என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தவ் தாக்கரே"

    • இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
    • எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது.

    இந்தி திணிப்பு

    மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமலில் உள்ளது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையின் கீழ் 3வது மொழியாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில பாஜக கூட்டணி அரசு உத்தரவிட்டது.

    மேலும் 2025 - 26 கல்வியாண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும், 2028 - 29ஆம் கல்வியாண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    ராஜ் தாக்கரே

    நேற்று கலந்துரையாடல் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, 'சிவசேனாவின் நான் இருந்தபோது உத்தவ் தாக்கரேவுடன் பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது என்னுடன் இணைந்து பணியாற்ற உத்தவ் தாக்கரே தயாராக இருக்கிறாரா?

    எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது. மராத்தியா்களுக்காக போராடுவதை ஒப்பிடுகையில் எங்களின் பிரச்னைகள் மிகவும் சிறியது. மீண்டும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது கடினமான காரியமல்ல' என்று தெரிவித்தார்.

    உத்தவ் தாக்கரே

    அதே சமயம் நேற்று தனது கட்சி உறுப்பினா்கள் மத்தியில் சனிக்கிழமை பேசிய உத்தவ் தாக்கரே, சிறிய பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு மராத்தியா் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவா்களுடன் ஓரணியில் திரள நானும் தயாா்.

    மக்களவைத் தேர்தலின் போது, மகாராஷ்டிராவின் தொழிற்சாலைகள் குஜராத்துக்கு இடம்பெயர்கின்றன என்று நாங்கள் சொன்னபோது, அவர்கள் (ராஜ் தாக்கரே) அப்போது எதிர்த்திருந்தால், இன்று மத்திய அரசு ஆட்சியில் இருந்திருக்காது.

    மகாராஷ்டிராவின் நலனைப் பற்றி சிந்திக்கும் மத்திய மற்றும் மாநில அளவில் ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைத்திருப்போம். மக்களவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு ஆதரவளித்துவிட்டு, பேரவைத் தோ்தலின்போது அவா்களை எதிா்த்துவிட்டு மீண்டும் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் எதுவும் மாறாது.

    முதலில் மகராஷ்டிரத்துக்கு எதிராக செயல்படுபவா்களை இங்கு வரவேற்காதீா்கள். அதன் பிறகு மாநில நலன் குறித்துப் பேசலாம். எனக்கு யாருடனும் மோதல் இல்லை. பாஜகவுடனான கூட்டணி வேண்டுமா? அல்லது எங்கள் கட்சியுடன் கூட்டணி வேண்டுமா என்பதில் மராத்திய மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

    சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் இணைவது குறித்து பேசியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்கள் இணைவதில் மகிழ்ச்சியே என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.    

    • மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
    • கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.

    சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே நாஷிக்கில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    * மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    * கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.

    * நான் பாஜக-வில் இருந்து பிரிந்து விட்டேன். இருந்தாலும் உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்.

    * பாஜகவின் சிதைந்து வரும் இந்துத்துவாவை நான் ஏற்கவில்லை.

    * சிவசேனா இல்லாமல், பாஜக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிலையை எட்டியிருக்காது.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியானது.
    • அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை.

    வக்பு சட்டத்தை அமல்படுத்திய பிறகு, பாஜக இப்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களின் நிலத்தை தங்கள் நண்பர்களுக்கு கொடுக்க முயல்வதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் வக்பு வாரியத்தை விட கத்தோலிக்க திருச்சபை இந்தியாவில் அதிக நிலங்கங்கள் வைத்துள்ளதாக கட்டுரை ஒன்று வெளியானது.

    இதை குறிப்பிட்டு பேசிய உத்தவ் தாக்கரே, " பாஜக 45-வது நிறுவன தினத்தை கொண்டாடும் வேளையில், ராமரின் வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும்.

    வக்பு சட்டத்திற்கு பிறகு அடுத்த கட்டமாக கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களின் நிலத்தின் மீதும் கண் வைப்பது இருக்கும். அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு  அவற்றின் முதன்மையான நிலங்களை வழங்குவார்கள். அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை. அவர்கள் அதைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர். அனைவரும் கண்களைத் திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • மசோதா மீதான மோசடி நிலைப்பாடு, சொத்துக்களை அபகரித்து அவர்களுடைய தொழில் அதிபர் நண்பர்களுக்கு கொடுக்கும் சதியை நாங்கள் எதிர்க்கிறோம்.
    • பாஜக 3ஆவது முறையாக மத்தியில் வெற்றி பெற்று, இதுவரை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்து-முஸ்லிம் பிரச்சனையை எழுப்புகிறது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கவில்லை எனக் கூறிய சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவின் சதியை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது "மசோதா மீதான பாஜக-வின் மோசடி நிலைப்பாடு, சொத்துக்களை அபகரித்து அவர்களுடைய தொழில் அதிபர் நண்பர்களுக்கு கொடுக்கும் சதியை நாங்கள் எதிர்க்கிறோம்.

