search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகங்கை"

    • நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
    • உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரிக்கு வருகை தரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த உணவகத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு அவரது உறவினர் வாங்கிச் சென்ற இட்லி பார்சல் வாங்கி சென்றனார். பின்னர் அவர் மருத்துவமனைக்குள் சென்று நோயாளிக்கு கொடுப்பதற்காக பார்சலை பிரித்து பிளாஸ்டிக் கவரில் இருந்த சாம்பாரை ஊற்றினார்.

    அப்போது அந்த சாம்பாரில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாப்பிடவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் நோயாளியின் உறவினர் ஓட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி கிடந்ததாக சிவகங்கை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் உடனடியாக அந்த ஓட்டலுக்கு வந்து ஆய்வு செய்து செய்தனர். அப்போது அங்கு இருப்பு வைத்திருந்த காலாவதியான பூரி, புரோட்டா, கோழிக்கறி, சமையல் மசாலா பொருட்கள், அழுகிப்போன காய்கறிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரசு மருத்துவமனைக்கு எதிரிலேயே சுகாதாரமற்ற முறையில் இருந்த உணவகத்தின் சமையலறையை ஐந்து நாட்களில் சுத்தப்படுத்தி சரி செய்யவும், அதுவரை உணவகத்தை மூடவும் உத்தரவிட்ட அதிகாரிகள் உணவகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபதாரமும் விதித்தனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியான புகார்களை தெரிவித்துள்ளனர். ஆய்வுகள் மேற்கொள்வதை அதிகாரிகள் புகார்கள் வந்த பிறகே மேற்கொள்வதாகவும், அதுவரை எந்தவொரு உணவகத்தையும் கண்டுகொள்ளவதில்லை என்றும் கூறுகிறார்கள்

    சாலையோர உணவகங்களில் அடிக்கடி சென்று ஆய்வு நடத்துவதை காட்டிலும் மருத்துவமனை, மக்கள் அதிகம் செல்லும் ஓட்டல்களில் அதிரடியாக ஆய்வு நடத்துவதோடு, சமையல் அறை, தயார் செய்யப்படும் உணவு வகைகள் உள்ளிட்டவற்றையும் ஆராய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    • உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக்கிடுங்க.
    • கவுன்சிலர் தம்பதி கறிவிருந்த வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

    தமிழக விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் சிலரும் இதனை பொதுவெளியில் கருத்தாக கூறி வருகின்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார் என்ற வகையில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சிவகங்கையை சேர்ந்த கவுன்சிலர் தம்பதி ஊருக்கே கறிவிருந்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    சிவகங்கை மாவட்ட, சாலைகிராமத்தை சேர்ந்த செல்வி சாத்தையா என்ற கவுன்சிலர் கூறும்போது, "விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக வேண்டியும், ஊரில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கிடாய் விருந்து வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்கிறோம்," என்றார்.

    மேலும், இந்த தம்பதியின் கறி விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


    • கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன.
    • குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தொல்லியல் துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனை நூலாக வெளியிட்டும் உலகறியச் செய்தது.

    நகர நாகரிகம் என்பதற்கு பல்வேறு கூறுகளை கொண்டு உள்ளது. வாழ்விடப்பகுதியின் பரப்பளவு, பல்வேறு மக்கள் ஒன்றுகூடி வாழ்தல், எழுத்தறிவு, செங்கல் கட்டுமானம், தொழிற்கூடங்கள், நீர் மேலாண்மை, நுண்கலைகள், வணிகம், பெருவழிகள் போன்றவை இக்கூறுகளில் அடங்கும். கீழடியில் இத்தகைய கூறுகளுக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது என்றும் அதன் வாயிலாக நகர நாகரிகம் நிலவியது என்றும் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

    நீர்மேலாண்மை சிறந்து விளங்கியதற்கு கீழடியில் பல்வேறுச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றில் திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உருளை வடிவிலான குழாய்கள், பல்வேறு எண்ணிக்கைகளில் உறை கிணறுகள் போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை பல்வேறு பயன்பாட்டுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சங்க காலத் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த நீர் மேலாண்மை சிறப்பினை இதன் மூலம் அறியலாம்.

