search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வின்"

    • வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குகிறார்.
    • ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ரவிசந்திரன் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்தவரான அஸ்வின் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    அந்த வகையில், ரவிசந்திரன் அஸ்வின் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குகிறார். 37 வயதான அஸ்வின் ஓய்வு பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய அஸ்வின் அவர் கூறுகையில், "ஓய்வு குறித்து தற்போதைக்கு என் மனதில் எந்த நினைப்பும் இல்லை. ஏனென்றால் இன்றைய நாளில் மட்டுமே நான் வாழ விரும்புகிறேன்."

    "எதிர்காலத்தை கணக்கில் கொண்டது கிடையாது. வயதாகும்போது கூடுதல் முயற்சி, பயிற்சி தேவை. அந்த வகையில் நான் கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதிகமான முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டு வருகிறேன்."

    "எனது ஓய்வு குறித்து இப்போதைக்கு நான் எதையும் யோசிக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் இது போதும் என்று தோன்றும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன்," என்று தெரிவித்தார்.

    • டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 847 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்திய வீரர் பும்ரா 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 788 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

    ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஸ்வின் 322 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அக்சர் படேல் 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் 6, 7, 8-வது இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின்.
    • சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

    விளையாட்டு உலகில் சிறந்த ஐகான், ரோல்மாடல், ஆசான் என பல்வேறு பெருமைகள் கொண்டவராக இருப்பவர் எம்.எஸ்.டோனி. பொதுவாக விளையாட்டு என்றாலே வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஒன்றில் முடிந்து போகும் விஷயம்தான்.

    ஆனால் அதில் கற்ற படிப்பினைகளையும், பாடங்களையும், போராட்டங்களையும், நுணுக்கங்களையும் என பல்வேறு விஷயங்களையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்த வல்லவராக இருப்பதால் தான் டோனியை ஒரு தலைவனாகவே பலரும் பார்க்கிறார்கள்.

    சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளார். "கேரம் பால்" அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில் 2 பேர் அவற்றில் இவரும் ஒருவர்.

    எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின், ரேங்க்களில் விரைவாக உயர்ந்து இந்திய அணிக்கு வலிமையான சக்தியாக மாறினார். இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் தூணாக தொடர்கிறார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் எம்.எஸ்.டோனியின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றும் அதிர்ஷ்டமும் பெற்றார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டோனி தன்னிடம் ஒரே அறிவுரையை தான் கூறியதாக அஸ்வின் சமீபத்தில் தெரிவித்தார்.

    மேலும், அவர் 15 ஆண்டுகளாக சொன்ன அறிவுரை தற்போது தான் தனக்கு புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசும்போது, சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

    ஒருகட்டத்தில் புதிதாக முயற்சிக்கும் உனது வழக்கத்தை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே. தொடர்ந்து உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இரு என்று கூறினார். அவர் அப்படி சொன்னது கிரிக்கெட் மட்டுமின்றி ஒருவரின் மனவலிமை மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்று மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பியிருந்தார்.
    • வெற்றிக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி என அவரே கூறினார்.

    கயானா:

    டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    இதனிடையே உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு சாதகமாக அனைத்து சூழல்களும் மாற்றப்படுவதால் தான் இந்திய அணி வெற்றி பெறுவதாக பலர் குற்றச்சாட்டி வந்தனர்.

    குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், அரையிறுதி போட்டியில் மற்ற அணிகள் எங்கு விளையாடப் போகிறது என்று தெரியாமல் இருந்த சூழலில் இந்தியாவுக்கு மட்டும் அரையிறுதி ஆட்டம் கயானாவில் நடைபெறப்போகிறது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இங்கிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்து பேட்டிங் செய்த அதே மைதானத்தில் தான் இந்தியாவும் பேட்டிங் செய்து 171 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து இந்திய அணியின் வெற்றிகுறித்து மைக்கேல் வாகன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி. இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறந்த அணியாக இந்தியா உள்ளது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது இங்கிலாந்துக்கு நிச்சயம் கடினமாக தான் இருக்கும். இந்தியா இது போன்ற குறைவாக சுழலும் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மைக்கேல் வாகனை இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கமாய் கலாய்த்துள்ளார். நகைச்சுவை மற்றும் அறிவுபூர்வமாக வெற்றிபெற்றதாக அஸ்வின் அதில் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், " ∫ 1 dx = x + C. ∫ a dx = ax+ C. ∫ xn dx = ((xn+1)/(n+1))+C ; n≠1... இதனால் தான் இந்தியா வென்றது" என்று அதில் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

    • இந்திய அணிக்காக தற்போது டெஸ்ட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
    • இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர். அவர் டெஸ்ட் அணியின் மட்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்திருக்கிறார். மேலும் டெஸ்ட்டில் 516 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் 9-வது இடத்திலும் இந்திய அளவில் கும்பேவுக்கு அடுத்த (2-வது) இடத்திலும் உள்ளார்.

    இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

    இந்நிலையில் அவர் தற்போது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் பெரிய புத்தக கடையில் அஸ்வின் வாழ்க்கை பயணம் புத்தகம் இருந்தது. என்னை போன்ற ஒருவருக்கு இது ஒரு கனவு எனவும் நானும் எனது தந்தையும் பல புத்தக கடைகளுக்கு சென்றிருக்கிறோம் மற்றும் நிறைய கதை ஆசிரியர்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம் எனவும் வீடியோவுக்கு தலைப்பிட்டிருந்தார். 

    • நைப் குறித்து தமிழக வீரர் அஸ்வின் கிண்டலடித்துள்ளார்.
    • நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் இவரை கலாய்த்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பையின் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக ஐசிசி தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெற்று புதிய சாதனை படைத்தது.

    முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும் போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

    அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகை காட்டினார்.

    அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே களத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

    குல்பதின் நைப் உண்மையாக காயடைந்துள்ளேன் என்பதை நடுவர்களுக்கு காட்டுவதற்காக பெவிலியன் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் ஒரு முடிந்ததும் பின்னர் களத்திற்கு திரும்பினார். அதன் பிறகு 2 ஓவர்கள் பந்து கூட வீசினார்.

    அதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கார் விருதை கொடுக்கலாம் போல என்று கிண்டலடிப்பதுடன் நாட்டுக்காக இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் தவிர கிரிக்கெட் வீரர்களும் அவரை கலாய்த்து பதிவு செய்து வருகின்றனர்.


    அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது, கால்பந்து போல இவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள் என்று எக்ஸ் தளத்தில் கலாய்த்தார்.

    மேலும் இந்த போட்டிக்கு வர்ணனை செய்தவர்களில் ஒருவரான நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கூறியதாவது,


    எனக்கு 8 மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. நான் உடனடியாக ஆப்கன் வீரர் குல்புதினின் மருத்துவரை சென்று பார்க்கப் போகிறேன். அந்த மருத்துவர்தான் உலகின் 8-வது அதிசயம் என நக்கலாக கூறினார்.

    • ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன்.
    • இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல.

    தனது கிரிக்கெட் அனுபவங்கள் தொடர்பான 'I Have the Streets - குட்டி ஸ்டோரி' என்ற புத்தகத்தை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார்.

    இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் இந்திய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார்.

    அந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின் சுவாரசியமான பல்வேறு விஷயங்களை பகிர்ர்த்து கொண்டார்.

    எம்.எஸ்.டோனி குறித்து பேசிய அஷ்வின், "ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன். சேலஞ்சர் டிராபி போட்டியில் போது நூலிழையில் டோனியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியாமல் போனது. இன்றும் அந்த பால் எனக்கு நினைவில் உள்ளது. அனால் அப்போட்டியில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் நான் டைவ் அடித்து டோனியின் கேட்சை பிடித்து கொண்டாடினேன்.

    டோனி ஒருமுறை உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டால் நீங்களே சோர்வடையும் வரை உங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்" என்று தெரிவித்தார்.

    கவுதம் கம்பீர் குறித்து பேசிய அஷ்வின், "அவர் போராட்ட குணம் கொண்டவர். சில பேர் சிரிக்க மாட்டாங்க அவ்வளவுதான்.. அதுக்காக என்ன பண்ண முடியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    "இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன். இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல" என்று அஷ்வின் தெரிவித்தார்.

    • அடுத்த மாதம் 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன் ஆகியோர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் ஜூலை 5-ந் தேதி தொடங்குகிறது.

    முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், நடராஜன் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.

    டி.என்.பி.எல். தொட்ரில் உள்ள 13 வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, டி.என்.பி.எல். கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் தினேஷ்குமார், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் இயக்குனர் செல்வமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் பாபு குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • ஐபிஎல் தொடங்கிய காலத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.
    • தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் போட்டியில் தனது திறமையான பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்.

    இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத்தான் விளையாடினார். பின்னர் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

    இந்த நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸின் உயர் செயல்திறன் மையத்தின் (Chennai Super Kings High Performance Centre) பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள அகாடமிகளை கவனிக்கும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது.

    இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் "இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் அஸ்வின். அவரின் வருகை உயர் செயல்திறன் மையத்திற்கும், எங்களுடைய அகாடமிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பூஸ்ட்-ஆக அமையும்" என்றார்.

