search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224011"

    • மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
    • காய்கறிகள், பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது

    உடுமலை :

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.

    விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகள் வரத்தும் அதிக அளவில் இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் கழிவுகளும் சேர்ந்து வருகிறது. அதை முறையாக அகற்றாமல் சந்தை வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள்,பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அன்றாட உணவில் காய்கறிகள் கீரைகளின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். தற்போது வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக உள்ளதால் காய்கறிகள், கீரைகள் விரைவில் வாடி விடுகின்றது. இதனால் நாள்தோறும் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றோம். ஆனால் காய்கறி கழிவுகளை அகற்றாமல் சந்தை வளாகத்தின் நுழைவுப்பகுதியில் குவித்து வைத்து உள்ளனர். அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சந்தையின் ஒரு பகுதியில் விவசாயிகள் கடை அமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் முழுமையான அளவில் காய்கறிகளை வாங்க முடிவதில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் சந்தையில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது.

    எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் நாள்தோறும் சந்தையில் சேகரமாகும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ரூ 6.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது.
    • மரபுசாரா கழிவுகளை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் தீர்வு செய்வது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூபதி ராஜா, செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில்பாபநாசம் பேரூராட்சியில் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டுவது எனவும், திருப்பாலைத்துறை உரக்கிடங்கில் நீண்ட காலமாக தேங்கியுள்ள மரபுசாரா கழிவுகளை ரூ 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் தீர்வு செய்வது எனவும்,

    ரூ 6.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது எனவும், பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் இயங்கி வரும் மதுபான கடை பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதால் பாபநாசம் வடக்கு வீதியில் மயானம் அருகில் மாற்றுவது எனவும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், கோட்டையம்மாள், கெஜலட்சுமி, விஜயா, பிரகாஷ், பாலகிருஷ்ணன். சமீரா பர்வீன், புஷ்பா சக்திவேல், ஜாபர் அலி, முத்துமேரி மைக்கேல் ராஜ், தேன்மொழி உதயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி சம்பை கிராம பகுதியில் நெடுஞ்சாலையோரம் கெமிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுகிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா உடையநாயகம் தலைமையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் முறையிட்டனர். கிராம பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என்றும், கடலோரப்பகுதியாக உள்ளதால் உப்புநீர் தான் நிலத்தடியில் உள்ளது. ஆகையால் நிரந்தர குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.

    சம்பை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமுக்கு வந்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • துர்நாற்றம், கொசு உற்பத்தி என கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை குட்டைத்திடல் பகுதியில், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான குட்டைத்திடல் பகுதி போதிய பராமரிப்பு இன்றி அமைந்துள்ளதால் குப்பை, கட்டட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் நாராயண கவி மணி மண்டம், காந்திசிலை, முதற்கிளை நூலகம் அமைந்துள்ள நிலையில் இங்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே, குட்டைத்திடலில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது.
    • இறைச்சிகழிவுகள், இறந்த விலங்கினங்கள், நெகிழி பொருட்கள் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம்,கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் 20கிராமங்களின் சேகரிக்கப்படும் ஊராட்சி குப்பைகள்,கழிவுகள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு நீர்நிலை மாசுஏற்பட்டுவந்தது.

    மேலும் அப்பகுதியில் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் நிலவியது.

    நீர்நிலை பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு வழக்குரைஞர் அறிவிப்பானையை ஊராட்சி ஒன்றியத்திற்கு அனுப்பினார்.

    அதன்பின்னர் நீர்நிலை அருகே குப்பைகள் கொட்டக்கூடாது என நீர்வளஆதாரத்துறையினர் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டாலும், 2ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குப்பைகளை மக்கும்குப்பை,மக்காத குப்பை என தரம்பிரித்து எடுத்து சென்று கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யாமல் பொதுமக்கள் கூடும் இடங்கள்,குடியிருப்புகள்,பள்ளிகள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது.

