் நாடுகளுக்கு, இந்தியாவில் உள்ள சுங்க நிலையங்கள் வழியாகவும், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் கொண்டு செல்ல அனுமதித்த 2020 ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரத்து உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் மூலம் வங்கதேசம், இந்தியா வழியாக பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மருக்கு இதுவரை வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தது.

    ஆனால் ஒப்பந்தம் கைலயெழுத்தான 2020 முதலே இந்திய ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக ஆடைத் துறையில், இந்த ஏற்பாட்டை நீண்ட காலமாக எதிர்த்தனர். டிரான்ஸ்-ஷிப்மென்ட் -இன் கீழ் வங்கதேச பொருட்கள் இவ்வாறு இந்தியா வந்து செல்வதால் சுங்க நிலையங்களில் தங்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதாக அவர்கள் வாதிட்டனர். இந்நிலையில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த ரத்து வங்கதேசத்தில் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். முந்தைய வழிமுறையில், இந்தியா வழியாக ஒரு நெறிப்படுத்தப்பட்ட பாதை இருந்தது, போக்குவரத்து நேரம் மற்றும் செலவு குறைந்தது. ஆனால் இப்போது, அது இல்லாமல், வங்கதேச ஏற்றுமதியாளர்கள் தாமதம் மற்றும் அதிக செலவை எதிர்கொள்வார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் சீனாவுக்கு வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார்.

    அங்கு பேசிய அவர், "இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களும் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார். சீனாவில் யூனுஸ் பேச்சுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

    • 2013 முதல் 2014 வரை மக்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக போராடியபோது அதிக அளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
    • அவாமி லீக் அரசியலுக்கு எதிர்ப்பு தெரித்தவர்கள் பயங்கரவாதிகள், போராளிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு ஓடிவிட்டனர் என வங்கதேச இடைக்கால அரசின் தகவல் ஆலோசகர் மஹ்ஃபுஜ் ஆலம் தெரிவித்துள்ளார்.

    வங்கதேசத்தில் காணாமல் போனர்வர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற ரம்ஜான் பண்டிகை விழா டாக்காவில் நடைபெற்றது. மனித உரிமை குழுவான மேயர் டக் (Mayer Dak) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மஹ்ஃபுஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக மஹ்ஃபுஜ் ஆலம் கூறியதாவது:-

    ஷேக் ஹசீனாவின் பெற்றோர்கள் படுகொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் அல்லது கொலை செய்தலை ஷேக் ஹசீனா பயன்படுத்தியுள்ளார்.

    2013 முதல் 2014 வரை மக்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக போராடியபோது அதிக அளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் தேர்தல் முறையை அழிப்பதாகும்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனின் அறிக்கைப்படி, தனிப்பட்ட பல்வேறு நபர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவாமி லீக் அரசியலுக்கு எதிர்ப்பு தெரித்தவர்கள் பயங்கரவாதிகள், போராளிகள் என முத்திரை குத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் தங்கி நாட்டிற்கு எதிராக ஹசீனா இன்னும் சதித்திட்டங்களை தீட்டி வருகிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாஃபியா குழு போன்று அவாமி லீக் செயல்பட்டு வருகிறது. ஒருபோதும் மீண்டும் வங்கதேச அரசியலக்கு திரும்ப அனுமதிக்கப்படமாட்டாது.

    ஷேக் ஹசீனாவுக்கும், அவருடைய பயங்கரவாத படைகளுக்கும் அடைக்கலம் கொடுக்க இந்தியா தேர்வு செய்தது துரதிருஷ்டவசமானது. கிட்டத்தட்ட 1,00,000 அவாமி லீக் உறுப்பினர்கள் அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.

    வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் 16 ஆண்டு கால அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. உடனடியாக வங்கதேசத்தில் இருந்து ரகசியமாக வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இவ்வாறு மஹ்ஃபுஜ் ஆலம் தெரிவித்தார்.

    வங்கதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து படுகொலை, ஊழல் தொடர்பாக 100-க்கும் அதிகமான வழக்குகள் அவருக்கு எதிராக போடப்பட்டுள்ளது.

    மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது படுகொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது விசாரணையைத் தவிர்க்க வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

    • இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன
    • இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

    வங்கதேசத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் சீனாவிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டார். சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த யூனுஸ்  இரு நாடு உறவுகளை பற்றி விவாதித்தார்.

    இந்நிலையில் நேற்று சீனாவில் நடந்த கூட்டத்தில் பேசிய யூனுஸ், "இந்தியாவில் வடகிழக்கில் ஏழு மாநிலங்கள் உள்ளன, அவை '7 சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம்).

    இந்த ஏழு மாநிலங்களும் இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் கடலை அடைய எந்த வழியும் இல்லை, இந்த பிராந்தியத்தில் வங்கதேசம்தான் "கடலின் ஒரே பாதுகாவலர்" என்று தெரிவித்தார். இதன்மூலம் வங்கதேசம் வழியாக சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த யூனுஸ் அழைப்பு விடுத்தார்.