    இந்நிலையில் கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் சுடுமண்ணாலான உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்பட்டுள்ளது. இது ஆறு உறைகளுடன் காணப்படும், இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் 36 செ.மீ., அகலம் 18 செ.மீ. என்ற முறையில் காணப்படும். தற்பொழுது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளத்தை கொண்டுள்ளது.

    இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்த குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும்.
    • ராகுல்காந்தியின் பின்னால் இளைஞர்கள் ஏராளமானோர் அணி திரண்டு வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அத்தொகுதியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை கலந்துகொண்டு பேசுகையில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தொடங்கும். காங்கிரஸ் கட்சியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும். ராகுல் காந்தியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டு வரு கின்றனர்.

    இதனால் ராகுல்காந்தியின் பின்னால் இளைஞர்கள் ஏராளமானோர் அணி திரண்டு வருகின்றனர் என்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:-

    கூட்டணி கட்சியால்தான் வெற்றி பெற்றோம் என்பதில் என்ற சந்தேகமும் வேண்டாம். அதற்காக நாம் தி.மு.க.விற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். கூட்டணியில் ஜெயித்ததால் நமக்கு பலமில்லை என்று கருதவேண்டாம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பக்கமே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் ஆதரவளித்து வாக்களித்து உள்ளனர்.

    40-க்கு 40 வெற்றி பெற தி.மு.க. கூட்டணியில் இருந் ததும் முக்கிய காரணம். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பிறகு 3-வது மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளது. இளைஞர்கள் எல்லாம் இன்றைக்கு புதிதாக வந்த கட்சிகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

    அவர்களை தடுத்து நிறுத்தி காங்கிரசை நோக்கி ஈர்க்கும் வகையில் நமது எதிர்கால செயல்பாடுகள் அமைய வேண்டும். இளைஞர்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக் காமல் மற்ற நேரங்களிலும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

    மின்கட்டண உயர்வு தற்போது தேவையில்லாத ஒன்று. திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரணம் குறித்து போலீசார் தெளிவுப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்காது.

    கூட்டணி தர்மம் என்பதற்காக நாம் கூனி குறுகி நிற்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் பிரச்சனையை பேச வேண்டும். அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

    நாம் தமிழர் கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இளைஞர்கள் அக்கட்சிக்கு உணர்வுபூர்வமாக வாக்களிக்கின்றனர். அவர்களை நம் பக்கம் ஈர்க்கும் வகையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைக்க வேண்டும்.

    2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறவேண்டும். அதற்காக கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பின்னர் செல்வப்பெருந்தகையும், கார்த்தி சிதம்பரமும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஜான்பாண் டியன் போன்றோர் கூறி வருகின்றனர்.

    எங்களை பொருத்தவரையில் தலைவர்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொலைகள் நடக் கின்றன. அ.தி.மு.க. ஆட்சி யில் நடைபெற்ற கொலைகளை எண்ணி பாருங்கள். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்ட நிபுணர்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த குன்றக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீஸ்காரர் ஜெயராஜ் ஆகியோர் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணி சென்றனர்.

    திட்டுமலை காளி கோவில் சென்றபோது அங்கு நின்றிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை அய்யனார் கோவில் செல்லும் பாதையில் ஓட்டி சென்றனர்.

    தொடர்ந்து அவர்களை விரட்டி சென்றபோது வாகனம் செல்ல பாதை இல்லாததால் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அந்த வாகனத்தை கைப்பற்றிய போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் பாதரக்குடி அய்ய னார் கோவில் செல்லும் மண் ரோட்டில் தண்ணீர் வழித்தடத்தில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ எடையுள்ள, 62 பண்டல்களை கொண்ட 124 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

    பின்னர் ஏற்கனவே சந்தேகத்திற்கிடமாக நின்றி ருந்த வாகனம் குறித்து மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மாநகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று இரவு திருச்சி சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் சோதனை நடந்தது.

