என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222245"

    • வெங்கடேஷ் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
    • கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி:

    இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட நியூ வெங்கடேஷ் நகர் பகுதியில் பூங்காவாக பயன்படுத்தி வரும் இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதையறி்ந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர், வாறுகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர போதுமான நிதி இல்லை எனக்கூறி வரும் ஊராட்சி நிர்வாகம், பூங்காவாக பயன்படுத்தி வந்த இடத்தில் அதிக நிதியை பயன்படுத்தி அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் எவ்வாறு நிதி வந்தது? அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்தவுடன் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததையடுத்து, புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத முதல் அன்னதான பூஜை நடந்தது.
    • மதியம் 12.35 மணிக்கு அன்னதான பூஜையும் சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அடுத்த மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத முதல் அன்னதான பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி காலை 7 மணிக்கு மகா கணபதி பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து 9மணிக்கு மூலவர் உற்சவர் அம்பாள் குருவுக்கும் 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.35 மணிக்கு அன்னதான பூஜையும் சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனையும் நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், சங்கரன், ஓதுவார் பூஜைகளை செய்தார்கள். இவ்விழாவில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், மாரிஸ் வரன், ஆறுமுகம் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பழனியம்மாள், பூமாலட்சுமி, லட்சுமி, மாரித்தாய், மற்றும் ஊர் பொதுமக்கள் பூஜையில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.

    • சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு மண்டபம் கட்டும் விழா கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது.
    • ம.தி.மு.க. பொதுச் செயலார் வைகோ எம்.பி. பங்கேற்றுநினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டபம் கட்டும் விழா அவரது பிறந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலார் வைகோ எம்.பி. பங்கேற்றுநினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி ரமேஷ், ம.தி.மு.க. நகரச் செயலாளர் பால்ராஜ், மத்திய பகுதி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கேசவன், மாரிச்சாமி, செயற்குழு உறுப்பினர் கணேசன், இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், செண்பகராஜ், முத்துப்பாண்டியன், வனராஜன், முத்துச்செல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் பவுன் மாரியப்பன் மாநில விவசாய அணி சிவகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பீக்லிபட்டி முருகேசன், சிவராமகிருஷ்ணன், குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி, ராம்குமார், மகாராஜா, தெய்வேந்திரன், எழுத்தாளர்கள் ஜெயபிரகாசம், உதயசங்கர், பிரபு, மற்றும் கி.ரா குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜகுரு வரவேற்று பேசினார்.

    • புற்றுக்கோவிலில் கார்த்திகை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கார்த்திகை சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. பிறகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
    • ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடம் பிடித்தது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி, நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி ஆகியவை இணைந்து, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பையை உபயோகிப்போம், சுற்றுப்புறச்சூழலை பாது காப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி செய லாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் யுவராஜன் முன்னிலை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் துணைத் தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை துவங்கி வைத்தார்.

    இதில், ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடமும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி 3-வது இடமும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற அணியினருக்கு கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டி யன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பொதுசெயலாளர் முருகன் செய்திருந்தார்.

    • பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.
    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    கோவில்பட்டி:

    முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.

    விழாவில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம் தலைமையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாமன்னர் பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, பகத்சிங் ரத்ததானக் கழக அறக்கட்டளை நிறுவனர் காளிதாஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் தொழிலதிபர் அங்கமுத்து, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன், இன்னர்வீல் கிளப் பட்டயத் தலைவர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மேரிசீலா, உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணைச் செயலர் முத்துச்செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் தாவீதுராஜா, அ.தி.மு.க. ஒன்றியச் செயலர் அன்புராஜ், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவரங்கம், சிலை கட்டும் பணி தொடங்கியது.
    • அமைச்சர் எ.வ.வேலு நினைவரங்க பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவில்பட்டி, ஆக.31-

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவரங்கம், சிலை மற்றும் நூலகம் கட்டும் பணி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.

    இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நினைவரங்க பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், நெல்லை கண்காணிப்பு பொறியாளர் மாதவன், தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் தேவி, உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவி பொறியாளர்கள் சரத்குமார், சந்திரசேகர், கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் சுசிலா, தி.மு.க. நிர்வாகிகள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ரமேஷ், பீட்டர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.
    • விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    கோவில்பட்டி:

    அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் (பொ) சிவாஜிகணேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காப்பீடு திட்ட பலன் சாமானிய மக்களை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது. இதில் சேர 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எவ்வித காகிதங்கள் பயன்பாடின்றி வீடு தேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம். விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    விபத்தில் உள்நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரமும், புறநோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரமும், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 2 குழந்தைகள் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப் படியாக ரூ.ஆயிரம் வீதம் 9 நாள்களுக்கு கிடைக்கும்.

