என் மலர்
நீங்கள் தேடியது "கோவா"
- இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுகிறது.
- ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.
காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் சுவையான உணவு வகை கோபி மஞ்சூரியன். உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமான உணவாக கோபி மஞ்சூரியன் விளங்குகிறது. இந்த நிலையில், கோபி மஞ்சூரியன் உணவிற்கு கோவா மாநிலத்தை சேர்ந்த நகரம் ஒன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மசாலா பொருட்கள் பூசப்பட்ட காலிஃபிளவரை எண்ணையில் பொரித்து, பிறகு பொரித்தெடுக்கப்பட்ட காலிஃபிளவரை காய்கறி வகைகள், பல்வித சாஸ் சேர்த்து சமைக்கப்படுவதே கோபி மஞ்சூரியன் என்ற பெயரில் காரசாரமாக பரிமாறப்படுகிறது. இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுவதே இதற்கு தடை விதிக்க காரணமாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 2022-ம் ஆண்டு கோவாவை சேர்ந்த மபுசா நகரில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, இந்த உணவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும், கடைகளில் இந்த உணவு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.
மும்பையை சேர்ந்த நெல்சன் வாங் என்பவரே இத்தகைய உணவை கண்டறிந்தவர் என கூறப்படுகிறது. இவர் கோழி இறைச்சியை கொண்டு மஞ்சூரியன் செய்து 1970-க்களில் பரிமாறியதாக தெரிகிறது. பிறகு, இந்த உணவு காலிஃபிளவர் கொண்டும் சமைக்க துவங்கப்பட்டது. அந்த வகையில் கோபி மஞ்சூரியன், கோழி இறைச்சி வகைக்கு மாற்றான சைவ உணவாக மாறியது.
- நேபாள மேயர் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்
- கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோரிக்கை
கோவாவில் தங்கி இருந்த தனது மகளை காணவில்லை என்று நேபாளத்தின் தங்காதி துணை பெருநகரத்தின் மேயர் கோபால் ஹமால் தெரிவித்துள்ளார்.
36 வயதான ஆர்த்தி ஹமால் கோவாவில் உள்ள ஓஷோ தியான மையத்துடன் இணைந்து சில மாதங்களாக தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், மார்ச் 25 இரவு 9.30 மணியளவில் அஷ்வெம் பாலத்தின் அருகே இருந்த ஆரத்தி, அதற்கு பின் காணவில்லை என அவரது தோழி, கோபால் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
கோவாவில் வசிப்பவர்கள் தனது மகளை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும் என்று நேபாள மேயர் கோபால் ஹமால், சமூக வலைத்தளங்களில் உதவி கோரியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள கோவா காவல்துறை, ஆர்த்தியை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
திருப்பதி:
குஜராத், கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.
குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
கோவாவில் உள்ள 2 தொகுதியில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான புருஷோத்தம் ரூபாலா ராஜபுத்திரர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்து அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ராஜபுத்திர பெண்கள் ஒன்றாக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க போவதாகவும் எச்சரித்தனர்.
குஜராத் மாநிலத்தில் ராஜபுத்திரர்கள் 17 சதவீதம் வரை உள்ளனர். அவர்கள் எதிர்ப்பை பா.ஜ.க.வால் சமாளிக்க முடியாது என்பதால் பிரதமர் மோடி நேரடியாக அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
மேலும் பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு எதிராகவும் சில வேட்பாளர்களை பா.ஜ.க தலைமை களமிறக்கி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. அப்போது 25 இடங்களில் வெற்றியை எட்டியது. தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
அவர்கள் பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்தும் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது.
கோவாவில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி இங்கு தனித்து போட்டியிட்டதால் பா.ஜ.க.வுக்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் வடக்கு கோவாவில் பா.ஜ.க எளிதாக வெற்றி பெற்றது. தெற்கு கோவாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் இருப்பதால் காங்கிரஸ் அங்கு வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.
இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி மற்றும் கோவா பார்வர்டு கட்சி ஆதரவளித்து உள்ளன.
கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் 3 அம்சங்கள் பா.ஜ.க.வுக்கு தொந்தரவாக மாறி உள்ளன. விறுவிறுப்பான வாக்குப்பதிவும் நடந்து வருகிறது.
தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இந்த பிரச்சினைகளால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டதா என்பது தெரியவரும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
- சார்ட் சர்கியூட் காரணமாக கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது.
- தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கோவா அருகே வணிக சரக்குக்கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். IMDG எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் வந்துகொண்டிருந்த்து. அப்போது சார்ட் சர்கியூட் காரணமாக கப்பலின் முன்புற செக்ஷனில் தீப்பற்றியுள்ளது.
#WATCH | A major fire broke out on a container cargo merchant vessel about 102 nautical miles southwest of Goa. ICG is doing the fire fighting operation on the ship which carries international maritime dangerous goods amid bad weather and heavy rains. (Source: Indian coast… pic.twitter.com/viDy564oze
— ANI (@ANI) July 19, 2024
கப்பல் பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. தீ மளமளவென பரவிய நிலையில் இந்திய கடலோரக் காவல்படையினர் 2 படகுகளில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
#WATCH | A major fire broke out on a container cargo merchant vessel about 102 nautical miles southwest of Goa. Two ICG ships have been sailed with dispatch from Goa to augment firefighting efforts. Further details awaited. pic.twitter.com/Qyqxjd2GOJ
— ANI (@ANI) July 19, 2024
- சிஏஏ மூலம் இந்தியாவில் முதற்கட்டமாக கடந்த மே மாதம் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
- குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தில். மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.