    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்கள் மீது காட்டும் அக்கறை, முகமது அலி ஜின்னாவை அவமானப்படுத்தும். பாஜக 3ஆவது முறையாக மத்தியில் வெற்றி பெற்று, இதுவரை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்து-முஸ்லிம் பிரச்சனையை எழுப்புகிறது.

    முஸ்லிம்களை விரும்பவில்லை என்றால் பாஜக அதன் கொடியில் உள்ள பச்சை நிறத்தை அகற்ற வேண்டும். அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பால் ஏற்பட இருக்கும் ஆபத்து, அதனை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும்" என்றார்.

    • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.
    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

    மும்பை:

    ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. வரும் 4-ம் தேதியுடன் இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது.

    இந்த சூழலில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

    பா.ஜ.க. எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வக்பு திருத்த மசோதா நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்போது உத்தவ் பாளாசாகேப் தாக்கரேவின் சிவசேனா, இந்து சாம்ராட் பாளாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுமா அல்லது ராகுல் காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடருமா என பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.

    • சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது.
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.

    நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை காடர் (துரோகி) என்று நகைச்சுவையாக விமர்சனம் செய்தார்.

    தில் தோ பாகல் ஹை படத்தின் பிரபலமான இந்தி பாடலை பாடி சிவசனோ மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுகள் குறித்தும் மற்றும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் நகைச்சுவையாக நிகழ்த்தினார் நடிகர் குணால் கம்ரா (stand-up comedian).

    சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.

    அவர்கள் ஒரு வாக்காளருக்கு 9 பொத்தான்களை கொடுத்தார்கள். இதனால் எல்லோரும் குழப்பம் அடைந்தார்கள் என்று அவர் மேலும் நிகழ்ச்சியின்போது நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் ரிக்ஷா ஒட்டுபவர், ஒருவரின் தந்தையை திருடிய துரோகி என்றார்.

    இந்த நிகழ்ச்சியை கேட்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய பகுதியை சூறையாடி சேதப்படுத்தினர். மேலும் ஷிண்டேவை சாடி அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.

    மேலும் 2 நாட்களில் நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரை சிவசேனா தொண்டர்கள் மகாராஷ்டிராவில் சுதந்திரமாக வெளியே நடமாட விடமாட்டார்கள் என்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுதி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியதில் தவறு ஏதும் இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    குணால் கம்ரா வெறுமன தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் உண்மைகளைக் கூறி பொது மக்களின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    கம்ரா எதுவும் தவறாக செய்யவில்லை. இந்த துரோகிகள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை இழிவுப்படுத்திய பிரஷாந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் ஆகியோரை பார்க்கவில்லை.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாஷந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் சத்ரபதி சம்பாஜி மகாராஜா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனை கருத்து தெரிவித்ததாக, இருவரையும் கைது செய்ய வேண்டும் போராட்டம் நடைபெற்றது சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    • ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.
    • அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டதாகவும், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    நேற்று நடந்த சட்டமேலவை கூட்டத்தின்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியிடம் தன்னை விசாரணை அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றுமாறு மன்றாடினார். மோடியிடம் தலைதாழ்த்தி மன்னிப்பு கேட்ட தாக்கரே மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரவுக்கு திரும்பியதும் தனது முடிவை உத்தவ் மாற்றிக்கொண்டார்.

    ஆட்சி அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே, சத்திரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைகளில் இருந்து வலுவி அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை பின்பற்றி காங்கிரசுடன் சேர்ந்தார்.

    காங்கிரஸிடம் சிவசேனா கொடுத்த வில் அம்பை நாங்கள்தான் வீரத்துடன் மீட்டெடுத்தோம். இப்போது உத்தவ் சிவசேனா சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை. ஏனெனில் அவர்கள் அவுரங்கசீப்பின் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

    இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே கூறியவற்றை உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், சிவசேனாவை உடைத்ததை நியாயப்படுத்தி வரலாற்றை திரிக்கும் முயற்சி இது. அதிகார பசிக்காக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவுக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பாலசாகேப் தாக்கரேவின் நற்பெயரை கெடுத்து சிவசேனா சித்தாந்தத்தில் இருந்து நழுவியவர் ஷிண்டே என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 2022 இல் சிவசேனாவை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணிக்கு தாவிய ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது.
    • அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வெற்றி பெற்றுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிட்டார்.

    இதற்கிடையே, இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த வெற்றி போராட்டத்தின் ஆரம்பமாகும். இனி வரும் அனைத்துப் போராட்டங்களிலும் ஒற்றுமையாக போராட வேண்டும் என சிவ சைனியர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இந்தத் தேர்தலுக்காக எங்கள் கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டன. ஆனால் இதை விரும்பியவர்கள் தேர்தல் வளையத்திற்கு அருகில் இல்லை. இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் எங்களுக்கு (உத்தவ் தரப்பு) ஆதரவளிப்பதை காட்டுகின்றன என தெரிவித்தார்.

    • மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.
    • மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.

    புதுடெல்லி :

    சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.

    உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், மனுதாரரின் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பளிக்காமல் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் ராஜு நய்யர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, கட்சியின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இருதரப்பினரின் நலன் கருதி நிலுவையில் உள்ள விவகாரத்துக்கு விரைந்து தீர்வுகாணவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

    • ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.
    • ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.

    மும்பை :

    சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் 10-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பால்தாக்கரேவின் மகனும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, சிவாஜி பார்க்கில் உள்ள பால்தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அவருடன் மனைவி ராஷ்மி தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இதற்கிடையே வீர சாவர்க்கர் தொடர்பாக ராகுல் காந்தி பேசியது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    ராகுல்காந்தியின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சாவர்க்கர் மீது எங்களுக்கு உள்ள மரியாதை மற்றும் பற்றை யாராலும் அழிக்க முடியாது.

    சுதந்திரத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் (ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா) சாவர்க்கர் மீது அன்பு காட்டுவது நகைப்பிற்குரியதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சாவர்க்கர் பற்றி பேச அவர்களுக்கு உரிமையில்லை. சாவர்க்கர் சுதந்திரத்துக்காக தியாகம் செய்தார். அந்த சுதந்திரம் இன்று பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. சாவர்க்கருக்கு மத்திய அரசு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் இரவே பால் தாக்கரே நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதி.
    • மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்

    மும்பை :

    மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு மராட்டியத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும் கவர்னருக்கு எதிராக பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிபாய் புலே, சாவித்திரிபாய் புலே ஆகியோரை அவமதித்து உள்ளார்.

    மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் துரோகத்தை, சத்ரபதி சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பித்து வந்ததுடன் ஒப்பிட்டு பேசுகிறார். இதுபோன்றவர்கள் தங்கள் பதவியில் தொடர்ந்து வருகின்றனர்.

    கவர்னர் இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதி. எனவே யாரை கவர்னராக நியமிக்க வேண்டும் என வரையறை இருக்க வேண்டும். அது தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மராட்டியத்தையும், அதன் அடையாளங்களையும் அவமதிப்பவர்களுக்கு எதிராக பொது மக்கள் ஒன்று சேர வேண்டும். இதுதொடர்பாக வரும் நாட்களில் அறிவிப்புகளை வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
    • இது ஒரு சட்டவிரோத அரசாங்கம்.

    மும்பை :

    சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. கடந்த ஆண்டு நடந்த அந்தேரி தொகுதி இடைத்தேர்தலின் போது 2 பிரிவினரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முறையிட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சிவசேனாவின் கட்சி பெயர், சின்னத்தை முடக்கியது. அதன்பிறகு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரில் தீப்பந்தம் சின்னத்துடன் உத்தவ் தாக்கரே தலைமையிலும், பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரில் வாள், கேடயம் சின்னத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது. தற்போது யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது.

    தங்கள் பக்கம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்கரே தரப்பு கூறுகிறது. இதேபோல மக்கள் பிரதிநிதிகள் தங்களிடம் அதிகம் இருப்பதால் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என ஷிண்டே தரப்பு வாதித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன.

    ஜனவரி 30-ந் தேதி வரை எழுத்து பூர்வமான வாதங்களை வைக்க தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கி உள்ளது.

    இந்தநிலையில் சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் நாளையுடன் (திங்கட்கிழமை) முடிகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியின் தலைவராக 5 ஆண்டு காலத்துக்கு பொதுக்குழு கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். எனவே கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சார்பில் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அனில் பரப் கூறுகையில், "உத்தவ் தாக்கரேயை கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள எங்களுக்கு சட்ட அனுமதி எதுவும் தேவையில்லை. உண்மையான சிவசேனா யார் என்ற வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தவுடன் சட்டரீதியாகவும் அவர் தலைவராவார்" என்றார்.

    தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடர்பாக நடந்து வரும் விசாரணை குறித்து ஆதித்ய தாக்கரே கூறுகையில், " ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிற்கும் யார் சிவசேனா என்பது தெரியும். சிவசேனா கட்சி பால்தாக்கரே, உத்தவ் தாக்கரே, அனைத்து தொண்டர்களுக்கும் சொந்தமானது. தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். உண்மை வெல்லும். ஆனால் எவ்வளவு காலம் இந்த சட்டவிரோத அரசு தொடரும்?. ஒருவரின் பேராசையால் இதுவெல்லாம் நடந்து இருக்கிறது. இது ஒரு சட்டவிரோத அரசாங்கம் " என்றார்.

    ×