என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222245"

    • சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
    • கோடிசக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது

    மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. பிறகு கோடிசக்தி விநாயகருக்கு மாலை, மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்

    விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கணேஷ் குமார் ஆனந்தவள்ளி, காளீஸ்வரி கர்ணிகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை தாங்கினார்.
    • மாணவர்கள் போதை பொருட்களின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று டி.எஸ்.பி. வெங்கடேஷ் பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    கல்லூரியின் ஜூனியர் ஜே.சி.கிளப், நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சண்முகவேல் தலைமை தாங்கினார். முதல்வர் காளிதாசமுருகவேல் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் போதை பொருட்களின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். போதை பொருட்களின் பயன்பாட்டை வேரோடு அழிக்க வேண்டும். போதை பொருட்களின் தாக்கத்தினால் மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை இழக்க நேரிடும். எனவே, தாங்கள் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றார்.

    கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசினார். தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    பின்னர் டி.எஸ்.பி. போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். மின் மற்றும் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியர் குமார் நன்றி கூறினார்.

    • கோவல்பட்டியில் 4 இடங்களில் சாலை, வாறுகால் அமைக்கும் பணி மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.
    • ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கோவில்பட்டி ஊராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் சாலை, வாறுகால் அமைக்கும் பணி மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டுமானப் பணிகளை கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சாலை பணிகள்

    அதன்படி இனாம்மணி யாச்சி ஊராட்சி மீனாட்சி நகர் 6-வது தெருவில் ரூ.7.69 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக், வாறுகால், கோவில்பட்டி பிரதான சாலையில் ரூ. 9 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல் பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மேலும் மின் அறையை சுற்றி பாதுகாப்பு சுவர் மற்றும் பேவர் பிளாக் தரை, முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி வீட்டுத் தெரு வில் ரூ.14 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்புலட்சுமி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் கெங்கா பரமேஸ்வரி, நகராட்சி உதவி பொறியாளர் சரவணன்,

    மாவட்ட மாணவரணி செல்வகுமார், மகளிரணி இணை செயலாளர் சுதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், நிலைய மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப் பாண்டியன், மாவட்ட வக்கீல் அணி செயலர் சிவபெருமாள், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர்கள் ராமர், ரத்தினவேல், நகர பொருளாளர் ஆரோக்கிய ராஜ், நிர்வாகிகள் ஆபிரகாம் அய்யாதுரை, பழனிகுமார், செண்பக மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் சங்கர்கணேஷ், ஆரோக்கிய ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
    • கொடியேற்று விழாவையொட்டி, கோவில்பட்டி செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப் பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

    கொடியேற்றம்

    வீரமாமுனிவர் பங்கு குருவாகப் பணியாற்றிய இந்த ஆலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடந்தது.

    தொடர்ந்து, 6.30 மணிக்கு கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் கொடிகள் அணிவகுப்பாகக் கட்டப்பட்டன.

    பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, வட்டார அதிபர் அருட்திரு சார்லஸ், பாளையங்கோட்டை புனித அந்தோணியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எஸ்.அந்தோணிசாமி ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினர்.

    இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று மாலை 5.30 மணி முதல் அசன விருந்து நடந்தது.

    கொடியேற்று விழாவை யொட்டி, கோவில்பட்டி செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப் பட்டது. திருவிழாவின் 2-ம் திருநாளான இன்று காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழா, 8-ம் திருநாளான 13-ந்தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 9-ம் திருநாளான 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை மற்றும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

    10-ம் திருநாளான 15-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெறும். அதைத் தொடர்ந்து, கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு அ.ரீகன், மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பகுதி இறைமக்கள் செய்து வருகின்றனர். காமநாயக்கன்பட்டி திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் எஸ்.பி, பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டி.எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    • வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • விண்ணப்பித்தவர்களில் தகுதியான வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோட்டாச்சியர் மகாலெட்சுமி உத்தரவிட்டார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த லிங்கம்பட்டியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    லிங்கம்பட்டி பகுதியில் வசிக்கும் வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி வருவாய் துறையிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, துணை செயலாளர் சேகர் உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கோட்டாட்சியர் அலு வலகம் முன் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்தனர்.

    உடனடியாக தாசில்தார் சுசிலாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியான வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் உத்தரவிட்டார். தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த கோட்டாச்சியர் மகாலெட்சுமியின் செயலை கண்டு வியந்த பெண்கள் அவருக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.

    • புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி மகிழ்ச்சி அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினார்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் 40-ம் ஆண்டு ஆடித்தபசு விழா வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    இதையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கோமியம், மஞ்சள், பால் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி பொருளாளர் சுப்பிரமணியன் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • ஜெயக்குமார் நள்ளிரவு நேரத்தில் இரும்பு கம்பியால் தனது தந்தை சுப்பையாவின் தலையில் சரமாரியாக அடித்து தாக்கினார்.
    • சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடி வந்து படுகாயம் அடைந்த சுப்பையாவை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கீழ காலனி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 75). இவரது மகன் ஜெயக்குமார் அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்வார் என கூறப்படுகிறது. இதனை சுப்பையா கண்டித்து வந்துள்ளார்.

    கடந்த 14-ந் தேதி இரவு ஜெயக்குமார் தெருவில் வைத்து தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு சென்ற சுப்பையா, ஜெயக்குமாரை கடுமையாக கண்டித்து அனுப்பினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் நள்ளிரவு நேரத்தில் இரும்பு கம்பியால் தனது தந்தை என்றும் பாராமல் சுப்பையாவின் தலையில் சரமாரியாக அடித்து தாக்கினார்.

    இதனால் சுப்பையா அலறி துடித்தார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடி வந்து படுகாயம் அடைந்த சுப்பையாவை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்று சுப்பையா இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரத்ததான முகாமிற்கு ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
    • சிறப்பு அழைப்பாளராக ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர். நகர்மன்ற உறுப்பினர்கள் லவராஜா சண்முகவேல் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் கமல வாசன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அமளி பிரகாஷ், மகேஷ், கேசவன், சந்திரசேகர், மருத்துவர் தேவசேனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறுவன ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • பிரதோஷ விழாவை முன்னிட்டு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.
    • நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு அழைப்பாளராக தவமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    கோவில்பட்டி:

    பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சிலம்ப பயிற்சி ஆசிரியர் சண்முகசுந்தர கணபதி, நகர்மன்ற உறுப்பினர் லவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 14 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவரும் பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிவேதா, குழந்தைகள் நலப் பணியாளர் சபீனா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஸ் நிஷா பேகம், மேற்பார்வையாளர்கள் அமுதம்மாள், பாலம்மாள், கனக லட்சுமி மற்றும் மன்ற ஆலோசகர் பாலமுருகன் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    • ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் வசந்த் ஆகியோருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சத்யா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் தாமோதரன், பண்ணை வடிவமைப்பாளர் ரகுராமன், ஈஷா மைய தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசி ராஜன், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லிங்கத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். நில உரிமையாளர்கள் கார்த்திகேயன், வசந்த் ஆகியோர் வரவேற்றனர்.

    ×