என் மலர்
நீங்கள் தேடியது "தைவான்"
- தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தைபே நகரம்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சீனா மற்றும் அதன் தன்னாட்சி பிராந்தியங்களான ஹாங்காங், மக்காவோ ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தைவான் நாட்டினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் சீனாவில் வசித்து வருகின்றனர். எனவே இரு நாடுகள் இடையே தினமும் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் தைவான் அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மீன்பிடி படகு மற்றும் பணியாளர்களை விடுவிக்க தைவான் கடலோர காவல்படை சீனாவிடம் கேட்டு கொண்டது.
- விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தைவானின் கடலோரக் காவல்படையிடம் சீனா தெரிவித்து உள்ளது.
சீனாவின் தென் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவுதான் தைவான். தனக்கு சொந்தமான மாகாணமாகவே தைவானை சீனா கருதுகிறது. அதனாலே தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது.
தெற்கு சீனாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களே தைவானின் ஆதி குடிமக்கள் என்பதாலும், சீனாவின் சிங் வம்சம் ஆண்ட பகுதியே தைவான் என்பதாலும், தைவான் தங்களுக்கு தான் சொந்தம் என்று நீண்ட காலமாகவே சீனா உரிமைக் கொண்டாடி வருகிறது.
இதனால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சீனக் கடற்கரையில் தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென் தீவின் கடற்பரப்பில் இருந்து தைவானை சேர்ந்த மீன்பிடிப்படகு மற்றும் அதில் இருந்தவர்களை சீனா சிறைபிடித்துள்ளது.
இதையடுத்து மீன்பிடி படகு மற்றும் பணியாளர்களை விடுவிக்க தைவான் கடலோர காவல்படை சீனாவிடம் கேட்டு கொண்டது. ஆனால் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தைவானின் கடலோரக் காவல்படையிடம் சீனா தெரிவித்து உள்ளது.
- தைவானில் ஒரே நாளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கம், கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தைவானின் கிழக்கு நகரான ஹூவாலியனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்தது. ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். எனினும், இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
நிலநடுக்கம் காரணமாக தலைநகர் தைபேவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுரங்க சேவைகள் குறைந்த வேகத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டன. நிலநடுக்கம் பூமியில் இருந்து 9.7 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி இருக்கிறது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், அந்நாட்டு வரலாற்றில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்படாத மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
- தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது
- லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது
இந்தியவனுடன் தைவான் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி, சென்னையை தொடர்ந்து தற்போது மும்பையிலும் தைவான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது.
தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தைவான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும். பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவது கூடாது.
சீன-இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
- பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.
பிஜீங்:
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
ஆயுத விற்பனையில் அடுத்தகட்டமாக, 385 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு முதல் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
சீனாவின் தைவான் பிராந்தியத்திற்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது, ஒரே ஒரு சீனா என்ற கொள்கை, சீனா-அமெரிக்க கூட்டறிக்கைகள், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை கடுமையாக மீறும் செயலாகும். சர்வதேச சட்டத்தையும் கடுமையாக மீறுவதாகும்.
ஆயுத விற்பனையானது தைவான் பிரிவினைவாத சக்திகளுக்கு மிகவும் தவறான சிக்னலை அனுப்புகிறது. இதனால் தைவான் ஜலசந்தி முழுவதும் சீனா-அமெரிக்க உறவுகள், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.
தைவானுக்கு ஆயுதம் வழங்குவதையும், தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.
இவ்வாறு சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தைவானைச் சுற்றி சீனா தனது ராணுவ நடவடிக்கையை அதிகரித்து அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடனான தனது ராணுவ உறவுகளை விரிவுபடுத்த தைவான் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
- தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
- தைவானுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்:
சீனாவில் இருந்து 1949-ல் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தைவான் பிரிந்தது. ஆனாலும் சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அடைய தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் தைவானுடன் பல்வேறு நாடுகள் தங்களது தொடர்பை வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, தைவானுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சீன தொலைக்காட்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு செய்தி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீனர்களான நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
தைவானை தனது பிரதான நிலப்பகுதியின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோருகிறது. மாற்றம் மற்றும் கொந்தளிப்பு ஆகிய இரண்டும் உள்ள உலகில் சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடாக, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்தை தீவிரமாக ஊக்குவித்து, உலகளாவிய தெற்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குகிறது என தெரிவித்தார்.
