search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடராஜன்"

    • கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்.
    • டிஎன்பிஎல் கிராமப்புற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிசிசிஐ தன்னை புறக்கணிக்கிறதா, கிரிக்கெட் வாரியத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "பிசிசிஐ-இல் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. அதனால் தான் நான் இங்கு நடராஜனாக அமர்ந்து இருக்கிறேன். காயத்தால் என்னால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. நான் நல்ல முறையில் தயாராகி வருகிறேன். கடந்த ஐபிஎல்-இல் நன்றாக செயல்பட்டேன்."

    "பிசிசிஐ வீரர்களிடம் ஏற்றத் தாழ்வுகளை பார்ப்பதில்லை. கிரிக்கெட் வாரியம் மற்றும் சக வீரர்கள் ஒத்துழைப்பு இருந்ததால், தான் என்னால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடிந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, பலரும் டிஎன்பிஎல் போட்டிகளை பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎல் சிறப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது."

    "அதிகளவு இளம் வீரர்கள் ஒவ்வொரு முறையும் டிஎன்பிஎல்-இல் சிறப்பாக செயல்படுகின்றனர். டிஎன்பிஎல் மூலம் கிராமப்புற வீரர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. கஷ்டப்பட்டால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். கடின உழைப்புடன், எப்போதும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
    • அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20கிரிக்கெட் போட்டி சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதின. போட்டி துவங்குவதற்கு முன்பு மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 36 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பதி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய சிவம் சிங் 4 ரன்களிலும் விமல் குமார் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - பூபதி வைஷ்ணவ குமார் திருப்பூர் அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.

    இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 11.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. 

    • மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.
    • கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் 2020 ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    ஐபிஎல் போட்டியில் தற்போது ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சேலத்தில் தான் படித்த கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் நடராஜன் மாணவர்களிடையே கலந்துரையாடினர்.

    அப்போது பேசிய நடராஜன், மாணவர்களான நீங்கள் ஒரு இலக்கை நோக்கி போகும் போது அதை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கை உங்களால் அடைய முடியும்.

    பஞ்சாப் அணிக்கு முதன் முதலில் நான் செல்லும்போது இந்தி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அங்கு தனிமையை உணர்ந்தேன். எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அங்கு இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளருக்கு தமிழ் தெரிந்ததால் அவர் தமிழில் பேசி எனக்கு உதவினார். அப்போது விரேந்தர சேவாக்கும் எனக்கு துணையாக இருந்தார்.

    இந்தி தெரியவில்லை என்பதால் நான் சோர்ந்து போகவில்லை. எனவே நீங்கள் கல்லூரியிலேயே பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். கல்லூரியில் நீங்கள் பேசத் தொடங்கினால், நாளை உங்களால் எங்கு வேண்டுமானாலும் தில்லாக பேச முடியும் என்று நடராஜன் தெரிவித்தார்.

    • நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும்.
    • நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளுமாகிய சிவபெருமானின் மற்றொரு தோற்றமே கூத்தன் (நடராஜர்) திருக்கோலமாகும்.

    நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும். அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கும் நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும்தான். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.

    ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமே ஆனி உத்திரமாகும். ஆனித்திருமஞ்சனத்தை `மகா அபிஷேகம்' என்றும் அழைப்பர்.

    ஆனி மாதம் சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னிதியில் எழுந் தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதீகம்.

    சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். இங்கு ஆனி திருமஞ்சன நாளை முன்னிட்டு, 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    ஆனி உத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை கண்ணாரக் கண்டு தரிசித்தால், வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும். வறுமை அகலும். செல்வம் சேரும். பிறவிப் பிணி என்னும் பெருநோய் அகலும் என்று பாடுகின்றன திருமுறைகள்.

    இந்த நாளில் சிவ தரிசனமும், நடராஜர் அபிஷேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனி உத்திரத்தில் ஆனந்தம் தரும் நடராஜரை தரிசித்து, வாழ்க்கையில் ஆனந்தத்தை அடைய ஆனந்த கூத்தனை வழிபடுவது நல்லது.

    • அடுத்த மாதம் 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன் ஆகியோர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் ஜூலை 5-ந் தேதி தொடங்குகிறது.

    முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், நடராஜன் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.

