என் மலர்
நீங்கள் தேடியது "வகுப்புவாத அரசியல்"
- உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.
- தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்குக் சொல்லுங்க பார்ப்போம்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இன்று உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தின் போது குற்றம் முதல் சட்டம் வகுப்புவாத வன்முறைகள் அதிகரிப்பு குறித்து ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை இடிப்பது தொடர்பாக இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக நாக்பூரில் கலவரம் ஏற்பட்டது.
இதை முன்வைத்து அவையில் பேசிய சஞ்சய் சிங், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் 94 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், உங்கள் ஆட்கள் (பாஜகவினர்) நாடு முழுவதும் ஆத்திரமூட்டும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார்கள்.
உலகம் முழுவதும் விண்வெளியை அடைந்து, அதன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் ஒரு கல்லறையைத் தோண்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.
எந்த வரலாற்றை நீங்கள் கற்பிக்க விரும்புகிறீர்கள், தலித்துகள் முன்னாடி பானை கட்டிக்கிட்டு நடக்கணும், தலித்துகள் நம்மோட உட்கார்ந்து சாப்பிட முடியாது, கோவிலுக்குப் போக முடியாதுன்னு எந்த முஸ்லிம் சொன்னாருன்னு எங்களுக்கு சொல்லுங்க. எந்த முஸ்லிம், விலங்குகள் குளத்தில் தண்ணீர் குடிக்கலாம், ஆனால் ஒரு தலித் குடிக்க கூடாது என்று சொன்னான் என்று எனக்கு சொல்லுங்க பார்ப்போம்.

நீங்கள் வங்கதேசம்-வங்கதேசம் என்ற பாடலைத் திரும்பத் திரும்பப் பாடுகிறீர்கள். நாட்டில் நரேந்திர மோடியின் அரசு 11 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது, அமித் ஷா உள்துறை அமைச்சர் ஆக இருக்கிறார். இரு நாட்டின் எல்லை மேற்கு வங்காளத்துடனும் அசாமுடனும் உள்ளது. அப்படியிருக்க ஊடுருவல்காரர் எல்லையைக் கடந்து டெல்லிக்கு எப்படி வருகிறார்?.
பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் வசிக்கும் டெல்லி குற்றங்களின் கோட்டையாக மாறிவிட்டது. இங்குள்ள காவல்துறை நேரடியாக உள்துறை அமைச்சரின் கீழ் வருகிறது.
பெண்கள், குழந்தைகள் மற்றும் எஸ்சி-எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் இரட்டை எஞ்சின் அரசு செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.
- சத்தீஸ்கரில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
- பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் துணை முதல்வர் கலந்து கொண்டார்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாநகரட்சி மேயராக பதவியேற்ற பாஜகவின் பூஜா விதானி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, 'நாட்டின் இறையான்மையைக் காப்பேன்' என்பதற்குப் பதிலாக 'வகுப்புவாதத்தைக் காப்பேன்' என படித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கரில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக அமோக வெற்றி பெற்றது.
பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் அருண் சாவோ, மத்திய அமைச்சர் டோகன் சாஹு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூஜா விதானி மேயர் பதவியேற்பு விழாவில் 'இறையான்மை' என்பதை 'வகுப்புவாதம்' என்று தவறாக வாசித்ததை கவனித்த மாவட்ட ஆட்சியர் உடனே சுட்டிக்காட்டிய நிலையில் பூஜா விதானி மீண்டும் சரியாக வாசித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது
இந்தநிலையில் 4 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்து நாக்பூரில் நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-
விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமை, பால் விலை வீழ்ச்சி உள்பட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் தற்போதைய பிரச்சினைகள் எதுவும் புதிதானவை அல்ல, ஏற்கனவே இருப்பவைதான். இவற்றுக்கு சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் விவசாயிகளின் அதிகப்படியான உற்பத்தி ஆகியவையே காரணம்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீண்ட மற்றும் குறுகிய கால திட்டங்கள் வகுத்து போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் உற்பத்தி செய்யும் உபரி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும் பா.ஜனதா ஒருபோதும் சாதி, மதம் மற்றும் மொழி ஆகியவற்றை பயன்படுத்தி பிரிவினை அரசியலில் ஈடுபடாது எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் வகுப்புவாத அரசியலாலேயே பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். #BJP #NitinGadkari