- மே 2024-ல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும்.
- 36 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தற்போது ஹுவாங் லின் காய் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் சான்சாங் மாவட்டத்தில் ஹுவாங் லின் காய் (32) என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது முன்னாள் காதலியையும் அவரது தாயையும் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஹுவாங் லின் காய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் செங் மிங்-சியென் மரண தண்டனையை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி தைபே தடுப்பு மையத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹுவாங் ஈடுபட்ட குற்றங்கள் கொடூரமானவை மற்றும் இரக்கமற்றவை. அவை மனிதாபிமானமற்றவை, மிகவும் கொடூரமானவை மற்றும் குற்றம் மிகவும் தீவிரமானது என்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் நீதித்துறை தெரிவித்துள்ளது.
மே 2024-ல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும்.
2020 ஏப்ரல் 1-ந்தேதிக்குப்பின் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும். 36 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தற்போது ஹுவாங் லின் காய் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனையைப் பயன்படுத்துவது தைவானின் மனித உரிமைகளுக்கு "பெரிய பின்னடைவு" என்று உரிமைக்குழுக்கள் விமர்சித்துள்ளன.
- மீன்பிடி ஈட்டிகளைப் பயன்படுத்துவது அவற்றை கொல்ல மிகவும் 'மனிதாபிமான வழி' என்று கூறியுள்ளது.
- முதலில் இவை தைவானுக்கு செல்லப்பிராணிகளாக கொண்டுவரப்பட்டன.
உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவான். அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas) (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்லும் முடிவை தைவான் அரசு அறிவித்துள்ளது.
தைவானின் வனவியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, தீவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2,00,000 பெரியவகை பச்சோந்திகள் இருக்கின்றன.

கடந்த ஆண்டு சுமார் 70,000 பெரியவகை பச்சோந்திகளை சிறப்பு வேட்டை குழுவினர் கொன்றனர். ஒரு பச்சோந்தியை கொல்வதற்கு தலா 15 டாலர்கள் [ 1300 ரூபாய் ] அவர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல தைவான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வகை பச்சோந்திகள் வாழும் கூடுகளை இனங்காண உள்ளூர் மக்கள் உதவ வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளை தாயகமாகக் கொண்ட இவ்வகை பச்சோந்திகள் தைவானில் வேறெந்த அதிக அளவில் பெருகி, உள்ளூர் பயிர்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தைவானில் இயற்கையாகவே வேட்டையாடும் எந்த உயிரினமும் அதிகம் இல்லாதது இந்த பச்சோந்திகளின் பெருக்கத்துக்கு வழிவகுத்துள்ளது.

முதலில் இவை தைவானுக்கு செல்லப்பிராணிகளாக கொண்டுவரப்பட்டன. இவற்றை ஒரு வருடத்திற்கு மேல் கூண்டில் வைத்து பராமரிக்க முடியாது. எனவே அவை வளர்ந்த பின் , மக்கள் அவற்றை காட்டில் விட்டனர். தொடர்ந்து இவை உள்ளூர் விவசாய வயல்களையும் சுற்றுச்சூழலையும் சேதப்படுத்தத் தொடங்கின.
இவை கூர்மையான நகங்கள் மற்றும் பற்களை கொண்டிருந்தாலும் முரட்டுத்தனம் இருக்காது. பெரும்பாலும் பழங்கள், இலைகள் மற்றும் செடிகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும். பிங்டங் கவுண்டி போன்ற தைவானின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இவை அதிகம் உள்ளன.

பெரியவகை பெண் பச்சோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும். அவை 20 ஆண்டுகள் வரை வாழும். சுமார் 5 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும். தற்போது 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல அரசு முடிவெடுத்துள்ள நிலையில் மீன்பிடி ஈட்டிகளைப் பயன்படுத்துவது அவற்றை கொல்ல மிகவும் 'மனிதாபிமான வழி' என்று கூறியுள்ளது.
- உடும்புகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை அவை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.
