என் மலர்
நீங்கள் தேடியது "பறவை"
- சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது.
- பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மனிதர்கள் மிமிக்ரி செய்வது போல பறவைகளும் சைரன் ஒலி சத்தம் எழுப்பிய வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் கார்கள் பழுதடைந்தது போன்று சப்தம் கேட்டது. உடனே போலீசார் அங்கு சென்ற போது சாலையில் எந்த வாகனங்களும் இல்லை. சிறிது நேரத்தில் அதே சாலையில் சைரன் ஒலியுடன் வாகனம் செல்வது போன்று சத்தம் கேட்டது. அப்போது போலீசார் சுற்றிலும் பார்த்த போது அங்குள்ள மரத்தில் பறவைகள் சைரன் ஒலி சத்தம் எழுப்பியது தெரிய வந்தது.
ஸ்டார்லிங் என்று அடையாளம் காணப்பட்ட பறவைகள் எந்திரங்களின் ஒலிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற விஷயங்களை பின்பற்றுவது இதன் சிறப்பாக உள்ளது. இந்த ஒலி சத்தத்தால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
From our workshops that test out the two tone tune to officers deploying to jobs, this little fella has been sat patiently observing the noise to recreate it! ?⬛ pic.twitter.com/p49FhZ3HMj
— Thames Valley Police (@ThamesVP) April 10, 2024
- பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
- 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். சுமார் 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு மழைகாலங்களில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள் ஒலி எழுப்பினால் அச்சமுற்று வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்பதால் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்கள் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிப்பதில்லை. திருமணம், திருவிழாக்கள், தீபாவளி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தலைமுறையாக பறவைகளின் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் சிறு மகிழ்ச்சியை தியாகமாக செய்வதை போற்றும் வகையில் சிவகங்கை வனக்கோட்டம், திருப்பத்தூர் வனச்சரக அதிகாரிகள் ஆண்டு தோறும் தீபாவளிக்கு முன்பு கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி கவுரவிப்பார்கள். அது போல் இந்த ஆண்டும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
- சைபீரிய பகுதிகளிலிருந்து வலசை வரும் இப்பறவையை கடற்கரை பகுதிகளில் அரிதாகவே பார்க்க முடியும்.உள்நாட்டு நீர் நிலைகளில் பார்க்க முடியாது.
- உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. இயற்கை ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து நஞ்சராயன் குளத்தை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது.முதன்முறையாக தடித்த அலகு மண்கொத்தி பறவை நஞ்சராயன் குளத்துக்கு வந்துள்ளது. இதனை இயற்கை கழக உறுப்பினர்கள் கார்த்திகேயன், இளங்கோவன் படம் பிடித்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-
நஞ்சராயன் குளத்துக்கு முதன்முறையாக தடித்த அலகு மண்கொத்தி பறவை வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கூட இந்த பறவை பதிவாகவில்லை. கிழக்கு அமெரிக்கா, கனடா, சைபீரிய பகுதிகளிலிருந்து வலசை வரும் இப்பறவையை கடற்கரை பகுதிகளில் அரிதாகவே பார்க்க முடியும்.உள்நாட்டு நீர் நிலைகளில் பார்க்க முடியாது.
2022 - 23 குளிர் கால வலசையில் தடித்த அலகு மண்கொத்தி திருப்பூர் வந்திருப்பது சிறப்பு. நஞ்ச ராயன்குளத்தில் இதுவரை உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் மொத்தம் 181 பதிவாகியுள்ளன. வெளிநாட்டு பறவைகள் மட்டும் 45 பதிவாகியுள்ளன.தற்போது வந்துள்ள இந்த பறவை, 2 ,3 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்குமா அல்லது ஓரிரு நாட்களில் இருந்துவிட்டு கடந்து செல்லப்போகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நஞ்சராயன் குளத்துக்கு தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, கிளுவை வாத்துக்கள், சதுப்பு மண் கொத்தி, பொரி மண் கொத்தி, சிறிய பட்டாணி, உப்புக்கொத்தி என ஏராளமான வெளிநாட்டு பறவைகள் ஏற்கனவே வந்துள்ளன.