     சீனாவில் முகமது யூனுஸ் இந்தியாவை பற்றி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. வடகிழக்கு மாநில தலைவர்கள் மற்றும் அமைப்புகளும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரும் பொருளாதார நிபுணரான சஞ்சீவ் சன்யால் இதுபற்றி பேசும்போது, வங்கதேசத்தில் முதலீடு செய்ய சீனாவுக்கு வரவேற்பு தெரிவிக்கும்போது, 7 இந்திய மாநிலங்களின் நிலப்பரப்பு பற்றி பேசுவதற்கான முக்கியத்துவம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். 

    • பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.
    • புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நியமிப்பதில் விழிப்புடன் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தமிழகம் மற்றும் அசாம் போலீசார் கடந்த 15-ந் தேதி தமிழகத்தில் சென்னை செம்மஞ்சேரியில் பயங்கர சதித்திட்டத்துடன் தங்கி இருந்த பயங்கரவாதி அபுசலாம் அலியை கைது செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை, பொள்ளாச்சி உள் ளிட்ட ஊர்களில் வங்க தேசத்தினர் 45 பேர் போலி ஆதார் கார்டு பெற்று தமிழகத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டு ஜாமின் விடுதலை பெற்று சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் இதில் தொடர்புடைய 45 பேரை காணவில்லை என்பதால் தமிழக போலீசார் அவர்களை பல இடங்களில் தேடி வருகின்றனர். அவர்களில் பலர் ஜமாத்உல் முஜாஹி தீன் மற்றும் அன்சூர்ல்லா பங்களா டீம் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அதன்படி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.

    மேலும் தமிழகத்தில் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அதிரடி சோதனை நடத்தி பதிவேடுகள், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே புதுச்சேரியில் வட மாநில தொழிலாளர் என்ற போர்வையில் சதித்திட்டத்துடன் வங்கதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலி ஆதார் கார்டு மூலம் ஊடுருவி இருக்கலாம் என புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை தொழிற்சாலை மற்றும் கொதிகலன் கண்காணிப்பு பிரிவின் கண்காணிப்பாளர் முரளி அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் போலி ஆதார் அட்டைகளை பெற்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி இருப்பதாகவும், அது குறித்து தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது போன்ற சூழலில் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நியமிப்பதில் விழிப்புடன் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

    உங்கள் தொழிற்சாலைகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவுகளை சரி பார்க்கவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி ஏதேனும் வட மாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில் உரிய பதிவேடுகள் ஆவணங்கள் இன்றி யாரேனும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது கண்டறிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.
    • வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.

    வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் சிக்கி இதுவரை 98 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், அங்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

    இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கலவரத்தால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதில், இதுவரை 98 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி அங்கே பல ஆயிரம் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

    இதையடுத்து,  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.
    • இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம்.

    வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மற்றும் டாக்காவை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவர் என்று தெரிகிறது.

    இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால், வங்காளதேசத்தில் நாடு முழுக்க இணைய சேவைகளை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய சேவைகள் முடங்கியதால் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது.

    முன்னதாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில், பங்கேற்ற வங்காளதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    போராட்டம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    • நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.
    • முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார்.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    அரசு வேலை வாய்ப்பில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு கோர்ட்டு அனுமதி அளித்ததால் அதை எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதன்பின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் வங்கதேசத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலகக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீதிபதிகள் பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதிப்பதாக மாணவ அமைப்புகள் தெரிவித்தன.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் திரண்டனர். இதையடுத்து அனைத்து நீதிபதிகள் கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார்.

    இதனையடுத்து, வங்கதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீனுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறிவித்துள்ளார்.

    முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர்.
    • சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.

    வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனையடுத்து, வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.

    வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பேட்டியளித்தார்.

    அதில், "முகமது யூனுஸ் குறித்து எனக்கு தெரியும். அவர் பாகிஸ்தானை விட அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பவர். தற்போது வங்கதேசத்தில் பதவியேற்றுள்ள இடைக்கால அரசை பார்க்கையில், நமக்கு விரோதமான நாடுகளை (பாகிஸ்தான் , சீனா) குறித்து இந்தியா கவலை கொள்வதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    ஷேக் ஹசீனா இந்தியாவின் நண்பர். உங்களின் நண்பர் ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவ வேண்டும். இந்தியாவும் அதை தான் செய்தது. இந்த விஷயத்தில் நான் இந்திய அரசை பாராட்டுகிறேன். இன்னும் எவ்வளவு நாட்கள் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பார் என்று சொல்லமுடியாது. உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளியை நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள் என்று நாம் கேட்கக்கூடாது.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் சில இடங்களில் தாக்கப்படுகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு இந்துக்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் சிலர் பாதுகாக்கின்றனர் என்பதும் தான்.

    வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்" என்று சசி தரூர் தெரிவித்தார்.

    ×