search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமுட்டை"

    • கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை தடுக்கும்.

    சினைப்பைகளையும், கர்ப்பப்பையையும் இணைக்கும் பாலமாக சினைப்பாதைக் குழாய்கள் இருக்கின்றன. கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    சினைப்பாதைக்குழாய் அடைப்பின் விளைவாக, சினைப்பாதையில் கருவுறுதல் நடைபெறாது. அல்லது கருவுறுதல் நடைபெற்றாலும் (குழாய் அடைப்பின் காரணமாக), கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை, சினைப்பாதைக் குழாயில் உள்ள அடைப்பு தடுக்கும். இதனால் சினைப்பாதைக் குழாயில் இடம்மாறிய கர்ப்பம் ஏற்படும்.

     சினைப்பாதைக் குழாய் அடைப்பின் அறிகுறிகள், அடைப்பின் காரணத்தைப் பொறுத்து இருக்கும். சினைப்பாதைக் குழாயில் திரவம் நிரம்பி இருந்தால் வயிற்றின் ஒரு பக்கத்தில் லேசான வலி ஏற்படலாம். சில பெண்களுக்கு அவ்வப்போதோ அல்லது மாதவிடாயின் போதோ இடுப்பு பகுதியில் வலி ஏற்படலாம்.

    அடைபட்ட சினைப்பாதைக் குழாய்களை கண்டறிய பயன்படுத்தப்படும் பொதுவான சோதனை ஹிஸ்டெரோசால்பின்கோக்ராம் எனப்படும். இதில் ஒரு பாதுகாப்பான சாயம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு, சினைப்பாதைக் குழாய்களிலுள்ள அடைப்புகள் கண்டுபிடிக்கப்படும்.

    சித்த மருத்துவத்தில் நோய்த்தொற்றுக்குரிய சிகிச்சைகள் மற்றும் சதையடைப்புக்குரிய சிகிச்சைகள் கொடுக்கப்படும். இதை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நோய்த்தொற்றுக்கு சேராங்கொட்டை நெய் 5 மில்லி லிட்டர் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும். சதையடைப்பு நீங்க மாவிலிங்கப்பட்டைச் சூரணம் 1 கிராம், வெடியுப்புச் சுண்ணம் 200 மில்லிகிராம், நண்டுக்கல் பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் வீதம் மூன்று வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். இதை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்பதே நல்லது.

    • ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.
    • மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    கர்ப்பத்தை திட்டமிடும் அனைவருக்கு கருத்தரிக்க சிறந்த நாட்கள் எது என்பதை தெரிந்து கொள்ளுவதில் குழப்பமாக இருக்கும். இப்படி குழப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் அண்டவிடுப்பின் நாட்களை சரியாய் தெரிந்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.

    ஓவரியில் இருந்து கரு முட்டையை வெளியிடும் போது அண்டவிடுப்பு நிகழ்கிறது, உங்கள் மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பு நிகழ்கிறது.

    அதாவது 28 நாள் சுழற்சியின் 11 நாள் முதல் 14-வது நாளில் அண்டவிடுப்பின் நடக்கிறது, இது எல்லோருக்கும் பொதுவானது இல்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது கருப்பை நீர்கட்டிகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.

    நீங்கள் சரியான 28-நாள் சுழற்சியைக் கொண்டிருந்தால், 14 -ம் நாளில் அண்டவிடுப்பு நிகழும்.

    எனவே, நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்பினால், உங்கள் மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த நேரம்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அண்டவிடுப்பு வித்தியாசமாக இருக்கும், மேலும் இது பல காரணங்களால் கருவுறுதலை பாதிக்கலாம்.

    ஒருமுறை கருமுட்டை வெளியேற்றினால், விந்தணுவுடன் இணைந்து கருவுற கரு முட்டை 24 மணி நேரம் வரை மட்டுமே உயிர்வாழும்.

    எனவே ஒரு மாதத்தில் அண்டவிடுப்பு நடக்கும் நாள் தான் கருவுற சிறந்த நாட்கள், மற்ற நாட்கள் கர்ப்பம் தரிக்க சிறந்த நாட்கள் இல்லை.

    மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அப்போது தான் உங்கள் கரு முட்டை வெளியில் வரும், பிறகு அண்டவிடுப்பின் நிகழும் அந்த சமயத்தில் தாம்பத்தியம் கொள்ளுவதன் மூலம் கருத்தரிக்க முடியும்.

    இதைச் செய்வதன் மூலம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

    • பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம்.
    • பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும்.

    பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியின் இறுதி நிலையே 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிறுத்தமாகும். வயது முதிர்ச்சியின் காரணமாக பெண்களின் உடலில் பாலியல் ஹார்மோன்களின் அளவு குறையும். கருப்பையில் இருந்து வெளிவரும் 'ஈஸ்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பின் அளவு குறைவதோ அல்லது நிறுத்தப்படுவதோ இதற்கு காரணமாகும்.

    பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து மாதவிடாய் நிறுத்தத்திற்கான வயது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். சில பெண்களுக்கு 45 வயதிலும், சிலருக்கு 50 வயதிலும் 'மெனோபாஸ்' ஏற்படலாம். மாதவிடாய் நிறுத்தத்திற்கான சராசரி வயது 45 முதல் 55 வரையாகும். ஒருசில பெண்கள் 40 வயதிற்குள்ளேயே மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்து விடுகிறார்கள். இதனை "மூன்கூட்டிய கருப்பை செயலிழப்பு என்கிறோம்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்: பிறக்கும்போதே பெண்களின் உடலில் 4 லட்சம் வரையிலான கருமுட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இந்த கருமுட்டைகள் முதிர்ச்சி அடைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் ஒரு கருமுட்டை வெளியேற்றப்படும்.

    பிறக்கும் போதே குறைவான அளவு கருமுட்டைகள் கொண்ட பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்.

    இதுமட்டுமில்லாமல் குரோமோசோம் குறைபாட்டுடன் பிறப்பவர்களுக்கும். இளம் வயதிலேயே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவோர், கருப்பையை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்வோர் மற்றும் முன் அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் ஏற்படக்கூடும். சிலருக்கு இது மரபு வழியாகவும் ஏற்படலாம்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள்:

    6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையற்ற மாதவிடாய் ஏற்படும், தாமதமாக மாதவிடாய் வருவது, குறைந்த அல்லது அதிகப்படியான நாட்கள் ரத்தப்போக்கு ஏற்படுவது போன்றவை மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கியமான அறிகுறிகளாகும்.

    இதுதவிர முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் அதிக வெப்பத்தை உணர்தல், பிறப்புறுப்பில் வறட்சி, தூக்கமின்மை, தோல் கருமை அடைதல் அல்லது வறண்டு காணப்படுதல், தலைவலி, உணர்வு ரீதியான மாற்றங்கள், அதிக அளவு முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவைகளும் மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகளாகும்.

    முன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தத்திற்கான தீர்வுகள்:

    45 வயதிற்கு முன்னதாகவே மாதவிடாய் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடலில் வெப்பம் குறைந்து ஹார்மோன் சுரப்பு சீராகும்.

    • விசாரணை குறித்து மருத்துவ குழு, மற்றும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை குறித்தும் இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.
    • சென்னை மருத்துவ குழுவினர் சேலம் மற்றும் ஓசூர் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்த கிளம்பி சென்றனர்.

    ஈரோடு:

    16 வயது சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ குழு சென்று விசாரணையை தீவிரப்படுத்தியது.

    இந்நிலையில் இந்த மருத்துவ குழு இன்று காலை ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மற்றும் இந்த வழக்கை விசாரித்து வரும் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி ஆகியோரை சந்தித்து ஆலோசித்தது.

    அப்போது இதுவரை மேற்கொண்ட விசாரணை குறித்து மருத்துவ குழு, மற்றும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை குறித்தும் இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவ குழுவினர் சேலம் மற்றும் ஓசூர் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்த கிளம்பி சென்றனர்.

    ×