    குப்பைகளுடன் இறைச்சிகழிவுகள்,இறந்த விலங்கினங்கள்,நெகிழி பொருட்களும் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்,சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. ஆகையால் இரண்டு ஊராட்சிகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை குவித்து வைக்காமல் மாற்று இடம் தேர்வு செய்து தரம்பிரித்து கொட்டிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்ளிடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளருக்கு பதிவு தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

    • மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
    • மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 500 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவுகள் சேகரமாகிறது. மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் காய்கறி கழிவுகள் மூலம் நுண் உரம் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    காய்கறி கழிவு உள்ளிட்ட மக்கும் கழிவுகளை மாற்று சக்தியாக மாற்றி பயன்படுத்த 12 ஆண்டுக்கு முன் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் துவங்கியது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது வெற்றி பெறுவதில் சிக்கல் இருந்த நிலையில், கைவிடப்பட்டது.

    இதனால் பயோ- கியாஸ் உற்பத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக 1.60 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றது.மேலும் சில மாறுதல்கள் செய்து, இங்கு உற்பத்தியாகும் பயோ கியாசை சிலிண்டர்களில் நிரப்பி, அம்மா உணவகம் மற்றும் மாநகராட்சி சத்துணவு மையங்களில் பயன்படுத்த முடிவானது. ஆனாலும் மையம் முழுமையாக இயக்கப்படாமல் வீணானது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சத்தமின்றி விலகியது.

    இவ்வாறு பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இம்மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில், நவீன தொழில்நுட்பத்தில் புதிய கருவிகள் பொருத்தி சி.என்.ஜி., கியாஸ் உற்பத்தி துவங்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட அளவிலான வாகனங்கள் இந்த கியாஸ் மூலம் இயக்கப்படும். இதனால் கிடப்பில் உள்ள மையம் செயல்படுவதோடு கணிசமான அளவு வாகன எரிபொருள் மீதமாகும் என்றார்.

    தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை ஆலயம் திட்டம் தயாரித்துள்ளது. கோவில்களில் சேகரமாகும் மக்கும் குப்பையை உரமாக்கி நந்தவனங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவில்களில் உள்ள கோசாலை மாடுகளின் கழிவுகள், அன்னதான கூட கழிவு, பூமாலை, துளசி, தோட்ட கழிவு, காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளை கொண்டு, மக்கும் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் பசுமை ஆலயம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இணை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இணை கமிஷனர் குமாரதுரை தலைமை வகித்தார். மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ஐ.டி.சி., நிறுவனம், ஆர்.டி.ஓ., டிரஸ்ட், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் நிறுவனத்தினர் பங்கேற்று பசுமை ஆலய திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினர். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், பசுமை ஆலயம் திட்டம் செயல்படுத்தப்படுமென இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

    • இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது.
    • பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் பகுதி 3-ம் மண்டலத்தில் அமைந்துள்ள 46வது வார்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் சுமார் 15 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தை சுற்றிலும் சுமார் 5000 குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். அந்த நிலத்தில் அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கொசு தொல்லை மற்றும் பல நோய்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    மாநகராட்சி மூலமாக எடுக்கப்படும் கழிவு நீர்கள் இங்கே வந்து கொட்டப்படுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எத்தனையோ முறை பொதுமக்கள் சார்பாக தடுத்து பார்த்தும் குப்பைகள் மற்றும் கம்பெனி கழிவுகள், மீன் கழிவுகள், கோழி கழிவுகள் என அனைத்து வகையான கழிவுகளும் கொட்டும் இடமாக அந்த இடம் மாறி வருகிறது. அதுபோக அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்ச நிலையையும் நோய் தொற்று பரவும் அபாயத்திலிருந்தும் காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது . திருப்பூர் தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் பஸ் நிறுத்தம், கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மாநகரின் பல இடங்களில் கழிவு நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீரில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் காமாட்சி புரம் கல்லூரி சாலையில், மின் இணைப்புக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டி சாலை ஓரத்தில் போட்டுள்ளதால் கால்வாய் அடைத்து கழிவுநீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே மரங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மருத்துவ கழிவுகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.
    • தேங்காய் சிரட்டை, டயர்களில் மழைநீர் தேங்கி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள அம்மா நகரில் குடியிருப்புகள் அருகே

    குப்பைகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக அள்ளப்படாமல் கிடந்து வருகிறது.

    சாலை ஓரத்தில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு குப்பைகள், அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள், பழைய துணிமணிகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.