சிஏஏ மூலம் இந்தியாவில் முதற்கட்டமாக கடந்த மே மாதம் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவரான ஜோசப் பிரான்சிஸ் பெரேராவிற்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இன்று குடியுரிமை வழங்கினார். கோவா மாநிலத்தில் இருந்து குடியுரிமை பெறும் முதல் நபர் ஜோசப் பிரான்சிஸ் பெரேரா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோசப் பிரான்சிஸ் பெரேரா கோவா மாநிலத்தை சேர்ந்தவர். 1961 ஆம் ஆண்டு போர்த்துகீஸ் நாட்டிலிருந்து கோவா விடுதலை அடைவதற்கு முன்பாக அவர் பாகிஸ்தானிற்கு படிப்பிற்காக சென்றுள்ளார். பின்னர் பாகிஸ்தானில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே குடியுரிமையும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு குடிபெயர்ந்த அவருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம், குடியுரிமை திருத்தச்சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
- ரெயில் பாம்பு இருந்தது தொடர்பான புகாருக்கு ரெயில்வே துறை பதில் அளித்துள்ளது.
ஜார்க்கண்டில் இருந்து கோவா நோக்கிச் சென்ற வாஸ்கோடகாமா வாராந்திர விரைவு ரெயிலின் ஏசி பெட்டியில் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு ரெயிலில் இருந்து அகற்றப்பட்டது.
ரெயிலில் பாம்பு இருந்ததை வீடியோ எடுத்த நபர் ஒருவர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை அவர் டேக் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என்று இந்த புகாருக்கு ரெயில்வே துறை பதில் அளித்துள்ளது.
இதே போல கடந்த மாதம் , ஜபல்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அச்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பலகைகள், கண்ணாடி கதவுகள் போன்றவை கொண்டு 130 சதுர மீட்டர் பரப்பளவில் உடனடி வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது.
- 21 பேர் கொண்ட குழு இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டது.
பனாஜி:
கோவா யூனியன் பிரதேசத்தின் பாம்போலிம் பகுதியில் உள்ள டாக்டர் ஷியாமளா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நேற்று ஒரு சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஒரு சுற்றுலா அமைப்பு, ஒரு கட்டுமான அமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகள் இணைந்து, திறன்பெற்ற தொழிலாளர்களை நம்பி இருக்காமல் ஒரு முன்மாதிரி வீட்டை உடனடியாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக பலகைகள், கண்ணாடி கதவுகள் போன்றவை கொண்டு 130 சதுர மீட்டர் பரப்பளவில் உடனடி வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. 10 மணி நேரம் 30 நிமிடங்களில் வீடு கட்டி முடித்து சாதனை படைக்கப்பட்டது. 21 பேர் கொண்ட குழு இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டது.
நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் இந்த கட்டுமானம், அதிகமான மக்களை கவரும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு பெருமிதம் தெரிவித்தது.
- ரஞ்சி கோப்பையில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா அணிகள் மோதின
- முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30.3 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா அணிகள் மோதின
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30.3 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரஞ்சி கோப்பையில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட் கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பேட்டிங் செய்த கோவா அணி 54 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்களை குவித்துள்ளது.
- தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது
- கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்
கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோவா கடற்கரையில் இருந்து 70 நாட்டிக்கல் மைல்கள் [nautical miles] தூரத்தில் வைத்து இந்த விபத்து நடந்துள்ளது.
13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
காணாமல் போனவர்களை தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது . தற்போது வரை 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) மூலம் தேடுதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
- திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியானது. 15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
இதனிடையே, கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டு இருந்தார். இதனால் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்.... எப்போ... எங்கே நடைபெறுகிறது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனையடுத்து திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 'நடிகையர் திலகம்' என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனையடுத்து திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. அவர் பட்டு வேட்டி சட்டையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது.

இதனிடையே நடிகர் விஜய் மற்றும் திரிஷா கோவாவுக்கு விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
மேலும், இருவரும் ஒரே விமானத்தில் கோவா சென்றதாக கூறும் படிவம் ஒன்றின் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
- ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஆட்டோ ஓட்டுநர் அறைந்த சிறிது நேரத்தில் கோவா முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வேலை நிமித்தமாக கோவாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லாவு மம்லதார் (68) சென்றிருந்தார்.
நேற்று அவரது கார் கார் காதேபஜார் அருகே ஒரு ஆட்டோவுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. மோதிய பின்னர் அவர் தனது காரில் அவர் தங்கியிருந்த ஸ்ரீனிவாஸ் லாட்ஜ் நோக்கிச் சென்றார்.
ஆட்டோ ஓட்டுநர் அவரது காரைத் துரத்திச் சென்று லாட்ஜ் முன் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை ஆட்டோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, மம்லதார் லாட்ஜ் படிக்கட்டுகளில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு அங்கிருத்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
லாவு மம்லதார், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சார்பில் (எம்ஜிபி) 2012-2017 வரை கோவா எம்எல்ஏவாக இருந்தார். 2022 இல் காங்கிரசில் சேர்ந்தார். அதே ஆண்டு மட்காய் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.