search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223336"

    • தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும்.
    • கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    துவரம்பருப்பு - 1/4 கப்

    முருங்கைக்கீரை - ஒரு கப்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1 சிறியது

    பச்சைமிளகாய் - 3

    பூண்டுப்பல் - 5

    மஞ்சள்தூள் - சிறிது

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    தேங்காய்ப்பூ - 3 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    தாளிக்க:

    நல்லெண்ணெய்

    கடுகு

    உளுந்து

    சீரகம்

    பெருஞ்சீரகம் - சிறிது

    காய்ந்த மிளகாய் - 2

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    கறிவேப்பிலை

    செய்முறை:

    தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் துவரம் பருப்பை போட்டு நன்றாகக் கழுவிவிட்டு, பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

    கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

    தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.

    நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும். முருங்கைக்கீரை அதிகநேரம் கொதித்தால் கசக்க ஆரம்பித்து விடும். எனவே கீரை போட்டு 7 நிமிடம் வேக வைத்தால் போதுமானது.

    இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

    இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பன்னீரில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்தனுப்ப சூப்பரான ரெசிபி இது.

    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 5,

    பன்னீர் துருவல் - கால் கப்,

    கேரட் துருவல் - சிறிதளவு,

    நறுக்கிய குடைமிளகாய் - சிறிதளவு,

    வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),

    தக்காளி சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன்,

    வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருகியதும் வெங்காயம், பன்னீர் துருவல், குடைமிளகாய், கேரட் துருவல், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருகியதும், சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் சூடு செய்து எடுக்கவும்.

    சப்பாத்தியின் ஓரத்தில் தயாரித்து வைத்துள்ள பன்னீர் கலவையை வைத்து, சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான பன்னீர் ஃப்ராங்கி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
    • கொள்ளு அதிக சூடு நிறைந்தது. தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.

    தேவையான பொருட்கள்

    கொள்ளு - 1 கப்,

    பெரிய வெங்காயம் - 1,

    தக்காளி - 1,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,

    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி,

    மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,

    கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - 1 தேக்கரண்டி,

    கொத்தமல்லித்தழை - சிறிது.

    செய்முறை

    * கொள்ளுவை மலர வேகவிடவும்.

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

    * சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், உப்புப்போடவும்.

    * வேக வைத்த கொள்ளுவை ஓரளவு மசித்து சேர்க்கவும்.

    * மசாலா திக்கான பதம் வந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறலாம்.

    * இப்போது சூப்பரான கொள்ளு மசாலா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காலை அல்லது இரவு மீந்து போன இட்லி வைத்து இந்த ரெசிபியை செய்யலாம்.
    • 10 நிமிடத்தில் தயிர் இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 6,

    புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்,

    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,

    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,

    ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,

    மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

    உப்பு - தேவையான அளவு,

    அரைக்க:

    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    முந்திரிப்பருப்பு - 6.

    தாளிக்க:

    கடுகு - அரை டீஸ்பூன்,

    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து தயிரில் கலக்கவும்.

    பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மாதுளம் முத்துக்கள், மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.

    சூப்பரான தயிர் இட்லி ரெடி.

    அல்லது வெறும் கொத்தமல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

    இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உளுந்து வைத்து பல்வேறு வெரைட்டி வடைகளை செய்யலாம்.
    • இன்று அரிசி மாவில் வடை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி மாவு - 200 கிராம்,

    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

    பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    கொத்தமல்லி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 கப் நீரைக் கொதிக்கவிட்டு… அதில் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

    ஒரு நிமிடத்துக்குப் பிறகு கொத்தமல்லி, அரிசி மாவைத் தூவி கட்டியின்றி கிளறி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் கிளறி இறக்கி ஆறவிடவும்.

    இந்த மாவில் சிறிதளவு எடுத்து வடைகளாக தட்டி வைக்கவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து தட்டி வைத்த வடைகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

    விரைவில் பொரிந்துவிடும் இந்த வடை.

    இப்போது சூப்பரான அரிசி வடை ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
    • இந்த தொக்கு 2 நாட்கள் வரை கெட்டு போகாது.

    தேவையான பொருட்கள் :

    நாட்டுத் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)

    உரித்த மலைப்பூண்டு - 15 பற்கள்,

    இளம் இஞ்சி - 25 கிராம்,

    மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்,

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,

    நல்லெண்ணெய் - 100 கிராம்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு சற்று வதங்கியதும் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடி பிடித்து விடும்.

