என் மலர்
நீங்கள் தேடியது "அன்புமணி ராமதாஸ்"

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) திருவேற்காட்டில் நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பொதுக்குழுவில் அன்புமணி பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே இந்த பொதுக்குழு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
1989-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் பா.ம.க.வை தொடங்கினார். சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் போராட்டங்களை நடத்தியும் வருகிறது.
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற யெரில் 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டும் வெற்றி பெற முடியவில்லை.
இளைஞர் அணி தலைவராக இருக்கும் அன்புமணி எம்.பி. மத்திய சுகாதார மந்திரியாக இருந்தபோது நாடு முழுவதும் சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பெயர் பெற்றார்.
சமீப காலமாக அன்புமணியின் ‘ஹைடெக்’ தேர்தல் பிரசாரங்களும், புள்ளி விவர பேச்சுக்களும் அரசியல் அரங்கில் அவரை பேச வைத்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை டாக்டர் ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் 20 மாவட்டங்களில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பா.ம.க.வின் முக்கிய அடையாளமாக உருவெடுத்துள்ள அன்புமணியை கட்சியின் தலைவராக்கி தேர்தலை சந்தித்தால் ஆட்சியை பிடிப்பது எளிது என்று பா.ம.க.வின் அனைத்து மட்டத்திலும் கருத்து நிலவுகிறது. தொடர்ந்து நிர்வாகிகளும் டாக்டர் ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.
அன்புமணியின் செயல்பாட்டை கடந்த சில ஆண்டுகளாகவே கவனித்து வந்த டாக்டர் ராமதாஸ் திருப்தி அடைந்த நிலையில் இப்போதுதான் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நாளை நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணிக்கு தலைவர் பதவி என்பதே முக்கிய தீர்மானமாக கொண்டு வரப்பட உள்ளது.
பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவின்படி அன்புமணி மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.
இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில் பொது செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர்சங்க தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. தீர்மானத்தை ஜி.கே.மணி வாசித்தார். தீர்மானம் வருமாறு:-
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வது டாக்டர் ராமதாசால் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள், படைத்த சாதனைகள் ஏராளம்.
தமிழ்நாட்டு அரசுக்கு புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும், மக்களுக்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்தும் போது அதை பாராட்டும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்குண்டு.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 1.1.1998 முதல் பணியாற்றி வரும் ஜி.கே. மணி கடந்த 25 ஆண்டுகளாக கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை சந்தித்த 9 மக்களவைத் தேர்தல்களில் 6 தேர்தல்களையும், 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 5 தேர்தல்களையும் ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் தான் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் நெருக்கடியான கால கட்டங்களிலும் கூட பாட்டாளி மக்கள் கட்சி எனும் பெருங்கப்பலை தடுமாறாமல் சிறப்பாக நடத்திச் சென்ற மாலுமி ஜி.கே.மணி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை 25 ஆண்டுகள் அலங்கரித்த நிலையில், தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கும், ஆட்சிப் பொறுப்புக்கும் அழைத்து செல்லும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் கட்சித் தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜி.கே.மணி கட்சியின் நிறுவனரிடமும், நிர்வாகிகளிடமும் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக யாரை அமர்த்தலாம் என்று தலைமை நிலைய நிர்வாகிகள் மட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்ட போது, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக, தற்போதைய இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் மேனாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் இருந்தது.
தமிழ்நாட்டில் வலிமையான அரசியல் கட்சியாகவும், தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் ஆவலாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும் நிலையில், அந்தப் பணிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான் பொருத்தமானவராக இருப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கருதுகிறது.
அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த 25 ஆண்டுகளாக வழி நடத்திச் சென்ற ஜி.கே.மணிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த சிறப்பு பொதுக்குழு, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்கிறது என்றார்.
இந்தத் தீர்மானத்தை வழிமொழியும் வகையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவோசை எழுப்பி ஆதரவளித்தார்கள்.
இதையடுத்து பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மத்திய மாவட்ட செயலாளர்கள் கே.என்.சேகர், தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.
தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
அன்புமணியை வாழ்த்தி 2.0 என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன. ‘ஆளப்போகிறான் பாட்டாளி’, ‘2026-ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று கோஷம் எழுப்பினார்கள்.