    டி.என்.பி.எல். தொட்ரில் உள்ள 13 வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, டி.என்.பி.எல். கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் தினேஷ்குமார், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் இயக்குனர் செல்வமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் பாபு குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 15 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும்.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஜிதேஷ் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது.
    • சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய ஆட்டங்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்ட ஐதராபாத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க குறிவைக்கும். இந்த சீசனில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்துள்ள அந்த அணியின் முந்தைய லீக் ஆட்டம் (குஜராத்துக்கு எதிரான) மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    அதிரடியில் அசத்தும் ஐதராபாத்

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (533 ரன்), அபிஷேக் ஷர்மா (401), ஹென்ரிச் கிளாசென் (339), நிதிஷ் குமார் ரெட்டி என அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். பந்து வீச்சில் நடராஜன், கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார், நாதன் எலிஸ்சும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக பொறுப்பு கேப்டன் சாம் கர்ரன், பேர்ஸ்டோ ஆகியோர் நாடு திரும்பியதும், காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா விலகியதும் அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    தோள்பட்டை காயம் காரணமாக முதல் 5 ஆட்டத்துக்கு பிறகு ஒதுங்கிய ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஜிதேஷ் ஷர்மா வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஐதராபாத் அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் தேட பஞ்சாப் தீவிரம் காட்டும். வலுவான ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 15-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • வேக மாறுபாடுகளுடன் யார்க்கர் பந்துகளை மிக நேர்த்தியாக வீசும் திறன் கொண்டவர் நடராசன்
    • ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடும்போது அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்

    வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    ஆனால் ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    இந்நிலையில், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது" என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    ஜியோ சினிமாவிடம் பேசிய வாட்சன், "வேக மாறுபாடுகளுடன் யார்க்கர் பந்துகளை மிக நேர்த்தியாக வீசும் திறன் கொண்டவர் நடராசன். ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடும்போது அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். நடராஜன் சிறப்பாக விளையாடும் போது, இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று பேசியுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்தது.
    • டெத் ஓவரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.

    புதுடெல்லி:

    ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நடராஜன் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    பந்துவீச்சில் இடம் பெற்றுள்ள அர்ஷதீப் சிங் அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக நடராஜனை தேர்வு செய்திருக்கலாம் என தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டியில் அவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார்.
    • அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் இருப்பார்கள் என்று கருதப்பட்ட சில வீரர்கள், சரியாக விளையாடாத காரணத்தினால் கழற்றி விடப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. அதேவேளையில் அனுபவம் வாய்ந்த சில வீரர்கள் சரியாக விளையாடாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடிக்கு தகுதியானவர் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 19.38 ஆகும். ஸ்டிரைக் ரேட் 12.92. ஆனால் ஓவருக்கு 9 ரன் என சற்று கூடுதலாக ரன் கொடுத்துள்ளார். அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார். நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும்.

    அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் நான் அவர் குறித்து அதிகமாக நினைக்கிறேன். அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசுகிறார்" என்றார்.

    • சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார்
    • யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி விக்கெட் எடுப்பதால் யார்க்கர் கிங் நடராஜன் என பெயர் எடுத்துள்ளார்

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி விக்கெட் எடுப்பதால் யார்க்கர் கிங் நடராஜன் என அவர் பெயர் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அந்த அணிக்காக இதுவரை 50 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

    நேற்று சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி மோதியது. அப்போட்டியில் தான் நடராஜன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக நடைபெற்ற ஹைதராபாத் - கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டியில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது 50-வது ஐ.பி.எல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார்
    • முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார்.

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். நாளை ( 5- ந்தேதி)  சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான போட்டிக்காக அவர் ஐதராபாத்தில் உள்ளார்.

    இந்நிலையில் இன்று நடராஜன் தனது 33-வது பிறந்தநாளை பிரபல நடிகர் அஜித் குமாருடன் கேக் வெட்டி ஐதராபாத்தில் கொண்டாடினார்.

    பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார். இருவரும் மாறி, மாறி கேக் ஊட்டி மகிழ்ந்தனர். பிறந்தநாள் பார்ட்டியின் போது அஜித் - நடராஜன் இருவரும் வெள்ளை நிற உடையில் இருந்தனர்.



    அப்போது இலங்கையைச் சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் உடனிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகின.

    தற்போது பிரபல நடிகர் அஜித், நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×