- உடும்புகளில் 60 சதவீதத்தை அழிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தைபே:
தென்கிழக்கு ஆசியாவில் தீவு நாடாக தைவான் உள்ளது. மிக சிறிய தீவு நாடான தைவானில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விவசாய தொழிலை மேம்படுத்தும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் நாட்டில் உடும்புகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை அவை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் அந்த நாட்டின் விவசாயிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள உடும்புகளில் 60 சதவீதத்தை அழிக்க தைவான் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அந்த நாட்டின் வனத்துறை கணக்கீட்டின்படி 2 லட்சம் உடும்புகளில் இருந்து 1.20 லட்சம் உடும்புகளை கொல்ல உள்ளது.
இதற்காக வேட்டைக்காரர்கள் நியமிக்கப்பட்டு ஒரு உடும்புக்கு ரூ.1,300 (15 அமெரிக்க டாலர்) சன்மானமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- சீன பல்கலைக்கழகங்களுக்கு தைவான் அரசு தடை விதித்தது.
தைபே நகரம்:
தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தைவான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.
எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களுக்கு தைவான் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக் கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதனுடன் தைவானில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என தெரிவித்துள்ளது.
- தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
- சீனா தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது.
பீஜிங் :
சீனாவில் 1927-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது.
இதனால் உலகின் பிற நாடுகள் தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் அதை மீறி தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார்.
இதனால் கடும் கோபம் அடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சியை தொடங்கியது. சீன நேரப்படி கடந்த 4-ந் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போர் பயிற்சி 8-ந் தேதி மதியம் 12 மணி வரை தொடரும் என சீன ராணுவம் அறிவித்தது.
அதன்படியே நேற்று முன்தினம் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து 4 நாட்களாக சீனா ராணுவம் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது. சீன ராணுவத்தின் இந்த போர் பயிற்சி தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் சீன ராணுவம் நேற்று தைவானை சுற்றி புதிய போர் பயிற்சியை தொடங்கியது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மூலம் கடல்வழி தாக்குதல் மற்றும் தொலைதூர வான்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த போர் பயிற்சி நடத்தப்படுவதாக சீன ராணுவம் கூறியது. அதேசமயம் இந்த புதிய போர் பயிற்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சீன ராணுவம் தெரிவிக்கவில்லை.
தைவானை சுற்றி தொடர்ந்து 4 நாட்கள் போர் பயிற்சியை நடத்திய பின்னர் சீனா மீண்டும் மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் தைவான்-சீனா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.
தென் கிழக்கு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் தனி நாடாக இயங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவானுக்கு வேறு நாட்டு தலைவர்கள் செல்ல கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்தது. தைவான் மீது பொருளாதார தடையையும் சீனா விதித்தது.
தைவானை கப்பல்கள், விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட முப்படையினர் 6 முனைகளில் சுற்றி வளைத்து உள்ளனர். அவர்கள் போர் பயிற்சியை மேற்கொண்டனர்.
கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சீனா சோதனை நடத்தியதாக தைவான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் குண்டுகளை வீசியும் , பீரங்கி தாக்குதல் நடத்தியும் சோதனையை மேற்கொண்டது. வருகிற 7-ந்தேதி வரை இந்த போர் பயிற்சி நடைபெறும் என சீனா தெரிவித்து உள்ளது.
இதனால் எந்த நேரமும் தைவான் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற பீதி உருவாகி உள்ளது. பொது மக்களும் என்ன நடக்கப் போகிறதோ தெரிய வில்லையே என்ற அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
ரஷியா-உக்ரைன் போரை தொடர்ந்து சீனா-தைவான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதால் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல் தொடர்பு ஒருங் கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:-
ஒரே இரவில் தைவான் நீர்ச்சந்தி பகுதியில் சீனா 11 பாலிஸ்டிக் ஏவுகணை ஏவி உள்ளது. இது தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நான்சி பெலோசியின் வருகையை சாக்கு போக்காக சொல்லி சீனா ஆத்திரமூட்டும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
இதை அமெரிக்கா ஏற்கனவே எதிர்பார்த்தது தான். சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்காவும் தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பவும் மாட்டோம். தைவானின் நலன் மற்றும் பிராந்தியத்தின் நலன் மட்டுமே எங்களது குறிக்கோள்.
மேலும், பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.