என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிம் ஜாங் உன்"

    • ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
    • ரஷிய மக்கள் வட கொரிய சிறப்புப் படைகளின் வீரத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.

    அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த சண்டையில் ரஷியா, வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.

    இந்த நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக ரஷிய தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோஸ் கூறியதாவது,

    வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் போரில் ரஷியாவுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக வட கொரியாவுக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். ரஷிய வீரர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய வட கொரிய வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை புதின் பாராட்டியுள்ளார்.

    அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், "ரஷிய மக்கள் வட கொரிய சிறப்புப் படைகளின் வீரத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    ரஷியாவிற்காக, நமது பொதுவான சுதந்திரத்திற்காக, தங்கள் ரஷிய சகோதரர்களுடன் ஆயுதமேந்திய நிலையில் போராடி தங்கள் உயிரைக் கொடுத்த மாவீரர்களை நாங்கள் எப்போதும் கௌரவிப்போம்" என்று புதின் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.
    • வட கொரிய அதிபருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன் என தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், வடகொரிய அதிபர் குறித்து அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை பல முறை சந்தித்து உச்சி மாநாடு நடத்தியுள்ளேன்.

    வட கொரியா அணு சக்தியை கொண்ட நாடு தான். அவருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன்.

    வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.

    இருப்பினும் வடகொரியாவின் அணு ஆயுத எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
    • குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,

    பியாங்யாங்:

    சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.

    இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

    • வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • இதில் அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளுடன் கலந்து கொண்டார்.

    பியாங்யாங்:

    வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்தப் பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், ராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

    இந்த ராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார்.
    • பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது

    உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்படும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் உலக தொழில்நுட்பத்தை அறியாத மக்களாக உள்ளனர்.

    இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். கிம் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட கொரிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள் உள்ளனர்.

    வடகொரிய தலைவர் கிம்மின் மூன்று குழந்தைகளில் இந்த மகளை மட்டுமே அவர் பொதுவெளியில் காட்டியிருக்கிறார். கிம் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    • கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
    • புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சியோல்:

    அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா தற்போது கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.

    இந்த மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரியா தீபகற்ப பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.

    கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன் அணுசக்தி போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.

    தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வடகொரியா நடத்தி இருக்கும் இந்த புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நடத்தப்பட்ட இந்த சோதனை ஜப்பானின் ஹக்கிடோ தீவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
    • வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ பகுதியில் விழலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது.

    டோக்கியோ:

    வடகொரிய நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனை, அணு ஆயத சோதனை போன்றவற்றை நடத்தி தனது நாட்டின் ஆயுத பலத்தை காட்டி வருகிறார்.

    குறிப்பாக அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதால் வடகொரியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளும் விதித்துள்ளது. இதனால் அந்த நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டாலும் கூட அதிபர் கிம் ஜாங் உன் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை.

    தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் எதிர்ப்பில் உள்ள வடகொரியா அந்த நாடுகளை சீண்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி நடத்தின. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரியா தனது ஆயுத சோதனையை தீவிரப்படுத்தியது.

    குறிப்பாக அமெரிக்கா-தென்கொரியாவின் ராணுவ பயிற்சி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த மாத இறுதியில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆப்டிவ் என்ற செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வடகொரியா இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐ.சி.பி.எம்.) சோதனை செய்துள்ளது. இந்த சோதனை போட்டியாளர்களுக்கு தீவிரமான அமைதியின்மை மற்றும் திகிலை ஏற்படுத்தும் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனையை அதிபர் கிங் ஜாங் உன் மேற்பார்வையிட்டுள்ளார். இந்த சோதனையின் மூலம் ராணுவ திறன், மூலோ பாய தாக்குதல் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நடத்தப்பட்ட இந்த சோதனை ஜப்பானின் ஹக்கிடோ தீவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ பகுதியில் விழலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் அந்த தீவில் வசிக்கும் லட்சகணக்கான மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கையை ஜப்பான் திரும்ப பெற்றது.

    • கொரியா போரில் வடகொரியாவின் 70-வது வெற்றி தின கொண்டாட்டத்தில் ரஷிய படை பங்கேற்பு
    • சீன ராணுவ வீரர்களும் வெற்றி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷாய்கு வடகொரியா சென்றுள்ளார். வடகொரிய சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். அப்போது ரஷிய அதிபர் புதின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்ற கிம் ஜாங் உன், பாதுகாப்புத்துறை மந்திரி தலைமையில் ராணுவ குழுவை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும், இருவர் இடையிலான ஆலோசனை மூலோபாய மற்றும் பாரம்பிய வடகொரியா- ரஷியா நட்பு குறித்ததாக இருக்கும் எனக் கூறினார்.

    கொரிய போரில் வடகொரியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில், 70-வது வெற்றி தினம் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய வீரர்கள், சீன வீரர்கள் வட கொரியாக சென்றுள்ளது.

    அதிபர் சந்திப்பிற்குப்பின் வடகொரியா ராணுவ மந்திரியை சந்தித்தார். அப்போது ரஷியா மந்திரி செர்கேய் ஷாய்கு ''உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம்'' என வடகொரியாவை பாராட்டினார்.

    • ஆயுத தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன், உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தல்
    • தென்கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் முடிவு

    கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது என்றால் அது மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.

    வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிற்கு பிடிக்கவில்லை. இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் சப்ளை செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் தென்கொரிய கடற்பகுதியில் காணப்பட்டது. இதற்கு வடகொரிய ஆட்சேபனை தெரிவித்தது.

    வருகிற 21 மற்றும் 24-ந்தேதிகளுக்கிடையில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இதை வடகொரியாவுக்கான அச்சுறுத்தல் என கிம் ஜாங் உன் பார்க்கிறார்.

    இந்த நிலையில் வடகொரியாவின் ராணுவ தலைமை ஜெனரலை நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ராணுவ தலைமை ஜெனரலாக நியமித்துள்ளார். இவர் பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்து வருகிறார். அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா? எனத் தெரியவில்லை.

    அதனோடு போருக்கு தயாராகும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஏற்ப ஆயுத தயாரிப்பை அதரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். அப்போது ஏவுகணை என்ஜின், பீரங்கி மற்றும் ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய கேட்டுக்கொண்டார்.

    அங்குள்ள மீடியா ஒன்று, கிம் ஜாங் உன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை வரைபடத்தில் சுட்டிக்காட்டியது போன்ற படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் கிம் ஜாங் உன் போர் தொடுப்பதற்கு, ராணுவத்தை தயார் படுத்துகிறார் என பார்க்கப்படுகிறது.

    வடகொரியா குடியரசு நிறுவப்பட்ட 75-ம் ஆண்டையொட்டி அடுத்த மாதம் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்த இருக்கிறது. ராணுவத்தை பலப்படுத்த பல்வேறு குழுக்களை வடகொரியா பயன்படுத்தி வருகிறது. போருக்கு தயாராகும் வகையில், தற்போதைய நவீன ஆயுதங்களை கொண்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது
    • அமெரிக்க அணுஆயுத கப்பல்கள் தென்கொரியா கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன.

    மேலும், அமெரிக்கா- தென்கொரிய ராணுவம் இணைந்து போர் பயிற்சியை கடந்த 21-ந்தேதி தொடங்கியுள்ளது. இந்த போர் பயிற்சி 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. இது வடகொரியாவை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் அடிக்கடி ஆயுத தொழிற்சாலைகளில் காணப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நவீன ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என நினைக்கிறார். இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியெடுக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். கப்பல் படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது உரையாற்றிய கிம் ஜாங் உன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்கா- தென்கொரியா- ஜப்பான் உச்சி மாநாட்டினை தொடர்ந்து, அமெரிக்கா அணு ஆயுதம் தொடர்பான மூலோபாய சொத்துகளை (போர்க்கப்பல் உள்பட) குவித்து, பயிற்சியில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்டார்.

    இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் வடகொரியா, தனது உளவு செயற்கைக்கோளை 2-வது முறையாக ஏவியது. பின்னர், இந்த முறையும் தோல்வியடைந்ததாக தெரிவித்திருந்தது.

    • ரஷியாவில் தொடர்ந்து அந்நாட்டின் ஆயுத திறனை பார்வையிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • உணவுத் துறை வணிகங்களையும் ஜிம் ஜாங் உன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உன், ரஷியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

    பின்னர் கிம்ஜாங் உன் ரஷியாவின் போர் விமான ஆலையை பார்வையிட்டார். அதே போல் ஏவுகணை தயாரிப்பையும் பார்வையிட்டார்.

    அவர், ரஷியாவில் தொடர்ந்து அந்நாட்டின் ஆயுத திறனை பார்வையிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் திறனை அதிகரிக்கக் கூடிய ஒப்ந்தத்தை இரு நாடுகளும் மேற்கொள்ளக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நேற்று ரஷியாவின் பசிபிக் கடற்படை பிரிவில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், அதிநவீன போர்க் கப்பல் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    இந்நிலையில், ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவுடன் கிம் ஜாங் உன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இது தொடர்பாக வடகொரியா அரசு ஊடகம் கூறும்போது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய பாதுகாப்பு மந்திரியுடன் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார் என்று தெரிவித்தது. இதில் அவர்கள் ஆயுத ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

    அப்போது அவரை ப்ரிமோரி பிராந்திய கவர்னர் ஓலெக் கோஜெமியாகோ சந்தித்து பேசினார். மேலும் அங்குள்ள உணவுத் துறை வணிகங்களையும் ஜிம் ஜாங் உன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த இரு வாரங்களுக்கு முன் கிம் ஜாங் உன் ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    • அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும்

    பியாங்யாங்:

    வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.

    இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கருதுகின்றன. இதனால் இந்த இரு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    இப்போர்ப்பயிற்சியானது அந்த நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. எனவே இதனை நேட்டோவின் ஆசிய பதிப்பை இவர்கள் உருவாக்கி வருவதாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் குற்றம்சாட்டினார்.

    தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலை கைவிட வேண்டும் என கிம் ஜாங் உன் கூறினார். இருப்பினும் இந்த போர்ப்பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் கிம் ஜாங் உன் ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ராணுவ தளங்களை பார்வையிட்ட அவர் அதிபர் புதின் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனால் இரு நாடுகளிடையே ஆயுத ஒப்பந்தம் நடைபெற்று இருக்கலாம் என தென்கொரியா குற்றம்சாட்டியது.

    இந்தநிலையில் வடகொரியாவில் பாராளுமன்றம் கூடியது. இதில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு பேசுகையில், `உலகம் புதியதொரு பனிப்போரில் நுழைகிறது. இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும். எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் என கூறினார். இதனால் அங்கு மேலும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

    ×