    அடுத்த வருடம் மெகா ஆக்சன் நடைபெறுகிறது. அப்போது அஸ்வினை மீண்டும் ஏலம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, "ஆக்சனில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.

    டோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக டோனி மட்டுமே முடிவு செய்ய வேண்டும். நாங்கள், அவருடைய ரசிகர்கள் அவர் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். இறுதியான முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிப்போம்" என்றார்.

    • வருகிற 22-ந் தேதி சென்னையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த போட்டியின் டிக்கெட்டுகள் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. அடுத்த சிறிது நேரத்தில் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கு நம்ப முடியாத அளவுக்கு டிக்கெட்டுக்கு டிமெண்ட் இருக்கிறது. தொடக்க விழாவையும், ஆட்டத்தையும் காண என்னுடைய குழந்தைகள் விரும்புகின்றனர். உதவி செய்யுங்கள் சிஎஸ்கே நிர்வாகம்.

    என அஸ்வின் கூறியிருந்தார்.

    • அஸ்வினை ஜடேஜா தமிழில் பேசி வாழ்த்தியிருந்தார்.
    • அவரை ரவி இந்திரன் என்றும், அஸ்வினை ரவி சந்திரன் என்றும் புகழ்ந்திருந்தார்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் நாணயத்தின இரு பக்கங்களாக விளங்கி வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இவர்களது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

    சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை பாராட்டும் வகையில் அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 500 தங்க காசுகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் காசோலை வழங்கியது.

    இந்த விழாவில் அஸ்வினை பலரும் பாராட்டி பேசினார். ஜடேஜா தமிழில் பேசி நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன் என தமிழில் பேசினார். அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில்தான் அஸ்வினிடமே, எனது தமிழ் எப்படி இருக்கிறது என்று கேட்டார் ஜடேஜா. அதற்கு அஸ்வின், ஜட்டு! உங்களுடைய செய்திகள் மூலம் என்னுடைய ஆச்சரியம் மற்றும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
    • விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார்.

    சென்னை:

    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார். மேலும் 100-வது டெஸ்டில் விளையாடி புதிய மைல் கல்லை தொட்டார். அஸ்வின் 100 டெஸ்ட்களில் 516 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    இதற்கிடையே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது.

    ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் கேப்டன்கள் ஸ்ரீகாந்த், கும்ப்ளே, சி.எஸ்.கே. நிர்வாகி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்ட னர்.

    விழாவில் அஸ்வினுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை என்.சீனிவாசன் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா மற்றும் தமிழக கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீரரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது. இது மிகவும் கடினமான விஷயம். 100 போட்டியில் 500 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனையாகும்.

    எல்லா தடைகளையும் தாண்டி அஸ்வின் சாதித்துள்ளார். அவர் எப்போதுமே அணியின் வெற்றிக்காக பாடுபடக் கூடியவர். அவரது புகழை வரலாறு சொல்லும். மிக சிறந்த சுழற்பந்து வீரர் சென்னையைச் சேர்ந்தவர் என்று வரலாறு கூறும் என்றார்.

    முன்னாள் சுழற்பந்து வீரரும், முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தங்க காசுகளால் 500 என பொறிக்கப்பட்ட நினைவு பரிசை அஸ்வினுக்கு வழங்கினார். அஸ்வினை சிறப்பிக்கும் விதமாக அவரது தபால்தலையும் வெளியிடப்பட்டது. அப்போது கும்ப்ளே பேசியதாவது:

    நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய சிறந்தவர்களில் அஸ்வினும் ஒருவர். அவரது விக்கெட் எண்ணிக்கை சிறப்பானது. அவருக்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் அமோகமான தொடர்பு இருக்கிறது. வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர். அவர் தனது 100-வது டெஸ்டை முன்பே விளையாடி இருக்க வேண்டும். இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும்போது அவர் எப்போதும் தேர்வு செய்யப்படவில்லை. அஸ்வின் கிளப் டி.என்.பி.எல். மற்றும் மாநில அணிக்கான தொடரில் விளையாடி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என கூறினார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் வீடியோ பதிவு மூலம் அஸ்வினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    வீடியோ காலில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு புதுமை மேம்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றின் மூலம் அஸ்வின் சுழற்பந்து வீச்சை முன்னோக்கி கொண்டு சென்றார். கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் சுழற்பந்து வீரர் பற்றிய நமது புரிதலையும், அறிவையும் அவர் முன்னோக்கி நகர்த்தி உள்ளார் என தெரிவித்தார்.

    இறுதியில், ஏற்புரை நிகழ்த்திய அஸ்வின், வாழ்நாள் முழுவதும் டோனிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிலைக்கு வருவேன் என நினைக்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    ×