    மேலும் இறைச்சி கழிவுகள், சாலையில் அடிபட்டு இறந்த தெரு நாய், பூனைகள் ஆகியவையும் அவ்வபோது குப்பைகளில் வீசப்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளின் கிடக்கும் தேங்காய் சிரட் டை, டயர்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    பல மாதங்களாக அள்ளப்படாமல் உள்ள குப்பைகள் அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரித்து வருவதால் புகைமூட்டத்தாலும் குடியி ருப்பு வாசிகள் வேதனை அடைந்திருக்கின்றனர்.

    ஆகையால் குப்பைகளை முழுமையாக அகற்றி தூய்மைப்படுத்தி அந்த இடத்திற்கு குப்பை தொட்டி வைத்து சீர் செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
    • மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் போடிப்பட்டி ,மடத்துக்குளம் பகுதியில் தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    ஒரு பகுதியின் விவசாய மேம்பாட்டுக்கு மழை வளம் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு, ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதுடன் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து பயிர்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது.

    அதுமட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கி பல்லுயிர் பெருக்கத்துக்கும் துணை புரிகிறது.இவ்வாறு பலவகைகளில் வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்கும் தடுப்பணைகள் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.இந்த கழிவுகள் மழைநீரில் அடித்து வரப்பட்டு தடுப்பணைகளில் சென்று தேங்குகிறது. இதனால் தண்ணீர் மாசு படுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாவதற்கும் காரணமாகி விடுகிறது. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள தடுப்பணையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது.மேலும் தண்ணீர் பாசம் பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த தண்ணீரால் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    • திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் குளிர் மற்றும் கோடை பருவத்தில் இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்துள்ளது.தென்மேற்கு பருவமழை துவங்கியதும், ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. அதற்கு பிறகு பருவமழை ஏமாற்றிவிட்டது. கடந்த சில நாட்களாக திடீரென கருமேகம் திரண்டு, மழைக்கான அறிகுறி தென்படுவதும், பலத்த காற்று காரணமாக மழை பொய்த்து போவதுமாக சென்று கொண்டிருக்கிறது.

    மானாவாரி சாகுபடியை துவக்க முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.திருப்பூரின் நிலை இப்படியிருந்தாலும் கோவை மாவட்ட பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 3நாட்களுக்கு முன் சித்திரைச்சாவடி பகுதிகளை உற்சாகத்துடன் கடந்து வந்த புது வெள்ளம், திருப்பூரை வந்தடைந்தது.திருப்பூர் நகரப்பகுதிக்குள் நுழைந்த மழைநீர்கழிவுநீருடன் கலந்து, கருப்புநிறமாக ஆர்ப்பரித்து பாய்ந்தோடுகிறது. நொய்யல் வெள்ளத்தால் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, திருப்பூர் அணைமேடு, அணைக்காடு தடுப்பணைகளில், வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது. திடீர் மழை வெள்ளத்தால் அணைப்பாளையம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    திருப்பூர் மாநகருக்குள் நுழைந்த மழை வெள்ளத்தை பார்க்க ஆர்வமாக சென்று பொதுமக்கள் பார்வையிட்டனர். ஆனால் கருப்பு நிறத்தில் தண்ணீர் பாய்ந்தோடியதால் மக்கள் மகிழ்ச்சியில்லாமல் பார்த்து திரும்பினர்.மதியத்திற்கு பின் நொய்யலில் பாய்ந்தோடிய வெள்ளம் தெளிந்த நிலையில் இருந்தது. கருப்பு நிறம் மாறி மழை வெள்ளமாக பாய்ந்தோடியது.இருப்பினும், நொய்யல் ஆற்றில் தேங்கிய சாக்கடை கழிவுகள் அடித்துச்செல்லப்படுகிறது. அடுத்து புது வெள்ளம் பாய்ந்து வந்தால் அருகே உள்ள குளங்களுக்கு தண்ணீர் எடுக்கலாம் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    நொய்யல் ஆறு மாவட்டத்தில் நுழையும், சாமளாபுரம் பகுதிகளில் ஆகாயத்தாமரை அதிகம் படர்ந்துள்ளது. ஆற்றின் ஒரு அங்குலம் கூட கண்ணில் தெரியாதபடி ஆகாயத்தாமரை அடர்த்தியாக ஆக்கிரமித்துள்ளது. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை, தண்ணீரில் அடித்துவரப்பட்டது. அவ்வாறு, அடித்துவரப்பட்ட ஆகாயத்தாமரை அக்ரஹாரப்புதூர் பாலத்தை முழுமையாக அடைத்துவிட்டது.

