search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை"

    • கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிகவினர்.
    • நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளு முற்று ஏற்பட்டது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 20-ந்தேதி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் குவிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அன்று இரவு கொடிக்கம்பத்தை 62 அடி உயர கொடி கம்பத்தை நட்டு வைத்து கொடியேற்ற முயன்றனர்.

    இதையறிந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து கொடிக்கம்பம் நாட்டுவதற்கு அனுமதி வாங்கவில்லை என்று கூறி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அதிகாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியரும், கீழ்வேளூர் ஆய்வாளரும் ஒருதலைபட்சமாக நடந்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். நாகை மற்றும் திருவாரூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

    இதில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்கபடுகிறது.
    • இந்த கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என 150 இருக்கைகள் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

    இந்நிலையில், நாகை - இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவைக்கு போதிய பயணிகள் வருகை இல்லாததால் செப்டம்பர் 15ம் தேதி வரையில், வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதா இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • அந்தமானில் இருந்து 'சிவகங்கை கப்பல்' நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது.
    • நாகையில் இருந்து இன்று காலை புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்ற டையும்.

    நாகப்பட்டினம்:

    இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தமானில் இருந்து 'சிவகங்கை கப்பல்' நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது. இந்த கப்பலுக்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    இந்த சிவகங்கை பயணிகள் கப்பலை புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, 44 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டது.

    நாகையில் இருந்து இன்று காலை புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்ற டையும். மறுமார்க்கமாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடையும்.

    பின்னர், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

    இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதா இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது.

    பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. *

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
    • அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 -ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

    ஆனால் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணம் காட்டி சேவை தொடங்கிய சில நாட்களிலேயே கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் இரு நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இலங்கைக்கு கப்பல் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் வரும் 16 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மேலும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இன்று நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கப்பல் சேவை தொடங்க இருப்பதால் இருநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கப்பல் சோதனை ஓட்டம் துவங்கியது.
    • 27 பிரீமியம் இருக்கைகளும் என இரு வகைகளாக இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்காக அந்தமானில் இருந்து கொண்டுவரப்பட்ட 'சிவகங்கை' என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை வழியாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு (6ம்தேதி) வந்தது.

    இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை வரும் 15-ம் தேதிக்கு பின்னர் தொடங்கப்படவுள்ளது. சோதனை ஓட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பருவகால சூழ்நிலை காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

    இதையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை 8 மணி அளவில் சிவகங்கை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் துவங்கியது. நண்பகல் 12 மணி அளவில் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றது. மீண்டும் 4 மணிக்கு நாகைக்கு வரும்.

    கடந்தாண்டு தொடங்கிய கப்பல் சேவை, நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பது இரு நாட்டை சேர்ந்த வணிகர்கள், சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 'சிவகங்கை' கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமும், பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு ரூ 7,500 கட்டணமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்து செல்லவும் அனுதிக்கப்பட்டுள்ளது. sailindsri.com என்ற இணையதளத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மூன்று மணி நேரத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    • முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாளை 17-ந்தேதி படகு சேவை தொடங்க இருந்த நிலையில் மீண்டும் வரும் 19-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையினாலும் திட்டமிட்ட நாகை - காங்கேசன் - நாகை பயணிகள் கப்பல் சேவையினை இயக்க முடியவில்லை என்றும் சேவையினை 19-ந் தேதியில் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    பதிவு செய்த பயணிகள் 19-ந் தேதி அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம் அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக பெற விரும்பினால் கட்டணத்தினை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் வரும் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    • யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ ப்ரே சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 'சிவகங்கை' என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும்.
    • 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் அவுரித்திடலில் கொட்டும் மழையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், சரவணன், ரவி மற்றும் முத்துசாமி ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் குமார் ரமேஷ், பால சண்முகம், அரசுமணி, ஞானசேகரன், குமார், பிரசன்னா பாபு , வெற்றி வேலன்உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவி ன்படி, புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் , சரண் விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியா க நிரப்பிட வேண்டும்.

    21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், 2002 முதல் 2004 தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பணிக்கா லத்தை வரண்மு றைசெ ய்திட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

    பங்கேற்றனர்.

    • நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.
    • இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் மெயின் சாலை உள்ளது.

    இந்த சாலையின் ஒருபுறம் நெடுஞ்சாலை துறை மூலம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மற்றொருபுறம் வீட்டுக்கு வீடு குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் தனியார் நிறுவனத்தின் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

    சாலையின் நடுவில் மட்டும் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதை உள்ளது.

    இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பணிகளை நிறுத்த வலியுறுத்தி வாகனங்களை சிறை பிடித்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், திட்டச்சேரி போலீஸ் சிறப்பு
    சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரப்பிள்ளை,டென்னிசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவா ர்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.

    பின்னர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் முழுவதும் மூடப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.
    • உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியல் துறை சார்பில் ஒருநாள் மாநில கருத்தரங்கம் நடந்தது.

    கல்வி குழும தலைவர் ஜோதிமணி அம்மாள் தொடங்கி வைத்தார். கல்வி குழும செயலர் செந்தில்குமார், இணைச் செயலாளர் சங்கர் கணேஷ், ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    கல்வி குழும செயல் அலுவலர் சந்திரசேகர், கல்விசார் இயக்குனர் மோகன், கல்லூரி முதல்வர்கள் நடராஜன், முகமது இஸ்மாயில், துணை முதல்வர்கள் கலியபெருமாள், ராஜா கிருஷ்ணன் ஆகியோர் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.

    பல்வேறு வகையான தலைப்புகளில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், ஜே.ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர்.

    நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உயிர் வேதியியல் துறை தலைவர் உமா வரவேற்றார். துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உயிர் வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள திரவுபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ×