search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்தாபானர்ஜி"

    • கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து கிளம்பிச் சென்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயிற்சி டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

    இதற்கிடையே முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்று மம்தாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து இரவில் போராடி வரும் டாக்டர்கள், மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர்.

    தனது வீட்டு வாசல் வரை வந்த டாக்டர்கள் பிரதிநிதிகள் உள்ளே வராமல் அங்கேயே மழையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்த மம்தா, தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் உள்துறைச் செயலர் என அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்.

    நீங்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை வழங்கி உள்ளோம். நீங்கள் என்னுடன் பேச விரும்பவில்லை என்றால் தயவு செய்து உள்ளே வாருங்கள். தேநீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

    நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன், பாதுகாப்பு காரணங்ளால் நேரலை செய்ய முடியாது என்றார்.

    வீடியோ பதிவு செய்வதை ஏற்காததால் பயிற்சி டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது.

    • மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியப் பிரச்சினை குறித்த எனது கடிதத்திற்கு நீங்கள் ஏன் பதிலளிக்கவில்லை?

    கொல்கத்தா:

    கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய பிரச்சனை குறித்த எனது கடிதத்திற்கு தாங்கள் பதில் அனுப்பாதது ஏன்?

    பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலையை உணராது மத்திய அமைச்சர் எனது கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளார்.

    பாலியல் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய பட்ஜெட் மக்களுக்கு எதிரானது.
    • ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை.

    2024-2025 மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் வாசித்துள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மத்திய பட்ஜெட் அரசியல் சார்புடையது, மக்களுக்கு எதிரான பட்ஜெட், மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் ஏமாற்றம் அடைந்துள்ளது. ஏழை மக்களின் நலனை கவனத்தில் எடுத்துக் கொள்வில்லை என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

    3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ஆண்டுக்கு ரூ.3 முதல் 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. ரூ.10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15 சதவீதமும், ரூ..12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், 15 லட்சத்துக்கு மேல் வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

    ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி குறைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைப்பு, தொழில் முதலீட்டிற்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கம், அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 விதமான வரி விதிப்பு முறை இனி ஒரே முறையாக தொடரும், 20 வகையான தாதுக்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது, தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு. பிளாட்டின் மீதான சுங்கவரி 6.4 சவீதமாக குறைப்ப உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.

    • ராகுல் காந்தியை எதிர்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள்.
    • காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகியவை திரினாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகிறார்கள்.

    பகரம்பூர்:

    அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத 3-வது அணியை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி-சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் சந்திப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. காங்கிரஸ் அல்லாத புதிய தேசிய அணியை உருவாக்குவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் காங்கிரசை மம்தாபானர்ஜி கடுமையாக தாக்கியுள்ளார். முர்ஷிதா பாத் மாவட்டத்தில் நடந்த உட்கட்சி கூட்டத்தில் அவர் தொலைபேசியில் தொண்டர்களிடம் கூறியதாவது:

    ராகுல்காந்தியில் கருத்தால் பாராளுமன்றத்தை முடக்கி அவரை ஹீரோவாகும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபடுகிறது. தனது சொந்த நலனுக்காக பா.ஜனதா அப்படி செய்கிறது. ராகுல் காந்தியை எதிர்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள்.

    பா.ஜனதாவை எதிர்த்து போராட காங்கிரஸ் தவறி விட்டது. மேற்கு வங்காளத்தில் உள்ள காவி முகாம் முன் ஒரு மறைமுகமான புரிதலுடன் அந்த கட்சி இருக்கிறது.

    காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா ஆகியவை திரினாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகிறார்கள்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி பேசியதாக திரினாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    • தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

    மேற்கு வங்காளத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்துலுக்கு முன்னதாக தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேவைப்பட்டால் அத்தகைய முயற்சிகளை முறியடிக்க தனது சொந்த ரத்தத்தை சிந்தவும் தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கட்சி கூட்டத்தில் மம்தா உரையாற்றியபோது கூறியதாவது:-

    தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படவில்லை.

    மேற்ககு வங்கத்தை பிரிக்க முயற்சித்தால் எனது ரத்தத்தை கூட சிந்துவேன் ஆனால் மாநிலத்தை பிரிக்கவிட மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×