    தொக்கு திரண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,

    சர்க்கரை - 1 கப்,

    மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,

    இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,

    எலுமிச்சை பழம் - 1.

    செய்முறை:

    மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

    மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.

    இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).

    நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இது பூரி, சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரா இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    நீண்ட கிளி மூக்கு மாங்காய் - 3,

    சர்க்கரை - 100 கிராம்,

    தோல் நீக்கி, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - கால் டீஸ்பூன்,

    தேன் - 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    மாங்காய்களைக் கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    இத்துடன் இஞ்சித் துருவல் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒரு ஜாடியில் போட்டு, வெள்ளைத் துணியால் வாய்க்கட்டு கட்டி, நல்ல வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கவும்.

    மாந்துருவல் பாகு போல் ஆனதும் தேன் சேர்த்துக் கிளறவும்.

    இப்போது சூப்பரான மாங்காய் முரப்பா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேமியா, ரவையில் உப்புமா மட்டுமல்ல பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்:

    சேமியா - 2 கப்

    ரவை - 1/2 கப்

    பாசிப்பருப்பு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நெய் - தேவையான அளவு

    மிளகு - 1 தேக்கரண்டி

    சீரகம் - 1 தேக்கரண்டி

    முந்திரி - 10

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

    * அதே வாணலியில் சேமியாவையும், ரவையையும் தனித்தனியாகச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.

    * பாசிப்பருப்பை நன்றாக கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.

    * ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்த பின் ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.

    * பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.

    * தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

    * மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

    * சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * ரவை போட்டு நன்றாக கிளறிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

    * ருசியான ரவா சேமியா பொங்கல் தயார்.

    * இதற்கு சாம்பார் அருமையான இணையாகும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ரெசிபி நல்லது.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    சாதம் - ஒரு கப்,

    கறிவேப்பிலை - ஒரு கப்,

    வறுத்த வேர்க்கடலை - விருப்பத்திற்கேற்ப

    மிளகு - 2 டீஸ்பூன்

    பெருங்காயம் - சிறிதளவு ,

    நெய் - 2 டீஸ்பூன்,

    கல் உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    கடுகு - அரை டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிது,

    காய்ந்த மிளகாய் - 2

    செய்முறை:

    வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை 'சிம்'மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.

    கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.

    பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.

    அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.

    ஆறியதும் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, சாதத்தில் சேர்த்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.

    இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.

    இந்த கறிவேப்பிலை மிளகு பொடியை செய்து வைத்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சூடான சாதத்தில் போட்டு கலந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும்.
    • இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - ஒரு கப்,

    துவரம்பருப்பு - 3 டீஸ்பூன்,

    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,

    புளி - ஒரு சிறிய உருண்டை,

    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,

    நெய் - சிறிதளவு, கடுகு,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

    இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.

    நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கறிவேப்பிலை ரசம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஹோட்டலில் கிடைக்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    காய்கறி மசாலா செய்ய

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    பட்டாணி - 1/2 கப்

    உருளைக்கிழங்கு - 4

    பன்னீர் - 100 கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

    உப்பு - 1 தேக்கரண்டி

    ஆம்சூர் தூள் - 1/2 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை நறுக்கியது

    எண்ணெய் - தேவையான அளவு

    சோள மாவு கலவை செய்ய

    சோள மாவு - 1 மேசைக்கரண்டி

    மைதா - 2 மேசைக்கரண்டி

    உப்பு - 1/4 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

    தண்ணீர்

    கார்ன் பிளேக்ஸ்

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.

    * காய்கறிகள் வெந்த பிறகு வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    * பின்பு காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள்,கரம் மசாலா தூள், உப்பு, ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    * பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விட்டு, மசித்து கொள்ளவும்.

    * அடுத்து அடுப்பை அணைத்து விட்டு துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.

    * ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மசாலாவை பரப்பி ஆறவிட்டு, 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.

    * கார்ன் பிளேக்ஸை பொடியாக்கி கொள்ளவும்.

    * சோள மாவு கலவை செய்ய, சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கட்டியின்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்..

    * பிரிட்ஜில் வைத்த மசாலாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.

    * பின்பு அதை சோள மாவு கலவையில் முக்கி கார்ன் பிளக்ஸில் பிரட்டி எடுத்து 5 நிமிடம் பிரீஸரில் வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த நக்கெட்ஸை சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    * இப்போது சூப்பரான வெஜிடபிள் நக்கெட்ஸ் ரெடி.

    * கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×