என் மலர்
நீங்கள் தேடியது "பலன்"
- விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர் :
தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டப் பலன்களும் இணைய வழியில் பதிவு செய்யும்விவசாயிகளுக்கே வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலைத்துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. தற்போதைய, 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது, விவசாயிகள் இச்சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இணையதளம் மூலம்விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்க இயலும் நிலை உள்ளதால்இதற்காக விவசாயிகள் ,http:/tnhorticulture.tngov.in/tnhortnet/registration-new.phpஇணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத்தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- விவசாயிகள் மன வேதனை
நாகர்கோவில்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் புத்தன் அணை, பத்மநாப புரம் கால்வாய் கரை யோரங்களில் ஆயிரக்க ணக்கான ரப்பர் மரங்கள் தனி நபர்களால் நட்டு பராமரித்து வளர்க்க ப்படுகிறது. அந்த மரங்கள் பலன் தரும் காலங்களில் அதில் பால் வெட்ட குத்தகைக்கு அரசு விடுகிறது.
அப்போது சம்பந்தமே இல்லாமல் லாப நோக்கில் வெளியூர்களை சேர்ந்த வர்கள் குத்தகைக்கு எடுத்து பலன் அனுபவித்து வருகின்றனர்.
இதனால் மரத்தை நட்டு, வளர்த்து, பராமரித்து வந்த அந்த பகுதி விவசாயிகள் மன வேதனைவிவசாயிகள் மன வேதனை அடைகிறார்கள். ஆகவே தாங்கள் நடவடிக்கை எடுத்து மரங்களை நட்டு, பராமரிப்ப வர்களுக்கே பலன் கிடைக்க, அரசு கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும். இதனால் மரங்களை நன்றாக பராமரிப்பதுடன் அவர்கள் மனம் ஆறுதலடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.