search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்மபுரி"

    • பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்தனர்.
    • பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.

    தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே முருக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    அதன்படி, தர்மபுரி அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    மேலும், கம்பைநல்லூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆறுதல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
    • பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.

    தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே முருக்கம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் உடல் உறுப்புகள் சிதறி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    பட்டாசு குடோன் மொத்தமாக வெடித்துச் சிதறி ஏற்பட்ட விபத்தில் தீ மளமளவென பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழு தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வலியுறுத்தி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை 56-ன்படி அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக்குழுவினை கலைத்திட வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாசம், புகழேந்தி, யோகராசு, இளங்குமரன், சரவணன், நெடுஞ்செழியன், மகளிர் அணி துணை அமைப்பாளர்இளவேனில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி பணியாளர் சீரமைப்புக்குழுவின் செயல்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி உள்பட 7 தாலுகா அலுவலகங்கள் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில் கிருஷ்ணகிரி கிளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஆணை 56-ன்படி அமைக்கப்பட்ட பணியாளர் சீர்த்திருத்த குழுவை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் காமராஜ், பெருமாள், வருவாய் ஊழியர் சங்கம் சலிம்பாஷா, ஊரக வளர்ச்சித்துறை கோபாலகண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் மணி நன்றி கூறினார்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூர், சூளகிரி, ஊத்தங்கரை தாலுகா அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை, சாலைப்பணியாளர்கள் சங்கம், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
    ×