பின்னர் தன்னை தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்து டாக்டர் அன்புமணி ஏற்புரை ஆற்றினார். நிறைவாக டாக்டர் ராமதாஸ் சிறப்பு பேருரை ஆற்றினார்.
தொண்டர்கள் மத்தியில் அன்புமணி பேசும்போது, புதியதோர் தமிழகம் செய்வோம் என்று சூளுரைத்தார். ஒரு சொட்டு மது இல்லாத, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது, இலவச தரமான கட்டாய கல்வி அளிப்பது, தரமான மருத்துவ வசதி அளிப்பது, 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றுவது, தொழில், வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்துவது, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவையே எனது லட்சியமாக இருக்கும் என்றார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும் அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார்.
நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். 25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணமும் நீங்கள்தான்.
நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொலை நோக்கு திட்டங்களுடன், தமிழகத்தின் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்கி மக்களை சந்தித்து வருகிறார் அன்புமணி. அவரது திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்கள் வரவேற்கிறார்கள்.
இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தி.நகரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், ஆலோசனை வழங்கினார். ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி மற்றும் கட்சியின் துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றி ஆலோசித்தனர்.
முன்னதாக டாக்டர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைவராக பொறுப்பேற்றதையொட்டி மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்துள்ளேன். அந்த வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். அவரும் மனதார வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை. முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
முதற்கட்டமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். சமூக பிரச்சினைகள் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
முக்கியமாக கிடப்பில் உள்ள நீர் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார்.
அப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி கூறினார்.
பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தி.நகர் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 13-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் வாழவே அவர்கள் விரும்புகின்றனர்.
அவர்களை காரணமே இல்லாமல் சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது மனித உரிமை மீறல் ஆகும். சிறப்பு முகாம் என்பது முகாம் அல்ல, அது சிறையை விட கொடுமையானது. மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடம் ஆகும். கடந்த காலங்களில் பல முறை அவர்கள் போராடிய போது விரைவில் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு இன்று வரை விடுதலை செய்யவில்லை.
தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சிறப்பு முகாம் அகதிகளும் ஈழத்தமிழர்கள் தான். காலவரையின்றி அவர்களை அடைத்து வைப்பது நியாயமல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதல்-அமைச்சர் ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
முத்து விழா ஆண்டில், 80-வது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்.
இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்.
மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்.
இந்தியாவின் 2-வது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும்.
சேலத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாமக 2.0 என்ற புதிய செயல் திட்டத்தில் கல்வி , மேலான்மை, சுற்றுச்சூழல், போதை ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம் போன்றவைகளை முன் நிறுத்தி கட்சியை வழி நடத்துவேன், அதைபோலவே கட்சி நிர்வாகிகளும் நடந்துகொள்வார்கள்.
சேலத்தில் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளது. 20 ஆண்டுகாலமாக மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆண்டுதோறும் 40 டி.எம்.சி.யில் இருந்து 120 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்டது. அதை மேட்டூரில் இருந்து ஆத்தூர் வரை கொண்டு செல்ல திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
சேலம் மாநகர குப்பைகள் நாள்தோறும் 500 டன் குப்பைகள் எறியூட்டப்படுவது முட்டாள் தனம். குப்பைகளால் மாநகர மக்கள் பல ஆபத்தான விளைவுகளை சந்தித்து வருகின்றனர். குப்பைகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மது, போதை பொருட்கள், ஆன்லைன் மோசடி என மும்முனை தாக்குதல் நடைபெற்று வருகிறது. 9 மாதத்தில் 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பு வழங்கப்பட்டது. வேலை வாய்ப்பும் வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு நிலத்தை திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என தெரிவித்தார்கள்.
அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை இருந்தால் உடனடியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் கொண்டு வந்த நோக்கமே கல்வி வியாபாரம் ஆக கூடாது என்பதே, ஆனால் இந்தியா முழுவதும் 1 லட்சம் கோடிக்கு மேல் பயிற்சி நிறுவனங்கள் மூலம் மோசடி நடைபெறுகிறது,
அது போக மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் என கல்வி வணிகம் ஆக்கப்பட்டது.. நீட் தேர்வு வந்த பிறகும் தகுதியற்ற நபர்கள் கூட மருத்துவம் படிக்கும் அவலம் நிவிவருகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தில் கல்வி கட்டமைப்பை உருவாக்கவில்லை, அதனால் சிறிது காலம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஆளுநருக்கும் முதல்-அமைச்சருக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும். அதில் இருவரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும்.