    தண்ணீர் செல்லும் குழாய்கள் முழுமையாக அடைத்ததால், தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. சூலூர் மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளை இணைக்கும் பாலத்தில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரையை அகற்றாவிட்டால், அந்த ரோட்டை யாருமே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் குறைந்ததும், பொக்லைன் மூலமாக ஆகாயத்தாமரையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள, தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. மங்கலம் நல்லம்மன் தடுப்பணையில், புது வெள்ளம் பாய்ந்து ஆர்ப்பரித்து சென்றது.மழை வெள்ளப்பெருக்கால், அணையில் இருந்து வழிந்தோடிய தண்ணீரில் வெண்ணிற நுரை ஏற்பட்டது. தண்ணீரின் வேகத்துக்கு ஏற்ப நுரை பொங்கி பரவியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கோவை மாவட்ட கிழக்கு பகுதியில், சூலூர் தாலுகா பகுதிகளில் ரசாயனங்கள் ஆற்றில் கலப்பதால் இத்தகைய சீர்கேடு ஏற்படுகிறது.ஆற்றில் ஆபத்தான கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருப்பூர் பசுமை ஆர்வலர்களின் முயற்சியால், மாசுபட்டிருந்த நொய்யல் ஆறு மீட்டெடுக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் தன்னார்வலர் முயற்சியால், ஆண்டு தோறும் ஆற்றை தூர்வாரி பருவமழைக்கு முன்னதாக, 'பளிச்'சென மாற்றிவிடுவார்கள்.இந்தாண்டு பருவமழையும் வந்துவிட்டது.கோடை மழையே போதும் போதும் என்ற அளவுக்கு வாரி வழங்கி சென்றுள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை கருணை காட்டினால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

    திருப்பூரை சுற்றிலும் உள்ள குளம், குட்டைகளை நிரப்பிவிடலாம்.இருப்பினும் இந்தாண்டு திருப்பூர் நகரப்பகுதியில் நொய்யல் ஆறு தூர்வாரி சுத்தப்படுத்தாமல், புதர்மண்டி காணப்படுகிறது. சில இடங்கள்நொய்யல் ஆறா, சோலையா என்று கேட்கும் அளவுக்கு புதர்மண்டி காணப்படுகிறது.மழை வெள்ளம் தடையின்றி செல்ல ஏதுவாக, நகரப்பகுதியில் நொய்யல் ஆற்றை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 300-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் கோவை, திருப்பூர் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.சில பண்ணைகளில் இடநெருக்கடி மற்றும் நோயின் காரணமாக அடிக்கடி கறிக்கோழிகள் இறப்பது வாடிக்கையாக உள்ளன. இவ்வாறு இறக்கும் கோழிகளை பண்ணை உரிமையாளர்கள் சிலர் அருகில் உள்ள சிறு தடுப்பணைகள், பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் மற்றும் ரோட்டோரங்களில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கொட்டி செல்கின்றனர்.

    இது குறித்து வட்டார சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    பண்ணைகளில் இறக்கும் கோழிகள் மற்றும் கோழி கழிவுகளை ஆழமாக குழி தோண்டி புதைத்து அதன் மீது பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். இதனை விடுத்து இறந்த கோழிகளை ரோட்டோரம் கொட்டுவது, குடியிருப்பு பகுதிகளில் வீசி எறிவது, ஓட்டல், தள்ளுவண்டி கடைக்காரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது போன்றவை சட்ட விரோதமான செயல். இதனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • கூடுதல் ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் என்ஜினீயரிங் டெக்னாலஜி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து "பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான மாற்று வழிகள்" என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்நகை நடத்தியது.

    கூடுதல் ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி ராஜ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ராமராஜ், பாண்டியராஜன், உஷாராணி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன உதவி இயக்குநர் ஜெயசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×