என் மலர்
நீங்கள் தேடியது "பிரக்ஞானந்தா"
- உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
- தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
- தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
- அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.
உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அடுத்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜூன் எரிகைசியும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
Congratulations @rpragchess for your historic achievement, only the second Indian after @vishy64theking to be in the semifinal of #FIDEWorldCup and one step away from qualifying for the #Candidates. The match showcased Indian chess at its best. Well played @ArjunErigaisi. https://t.co/NTv3PsCU6z
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023
- பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
- இரு ஆட்டங்களும் ‘டிரா’ ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் இன்று நடத்தப்படுகிறது.
பாகு:
உலக கோப்பை செஸ் போட்டி தொடர் அஜர்பை ஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார்.
அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.
இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டம் இன்று நடக்கிறது.
மற்றொரு அரை இறுதியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் 1.5-0.5 என்ற கணக்கில் நிஜாத் அபா சோவை (அஜர்பைஜான்) வீழ்த்தினார்.
- உலக கோப்பை செஸ் அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொள்கிறார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.

இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.
- அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேற்றம் அடைந்துள்ளார். அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார்.
அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் சாதனையால் தமிழகம் பெருமைக் கொள்கிறது. இறுதிப்போட்டியில் வெற்றியடைய வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ஜொலித்துக் கொண்டே இருங்கள் என்றார்.
உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.
அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார்.
அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
செஸ் உலகக்கோப்பை போட்டியில் தங்களின் அபாரமான செயல்திறனுக்காக தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதற்கும் எனது வாழ்த்துக்கள்.
ஜொலித்துக் கொண்டே இருங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
- அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.
உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடம் முடிகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருவானாவுடன் மோதினார்.
முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார். அரையிறுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.
இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடந்தது. இதில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானாவை அரை இறுதி போட்டியில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். இதனைத்தொடர்ந்து இறுதி போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென்னை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாட உள்ளார்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா தாய்க்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என இந்தோனேசியா செஸ் வீராங்கனை ஐரின் சுகந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அவரின் பெருமைமிக்க தாய்க்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். அவர் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலக கோப்பை செஸ் போட்டிக்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
- இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சென் விளையாட உள்ளனர்.
உலக கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் மோதுகின்றனர். இந்த போட்டியை இந்திய மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கினறனர்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா கேண்டிடேட் செஸ் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் அடுத்த ஆண்டு உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் கேண்டிடேட் செஸ் போட்டியில் விளையாட உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கேண்டிடேட் செஸ் போட்டியில் வெல்லும் பட்சத்தில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனுடன் மோதும் வாய்ப்பை பிரக்ஞானந்தா பெறுவார்.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் பிரக்ஞானந்தா.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று நாளை நடைபெற இருக்கிறது.
- பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிரா ஆனது.
- இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் முதல் சுற்று இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் நடைபெற்றது. 35 நகர்வுகள் வரை இந்த போட்டி நீடித்தது. ரூக் நைட் பான் எண்டிங்கை நோக்கி போட்டி சென்ற காரணத்தால், இருவரும் போட்டியை சமன் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.
கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இறுதிப்போட்டி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி அளித்துள்ளார். அதில், "கடினமான போட்டியாகத்தான் இருக்கும், வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார். ஓய்வு எடுத்துவிட்டு, நாளை புத்துணர்ச்சியுடன் திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சியை செய்வேன்," என்று தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரரானார் பிரக்ஞானந்தா.
- இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று இன்று நடைபெற இருக்கிறது.