என் மலர்
நீங்கள் தேடியது "புலியூர்குறிச்சி"
- போலீசார் புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் வாகனத்தை சோதனை செய்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து தடுத்து வருகின்றனர்.
நேற்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜி தலைமையில் போலீசார் புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கண்டெய்னர் வாகனம் ஒன்று சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்தது.
அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 190 மூடையில் சுமார் 9 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வாகனத்தின் ஓட்டுநர் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.