    விபத்தில் பாதிக்கப்பட்ட வரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயணச் செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு ரூ.399 பிரிமியம் செலுத்தினால் போதும், விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

    எனவே, அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 1-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

    கோவில்பட்டி:

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளை ( சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் பட்டி தாசில்தார் சுசிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் வாக்காளரை உறுதி செய்யவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.

    இப்பணியானது கடந்த 1-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்குச் சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் அனை வரும் பயன்பெறும் வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி அலுவலர்க ளால் இப்பணி நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளிடம் உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

    மேலும் www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்களின் மூலம் இணையவழியில் படிவம் 6பி உள்ளீடு செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்துராஜிடம் செல்போன் இல்லை என்பதால் தேடுவதில் போலீசாருக்கு சற்று சிரமம் இருந்தது.
    • தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் முத்துராஜ் தொடர்பு கொண்டது தெரியவந்தது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (30). கட்டிட தொழிலாளி.

    கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ் (39). கட்டிட தொழிலாளியான இவர் பாலமுருகனிடம் ரூ10 ஆயிரம் கடன் பெற்று இருந்தாக தெரிகிறது.

    இந்த பணம் கொடுங்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துராஜ், பாலமுருகனை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    கோவில்பட்டி கிழக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில் டி.எஸ்.பி. வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படையை சேர்ந்த நாரயணசாமி, ஏட்டு முருகன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் தலைமறைவாக இருந்த முத்துராஜை தேடி வந்தனர்.

    முத்துராஜிடம் செல்போன் இல்லை என்பதால் தேடுவதில் போலீசாருக்கு சற்று சிரமம் இருந்தது. எனினும் வெளியூரில் உள்ள முத்துராஜ் உறவினர் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் முத்துராஜ் தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் அவர் மூலமாக முத்துராஜ் எங்கு இருக்கிறார் என்பது குறித்து விசாரித்த போது பாநாசத்தில் இருப்பதாகவும், அந்த நபரை சந்திக்க புதுக்கோட்டைக்கு வருவதாக முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முத்துராஜ் கூறியதாவது-

    பாலமுருகனிடம் நான் 10 ஆயிரம் பணம் கடனாக பெற்று இருந்தேன். அதனை திருப்பி கொடுத்த பிறகும், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

    சம்பவத்தன்று பாலமுருகன் எனது வீட்டிற்கு சென்று எனது தந்தை வடிவேலை அவதூறாக பேசினார்.

    நான் வீட்டிற்கு வந்த பிறகு இது தெரிந்ததும், பாலமுருகனை சத்தம் போடுவதற்காக சென்ற போது மது போதையில் இருந்த பாலமுருகன் என்னையும் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கிருஷ்ணர் வேடமணிந்து மாணவ- மாணவிகள் கிருஷ்ணன் குறித்த பாடல்கள் பாடினர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ஹவுசிங் போர்டில் உள்ள பிருந்தாவனம் தியான பீடத்தில் உள்ள சந்தான கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் கிருஷ்ணர் வேடமணிந்து மாணவ- மாணவிகள் கிருஷ்ணன் குறித்த பாடல்கள் பாடினர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பிருந்தாவன் குழுவினர் மற்றும் தனலட்சுமி குழுவினரின் பஜனைகளும், சர்மிளா, சரண்யாவின் பக்தி பாடல்களும் நடைபெற்றது. சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் அணி வடக்கு மாவட்டச் செயலர் சிவபெருமாள், நிர்வாகிகள் சங்கர்கணேஷ், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை ப்பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வகுமார், செண்பகமூர்த்தி, குமார், நீலகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராமங்களில் கிரிட் முறையில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 18 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தின் மூலம் முரம்பன், கீழமங்கலம், சங்கம்பட்டி மற்றும் மலைப்பட்டி ஆகிய கிராமங்களில் கிரிட் முறையில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    முகாமில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி செயல் விளக்கம் குறித்து மூத்த வேளாண்மை அலுவலர் லலிதா பரணி மற்றும் செல்வமாலதி விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். முகாமில் ஓட்டப்பிடாரம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் பாலகிருஷ்ணன், சிவா பாண்டியன், மாயாண்டி, பகவதி மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் சேகரித்த மண் மாதிரிகளை ஆய்வுக்கு கொடுத்தனர்.

    ×