என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானிசாகர் அணை"

    • கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விட ப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.தொடர்ந்து இன்று 10 -வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது

    அணைக்கு வினாடிக்கு 2600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ள ளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
    • தண்ணீரின் வேகம் குறைந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் கீழ்பவானி வாய்க்காலில் சத்தியமங்கலம் அடுத்த தங்க நகரம் என்ற பகுதிக்கு கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தங்க நகரம் என்ற இடத்தில் உள்ள கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்லும் அடிப்பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வேகமாக சென்றது. மேலும் வாய்க்காலின் மேல் பகுதியில் பெரிய அளவிலான குழி ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்க நகரம் பகுதியில் கீழ்வாய்க்கால் பகுதியில் அதிகளவில் குவிந்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மேலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பணியாளர்கள் மூலம் குழி மேலும் பெரிதாகி உடைப்பு ஏற்படாமல் இருக்க முதல் கட்டமாக கிளை வாய்க்கால் அடைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீரின் வேகம் குறைந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    மேலும் இது குறித்து தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை நீர் வளப்பிரிவு பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து உடைப்பை அடைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதைதொடர்ந்து மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் மேலும் கசியாத வகையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் முழுமையாக நின்றதும் குழியை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் குழியை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்த வால்வு சரிசெய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.48 அடியாக உயர்ந்துள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 2,849 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,849 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.48 அடியாக உயர்ந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 103 அடியை நெருங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 

    • 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு 12.8.2022 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
    • கால்வாயில் மைல் 6.4-055-ன் இடதுகரையில் 2 அடி விட்டம் அளவில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது.

    காங்கயம் :

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2022-23-ம் ஆண்டின் முதல் போக நஞ்சை பாசனத்திற்கு, 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.8.2022 முதல் 9.12.2022 வரை 120 நாட்களுக்கு தண்ணீ ர் வழங்கும் பொருட்டு 12.8.2022 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    இந்நிலையில் 30.10.2022 காலை 11 மணியளவில் கீழ்பவானித்திட்ட பிரதான கால்வாயில் மைல் 6.4-055-ன் இடதுகரையில் 2 அடி விட்டம் அளவில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கும் வண்ணம் உடனே பவானிசாகர் அணையிலிருந்து வழங்கப்பட்டிருந்த 2300 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் மைல் 6.4-055 குறைவதற்கு முன்பே இந்த பள்ளத்தின் அளவு 6 அடி பள்ளமாக பெரிதாகியது, அதனால் அப்பகுதிகளின் கரைகளில் எவ்வித உடைப்பும் ஏற்படவில்லை . இதனால், விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளின் உடைமைகளுக்கும் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை .

    தற்பொழுது தண்ணீர் பிரதான கால்வாயின் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் இந்த பழுதை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சேதமடைந்த தலை மதகு சுவர் மற்றும் பேரல்ஆகியவை உடனடியாக சீரமைக்கப்பட்டு3 நாட்களில் பவானிசாகர் அணையிலிருந்து பிரதான தண்ணீர் மீண்டும் திறக்கப்படும். மேலும், தற்பொழுது அனைத்து பாசனப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால், பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்படுவதால், விசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கீழ்பவானி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
    • நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது.

    அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு 2,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 4,791 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக மட்டும் 300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.

    தற்போது பவானிசாகர் அணை 104 அடியை நெருங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்கி வருகிறது.
    • பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்துகிறது.

    அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,222 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 600 கன அடி இன்று முதல் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 300 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை நெருங்கி வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 105 அடியை நெருங்கியதும் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்படும் என பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. நேற்று மாலை முதல் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இதனால் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 4,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விட வாய்ப்புள்ளது.

    இதனையடுத்து பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை பொதுப்பணி துறையினர், வருவாய் துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது.

    நேற்று மாலை முதல் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.43 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 6,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விட வாய்ப்புள்ளது. இதனையடுத்து பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை எந்த நேரத்திலும் 105 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • பவானி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 105 அடியை நெருங்கி வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 509 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை எந்த நேரத்திலும் 105 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பவானி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் உஷார் படுத்தப்பட்டு அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • பவானி ஆற்றங்கரை விவரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.39 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,598 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பெற்று வருகிறது.

    பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பவானி ஆற்றங்கரை விவரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் பவானி ஆற்றின் கரையோரங்களில் வருவாய்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது.
    • பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    104.50 அடிக்கு மேல் சென்றால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு அப்படியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பவானி கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை நேற்று இரவு கடந்தது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் பவானிசாகர் அணை வரலாற்றில் 28-வது முறையாக 104 அடியை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் 5-வது முறையாக பவானிசாகர் அணை 104 அடியை எட்டியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,549 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு உபரிநீராக 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரங்களில் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பவானி ஆற்றல் உபரி நீர் திறக்கப்பட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×