என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலங்காநல்லூர்"

    • அலங்காநல்லூர் அருகே உள்ள மந்தை கருப்பணசாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் ஆற்றங்கரை தென்புறம் உள்ளது மந்தைகருப்பண சுவாமி கோவில். இங்கு ஆனி மாத கிடாய் வெட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு உற்சவ விழா நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பழனிச்சாமி நாட்டாமை வகையறா, அலங்கார் பூசாரி வகையறா, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை அருகே உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதற்கு ஜானகி கணபதி தலைமை தாங்கினர். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, சக்தீஸ்வரி, மதுரை யங் இந்தியன்ஸ் காலநிலை பருவநிலை மாற்ற தலைவர் பொன்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகாலட்சுமி, உன்னத் பாரத் அபியான் உறுப்பினர் சோபிதா முன்னிலை வகித்தனர். மாணவ பேரவை உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், முதுகலை சமூகபணியியல் மாணவிகள் 75 மரக்கன்றுகளை நட்டு வைத்து கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பின்னர் பறை இசையுடன் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிளாஸ்டிக் தவிர்ப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    • அலங்காநல்லூரில் ரூ.31 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்- குடியிருப்பு கட்டுமான பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு சேதமடைந்து இடியும் நிலையில் காணப் பட்டது. இதனால் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வருவாய்த் துறையினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிந்துரையின் பேரில் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் ரூ.30.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலு வலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 810 காளைகள் பங்கேற்றன.
    • ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு.

    உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

    இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது.

    மொத்தம் 810 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    அமைச்சர் மூர்த்தியின் அறிவுறுத்தல்படி எஞ்சிய காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

    18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் இரண்டாம் பரிசு பெற்றார்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு பெற்றுள்ளது.

    சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது முதல் பரிசு பெறும் கருப்பாயூரணி கார்த்தி, 2022ம் ஆண்டிலும் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்தாண்டு இதே ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியிலும் அபிசித்தர் முதலிடம் பிடித்திருந்தார்
    • 14 காளைகளை அடக்கி பொதும்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 2 ஆம் இடம் பிடித்தார்.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது.

    அந்த வரிசையில், உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 989 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 490 காளையர்கள் களம் கண்டனர்.

    9 சுற்றுகளாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு, ஹூட்சன் தமிழ் இருக்கை வழங்கும் நாட்டு பசுவும் கன்றும் கூடுதல் பரிசாக வழங்கப்பட்டது. .

    கடந்தாண்டு இதே ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியிலும் அபிசித்தர் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    13 காளைகளை அடக்கி பொதும்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 2 ஆம் இடம் பிடித்தார். அவருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது.

    மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்தார். இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. ஏனாதி அஜய் 9 காளைகளை அடக்கி 4 ஆம் இடம் பிடித்தார். அவருக்கு TVS XL பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சேலம் பாகுபலி மாட்டின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    • 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
    • போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளில் மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட காளைகள், 800-க்கும் அதி கமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து இன்று 3-வது முறையாக சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


    முன்னதாக வருவாய் கோட்ட அலுவலர் ஷாலினி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் நரேந்திரன் மற்றும் வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று களமாடி வருகிறார்கள். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளை களை அடக்கும் வீரர்களுக்கும் தங்கநாணயம், சைக்கிள், மிக்சி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    இப்போட்டிகளில் பங்கேற்ற காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்புகின்றனர். மாடுபிடி வீரர்கள் சுகாதாரத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து தகுதி சான்று வழங்கிய வீரர்கள் 50 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றாக பங்கேற்றனர்.

    பொதுமக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலவசமாக கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை தந்து குதூகலமாக பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர்.

    இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பட்டிமன்ற பேச்சாளர் பிக்பாஸ் புகழ் அன்னபாரதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பொழுது போக்கு நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இடையே நவீன இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

    • மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம் பட்டி துணைமின் நிலையத்தில் உள்ள தேவசேரி பீடர், அலங்காநல்லூர் துணைமின் நிலையத்தில் உள்ள தேசிய சர்க்கரை ஆலை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக குறவன்குளம், முடுவார்பட்டி, ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மலைப்பட்டி, தேசிய சர்க்கரை ஆலை, பண்ணைகுடி, டி.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • அலங்காநல்லூரில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
    • பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூரில் வட்டார சுகாதாரப் பேரவை கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொன் பார்த்திபன், விஜய் ஆனந்த், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். சுகாதார பேரவை குழுவின் மூலம் கிராம மக்களின் சுகாதார தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவையை பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜீலான் பானு, தேவி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உஷா, தானம் அறக்கட்டளை கிராமப்புற ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூரில் 11-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஏற்படும்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள்(11-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை யு.உசிலம்பட்டி, மறவர்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, சுக்கம்பட்டி, கோணாம்பட்டி, சாத்தியார் அணை, ஏர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி,, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், பாலமேடு, அலங்காநல்லூர், சுகர் மில், பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்; அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார்.
    • சாகச விளையாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்பட உள்ளது.

    மதுரை

    தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.

    அப்போது கீழக்கரை, சின்னஇலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் ஆய்வுக்கு உட்படுத்த ப்பட்டன. இதில் கீழக்கரை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு 66 ஏக்கரில் ஜல்லிக் கட்டு மைதானம் அமைப்பதற்கான பணி களில் தமிழக சுற்றுலா த்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாஸ்டர் பிளான் தயாராகி வருகிறது.

    மதுரையில் இருந்து 30 கி.மீ. தொலையில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மை தானம், அனைத்துவிதமான பாரம்பரிய விளையாட்டுக ளும் நடத்தும் வகையில் இருக்கும். அங்கு சாகச விளை யாட்டுக்கு என்று தனி இடம் அமைக்கப்பட உள்ளது.

    மைதானத்தை சுற்றிலும் ஜல்லிக்கட்சி அருங்காட்சி யம், கைவினை பொருட்கள் மையம் அமையும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் தமிழக பொதுப்பணி- நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று மதுரை வருகிறார். அப்போது அலங்காநல்லூருக்கு செல்லும் அவர், கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

    • சர்வதேச யோகா தினம் நடந்தது.
    • ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் காட்வின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியின் முன்னதாக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.

    யோகா பயிற்சி சுமார் 1 மணிநேரம் நடந்தது. கல்லணை ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சூரிய நமஸ்காரம், தாடாசனம், விருச்சிகாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட ஆசனங்கள் கற்றுத்தரப்பட்டது.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக உலக யோகா தினத்தையொட்டியோகா பயிற்சி நடத்தப்பட்டது.இந்த பயிற்சி வகுப்புக்கு நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நீதிபதி வெங்கடலட்சுமி தொடக்கி வைத்தார்.நீதிமன்றப் பணியாளர்கள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில்யோகா பயிற்சி யாளர் சுரேஷ் மற்றும் கராத்தே பயிற்சியாளர் கணேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதன் ஏற்பாடுகளைவட்ட சட்டப்பணிகள் குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 வாலிபர்களை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி தனியார் வாகன விற்பனை மையத்தில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 5½ கிலோ கஞ்சா, ரூ.400 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை பூந்தமல்லி நகரை சேர்ந்த கர்ணன் (வயது 55), தத்தனேரி பாக்கியநாதபுரத்தை சேர்ந்த இன்பராஜா (35), அலங்காநல்லூர் பெரிய ஊர்சேரியை சேர்ந்த மகாலிங்கம் (45) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

    ×