    இதில ஆந்திரா மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த ஆந்திரா மாநிலம் மக்காவரப்பள்ளம் ஜி நகரம் துர்கா ராவ், அல்லூர் அண்ணாவாடு காலனி சித்தம்பள்ளி சண்டிபாபு, கிழக்கு கோதாவரி வெக்கவ ரம் அபிலேஷ் வர்மா, கிருஷ்ணலங்கா விஜயவாடா சுபாஷ், விசாகப்பட்டினம் பக்கனபாலம் வித்யாசாகர் ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமி ருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட நான்கு சக்கர வாகனம் உள்பட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றி குன்றக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பிடிபட்டவர்களில் வித்யாசாகர் என்பவரின் தந்தை ஆந்திர மாநில காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது.
    • பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான குன்றக்குடி, நேமம், அரிபுரம், கே.ஆத்தங்குடி, வைரவன்பட்டி, சிறுகூடல் பட்டி, என்.புதூர், மாங்கொம்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கி மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

    குறிப்பாக தங்களது தங்க நகைகளை இந்த வங்கிக் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேமம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை பிள்ளையார்பட்டி வங்கிக் கிளையில் இருந்து மீட்டுச் சென்றார்.

    வீட்டிற்குச் சென்ற அவர் நகையை அணிந்து பார்த்த போது 4 கிராம் எடை குறைந்து இருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் வங்கிக் கிளையில் சென்று கேட்ட போது, பணியில் இருந்த அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் யாரும் சரிவர பதிலை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அந்த வாடிக்கையாளர் அந்த வங்கிக் கிளையின் நகைகள் அடகு வைத்த தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

    இதையடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் அடகு வைத்த நகையை எடை சரிபார்ப்பு மற்றும் மீட்பதற்காக வந்தபோது அனைவரது நகைகளிலும் இரண்டு கிராம் முதல் 8 கிராம் வரையிலான எடை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனால் பிள்ளையார்பட்டி வங்கிக் கிளை முன்பு தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

    தாங்கள் நகையை அடகு வைக்கும் போது வங்கியில் எழுதி தரப்பட்டிருக்கும் எடைக்கும், மீட்டுக் கொண்டு வந்த பிறகு சரிபார்க்கும் போது உள்ள எடைக்கும் எட்டு கிராம் வரையில் குறைவாக வித்தியாசம் காணப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த வங்கிக் கிளையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் வாடிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நகையை அடகு வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த ஒரு வருட காலமாக இது போன்று அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    நகைகளை வைக்கும் போது வங்கியில் தரப்படும் கணக்கு சான்று அட்டையிலும் மோசடியாக ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை வெள்ளை மை கொண்டு அழித்து புதிதாக எடை எழுதி தரப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

    வங்கிகளில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் அனைவரது நகைகளிலும் எடை குறைந்து காணப்படுவதால் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வங்கி கிளையின் மூத்த மேலாளரிடம் கேட்ட போது, அனைத்து வாடிக்கையாளர்களின் நகை எடை குறைவது சம்பந்தமாக கணக்கீடுகள் நடைபெற்று வருவதாகவும், போலீசில் முறையாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வங்கிக்கு வருகை தர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும் வாடிக்கையாளர் களுக்கு எந்த விதமான நஷ்டமும் இன்றி அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை வாடிக்கையாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • காங்கிரஸ் சிவகங்கை தொகுதியில் வெற்றி வாகை சூடியது.
    • ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது.

    சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் நீண்ட காலம் வென்ற கட்சி காங்கி ரஸ். பல முறை வென்று எம்.பி.யாக இருந்தவர் ப.சிதம்பரம். அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி கூட்டணியில் இந்த தொகுதியை காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்து வந்துள்ளது.

    திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி மற்றும் சிவகங்கை என 6 சட்டசபை தொகுதிகளை கொண்ட இத்தொகுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் என்பதால், அதே பின்புலத்தை கொண்ட ப.சிதம்பரத்தை மக்கள் 7 முறை மக்களவைக்கு அனுப்பியுள்ளனர்.

