என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பாதுகாப்பு ஆலோசகர்"

    • மைக் வால்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலக உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
    • மார்கோ ரூபியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் என்றார் அதிபர் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வருபவர் மைக் வால்ட்ஸ்.

    இதற்கிடையே, மைக் வால்ட்ஸ் தனது பதவியிலிருந்து விலக உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஏமனில் உள்ள எரிபொருள் சேமிப்பு வளாகத்தின் மீது அமெரிக்கப் படைகள் திட்டமிட்ட தாக்குதலை குறிப்பிட்டிருந்த சிக்னல் கேட் என்ற செய்தியிடல் பயன்பாட்டில் தற்செயலாக ஒரு பத்திரிகையாளரைச் சேர்த்ததை அடுத்து அவர் பதவி விலக முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

    தற்செயலாக சேர்க்கப்பட்ட பத்திரிகையாளர் அந்தப் போர் ரகசியங்களை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

    அதிபர் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் மூத்த தலைமைக் குழுவில் நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் மைக் வால்ட்ஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பாதுகாப்பு செயலாளராக உள்ள மார்கோ ரூபியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    • இந்திய உளவுத்துறையான RAW முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 1 முன்னாள் IFS அதிகாரி இடம்பெற்றுள்ளார்.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது.

    நேற்றைய தினம், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு மோடி முழு சுதந்திரம் அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. குழுவின் புதிய தலைவரமாக இந்திய உளவுத்துறையான RAW முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் இந்த குழுவில் 3 முன்னாள் ராணுவ அதிகாரிகள், 3 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள், 1 முன்னாள் IFS அதிகாரி இடம்பெற்றுள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் முக்கிய பங்காற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. 

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
    • அஜித் தோவல் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2019-ம் ஆண்டிலும் அவர் இப்பதவிக்கு நியனம் செய்யப்பட்டார். அவருக்கு மத்திய இணை மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு 3-வது தடவையாக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார்.

    அஜித் தோவல் 5 ஆண்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நீடிப்பார். அவரது பதவிக்காலம் பிரதமரின் பதவிக் காலத்துடன் இணைந்ததாக இருக்கும்.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய காலத்தில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த துல்லிய தாக்குதல், 2017-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக டோக்லாமில் நடந்த நேருக்குநேர் மோதல் சம்பவம், பாலகோட் பயங்கரவாத முகாம் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் அவரது பங்கு பெரும் பாராட்டை பெற்றது.

    1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்திச்சென்ற பயங்கரவாதிகளுடன் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கியமான அதிகாரியாக அஜித் தோவல் திகழ்ந்தார். இவர் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார்.

    ரஷ்யாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் பங்கஜ் சரண் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    1982 பேட்ச் ஐ.எப்.எஸ் அதிகாரியான பங்கஜ் சரண் மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கெய்ரோ, அமெரிக்காவிலும் தூதரக அதிகாரியாக பணியாற்றிய இவர் தற்போது ரஷ்யாவுக்கான இந்திய தூதராக உள்ளார். இந்நிலையில், பங்கஜ் சரண் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே, இரண்டு முறை பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த பங்கஜ் சரண் இரண்டாண்டுகள் இந்த புதிய பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜிந்திர குமார் கடந்த ஜனவரி மாதம் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில், மற்றொரு துணை ஆலோசகராக பங்கஜ் சரண் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×