என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டாத்துறை"

    • வாறுவிளை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
    • மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., பிரின்ஸ், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சிக் குட்பட்ட காட்டாத்துறை-வாறு விளை, புல்லுவிளை, கருவச்சான்குழி சாலை, பூவன்கோடு முதல் முளகுமூடு வரை உள்ள சாலை, நல்லவிளை- தெற்றை ஆகிய சாலைகள் மிகவும் மோசமாகவும் பழுதடைந்த சாலைகளை உடனே சரிசெய்ய கேட்டு தமிழக அரசை கண்டித்து காட்டாத்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாறுவிளை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காட்டாத்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாம் டிக்சன் தலைமை தாங்கினார், காட் டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், வட்டார தலைவர் ஜெகன் ராஜ், ஊராட்சி மன்ற துணைத்த லைவர் ஜெபதாஸ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால்சிங், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ., பிரின்ஸ், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜா, மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், காட் டாத்துறை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் செல்வின் ஜெபகுமார், ஆன்றோ, சூசைமுத்து, மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×