தமிழகத்திற்கு சாபகேடாக அமைந்துள்ள மேகதாது அணையை எக்காரணம் கொண்டும் கட்டவிடமாட்டோம். தமிழகத்தில் அரசியல் செய்து வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று அதை தடுத்து நிறுத்துவாரா. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு மாற்று பா.ம.க.தான். பாரதிய ஜனதா கிடையாது.
அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்றுவார்கள் என நம்பி தி.மு.க.விற்கு வாக்களித்தனர். ஆனால் அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் நிதி அமைச்சர் வெளிப்படையாக ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றமுடியாது என அறிவித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாவட்ட செயலாளர்கள் ரத்தினம், விஜயராசா, ராஜசேகரன், பசுமை தாயக மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.
மொத்தமாக 669 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக மாணவர் சேர்க்கையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், ஜூன் 13-ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14-ஆம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும் குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பான செயலாகும்.
எனவே, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.
கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும் (2024) பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றங்களுக்கான அடித்தளமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே அதற்கான பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் களம் இறங்கும் தேசிய கட்சிகளான பா.ஜனதாவும், காங்கிரசும் தமிழகத்தில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை கூட்டணி விவகாரத்தில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருந்தார்கள்.
ஏனெனில் தான் விரும்பிய உடன்பாட்டுக்கு சம்மதிக்காவிட்டால் தனித்து தேர்தல் களத்தை சந்திக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதற்கு உதாரணம் 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்.
பிரதமர் மோடி நல்ல நண்பராக இருந்தும் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் ஜெயலலிதா தனித்து தேர்தலை சந்தித்தார். ‘மோடியா? இந்த லேடியா?’ என்று நேருக்கு நேர் சவால் விட்டார். அதில் இமாலய வெற்றி பெற்று சாதித்தார். அதாவது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. கூட்டணி விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கும், சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.
2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியைத் தான் சந்தித்தார்கள். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையவில்லை. அ.தி.மு.க. 66 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக மாறியது.
ஆனால் பா.ஜனதா முதல் முறையாக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் தனது வெற்றி கணக்கை தொடங்கியது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்ந்தாலும் இணக்கமான மனநிலையில் இல்லை என்பதே உண்மை. தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துப்போனாலும் கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் தான் வெற்றி பெற முடியவில்லை என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
அது மட்டுமல்ல ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைவர்களும் இல்லாத நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்துவதோடு பாராளுமன்ற தேர்தலில் கணிசமான எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது.
பா.ஜனதாவுக்கு தலைவராக பொறுப்பேற்ற இளம் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையும் அதற்கு ஏற்ற வகையில் அதிரடியாக அரசியல் களத்தில் காய்களை நகர்த்தி வருகிறார்.
தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதாதான். இப்போதைய எதிர்க்கட்சியும் பா.ஜனதா தான் என்று பேசும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்கி இருப்பது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்கள் 24 பேர் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வார்கள் என்று அண்ணாமலை பேசி வருவது அ.தி.மு.க.வை கூடுதல் கலக்கமடைய வைத்துள்ளன.
இந்த நிலையில் தான் அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும் ஆவேசமாக மோதி வருகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜனதா இல்லாத வலுவான கூட்டணியை உருவாக்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முயன்று வருகிறார்.
இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி அமைத்தும், தனித்து போட்டியிட்டும் எதிர்பார்த்த அளவுக்கு பா.ம.க.வால் சாதிக்க முடியாமல் போனது.
இப்போது கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அன்புமணி தனது தலைமையில் கட்சியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். அதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் களத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே தி.மு.க. அணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. எனவே பா.ஜனதா இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் பா.ஜனதா அதிருப்தி ஓட்டுகள், தி.மு.க. அதிருப்தி ஓட்டுகள் இரண்டையும் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கருதுகிறார்.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற போதே இருவரும் இந்த விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது.
கம்யூனிஸ்டு கட்சியினரும் பா.ஜனதா அல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.