    திருப்புவனம், புஷ்பவனம், குன்றக்குடி குடைவரை கோவில், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில், இடைக்காட்டூர் இருதய மாதா கோவில் உள்ளிட்டட் பல கோவில்கள் நிறைந்த சிவகங்கை , ஆன்மீக பூமியாகவும், மருது பாண்டியர்கள், வேலுநாச்சியார் ஆட்சி செய்த வீரத்தின் விளைநிலமாகவும் உள்ளது.

    சிவகங்கையில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், பாசனத்திற்கு தேவையான நீர் இல்லை என்பதும், இங்கு புதிய தொழில்களை துவங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், காரைக்குடி, திருப்பத்தூர் வழியாக திண்டுக்கல்லுக்கும், தொண்டி, சிவகங்கை வழியாக மதுரைக்கும் புதிய ரெயில் வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும், காரைக்குடி செட்டிநாடு விமான நிலை யம் அமைப்பது, சிவகங்கை கிராபைட் உபதொழிற்சா லைகள் ஏற்படுத்துவது, சிங்கம்புணரியில் கயிறு வாரியம் அமைப்பது போன்ற கோரிக்கைகள் இம்மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளன.

    காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த தொகுதியில் கோட்டை அமைத்திருக்கிறது என்று கூறவே இயலாது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோட்டையாகவே தான் இது இருக்கிறது. இத்தொகுதி பிரிக்கப்பட்டு முதல் இரண்டு முறை நடைபெற்ற (1967-71, 1971-77) தேர்தல் களில் தி.மு.க.வை சேர்ந்த தா.கிருஷ்ணன் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

    77-80 காலகட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெரிய சாமி தியாகராஜன் என்ப வரை உறுப்பினராக மக்கள் தேர்வு செய்தனர். அதன் பின்பு காங்கிரஸ் அங்கு கோலூன்ற துவங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.சுவாமிநாதன் அதன் பின்பு தேர்வு செய் யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்று மாறி மாறி ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது என்றாலும் மிகையாகாது.

    காங்கிரசில் இருந்து ப.சிதம்பரம் பிரிந்திருந்த சம யத்தில் காங்கிரஸ் வேட்பா ளர் சுதர்சன நாச்சியப்பனை சிவகங்கையில் நிற்கவைத்து வெற்றி வாகை சூட வைத்தது காங்கிரஸ். பின்பு காங்கிர சில் மீண்டும் இணைந்தார் ப.சிதம்பரம். 2014 தேர்தலில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வேட்பாளாராக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். தி.மு.க. சார்பில் சுப.துரைராஜூம், அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதனும், பா.ஜ.க. சார்பில் எச்.ராஜாவும் நிறுத்தப்பட்டனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    2014 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் 2-வது இடத்தில் தி.மு.க.வு.ம், மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க. 3-வது இடத்தையும் பிடித்தன. சொந்த செல்வாக்கு இருந்தபோதிலும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 4-வது இடமே கிடைத்தது. ஆனால் கடந்த 2019 தேர்தலில் மீண்டும் ப.சிதம்பரத்தின் "கை" ஓங்கியது.

    இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார். அவருக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தன.

    அதே போல கடந்த முறை தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி இம்முறை தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் நிலவிய கோஷ்டி பூசல்கள், கார்த்தி சிதம்பரத்தின் சர்ச்சை பேச்சுகள் போன்றவை சிவகங்கை தொகுதியில் இம்முறை காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.

    ஆனால் அனைத்து யூகங்களையும் தகர்த்து ப.சிதம்பரத்தின் கை ஓங்கியதன் மூலம் இம்முறையும் காங்கிரஸ் இத்தொகுதியில் வெற்றி வாகை சூடியது. இதைத்தொடர்ந்து இம்முறையும் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று சிவகங்கை காங்கிரசின் கோட்டை என்பதை நிரூபணம் செய்துள்ளார்.

    • கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர்

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விலக்கு சுந்தரம் செட்டியார் தெருவில் வசிப்பவர் சரவணன். நகை வியாபாரியான இவர் சென்னையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக்கடைகள் மற்றும் பட்டறைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

    வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் காரைக்குடியில் இருந்து சிவகங்கைக்கு பேருந்தில் செல்லும் அவர் ஓரிரு நாட்கள் அங்கு தங்கியிருந்து தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருசில சமயங்கள் தவிர மற்ற நேரங்களில் சரவணன் தனியாகவே சென்னைக்கு சென்று வருவார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை சென்ற சரவணன் சவுகார்பேட்டை பகுதியில் 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளிக் கட்டியை வாங்கிக் கொண்டு நேற்று இரவு அரசு பேருந்தில் காரைக்குடி புறப்பட்டார். பேருந்தில் தூங்கியபோதும், நகைகளை தனது கைப் பைக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

    இன்று அதிகாலை சரவணன் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து ஐந்து விலக்கு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்த சென்று கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் முதல் அந்த பகுதியில் தொடர்ந்து விடிய, விடிய அடை மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    அப்போது சரவணனை பின் தொடர்ந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வந்தன. இதனை கவனித்த சரவணன் சாலையோரமாக நடந்து சென்றார். திடீரென அந்த வாகனங்களில் வந்த 6 பேரும் சரவணனை வழிமறித்து சுற்றி வளைத்தனர். ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள் கைகளில் பட்டாக்கத்தி வைத்திருந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத சரவணன் அவர்கள் பிடியில் இருந்து தப்பியோட முயன்று வேகமாக நடந்தார்.

    ஆனாலும் அவர்கள் சரவணனை கீழே தள்ளியதோடு பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த தங்க நகைகளை மற்றும் வெள்ளிக்கட்டிகளை பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த 6 பேரும் எந்தவித சலனமும் இன்றி அங்கிருந்து தப்பிச்சென்றனர். நகைகளை பறிகொடுத்த சரவணன் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டும் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அவருக்கு உதவ யாரும் வரவில்லை.

    இதைத்தொடர்ந்து சரவணன் காரைக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சரவணனுடன் விரைந்து சென்று அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கவில்லை. சரவணன் சென்னைக்கு நகைகள் வாங்க சென்றுவிட்டு நள்ளிரவு அல்லது அதிகாலையில் வருவதை தொடர்ந்து நோட்டமிட்ட மர்ம நபர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைத்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். காரைக்குடியில் இன்று அதிகாலை நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
    • இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

    சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

    அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

    அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.

    ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது.
    • கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறை மூலமே தீர்க்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை என்பது வெறும் கனவுதான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எனது தொகுதி மக்களுக்கு ஒரு எம்.பி.யாக என்னால் முடிந்ததை செய்துள்ளேன்.

    பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவாக கோரினேன். அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படு வதை முற்றிலுமாக நிறுத்துவோம்.

    கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, நகர தலைவர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நூல் வெளியீட்டு விழா நடந்தது.
    • வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடந்த 56-வது தேசிய நூலக வார விழாவில் வந்தேறும் குடிகள் என்ற நூலை முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா வெளியிட சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் பெற்றுக் கொண்டார்.

    மாவட்ட நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் தலைமை வகித்தார். நூலகர் முத்துக்குமார் வரவேற்றார். தமிழ்ச் செம்மல் பகிரத நாச்சியப்பன் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

    வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.

    நூலகத் தன்னார்வ லர்கள் ரமேஷ் கண்ணன், தொழிலதிபர் பாண்டிவேல், நல்லாசிரியர் கண்ணப்பன், புலவர் மெய் ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் ஈஸ்வரன் ஏற்புரை வழங்கினார். நூலகர் கனக ராஜன் நன்றி கூறினார்.

    விழாவில் நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
    • நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நாளை (27-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாமன்னர் மருது பாண்டியர் களின் 222-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகை யில் நாளை 27-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படு கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×