என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம்"

    • செவ்வாய்க்கிழமை நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபடலாம்.
    • குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடலாம்.

    * குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபட்டு, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

    * கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    * ஒரு சில பெண்கள் ருதுவாவது தள்ளிப்போகும். அந்த குறைபாடு உள்ளவர்கள், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தில் தொடர்ச்சியாக 5 வியாழக்கிழமைகளில், சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமமாகப் பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிகாரத்தால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் நீங்குகிறதாம்.

    * வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

    * மேற்குமுகமாக வீற்றருளும் கால பைரவரை, தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி அல்லது ராகு காலங்கள், அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபம் ஏற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து வணங்கினால், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதாக நடந்தேறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் அகலும்.

    * பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வந்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

    • பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.
    • ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கவுசல்யாவிற்கும் கடந்த வாரம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது குழந்தைகளான ஜோவிதா (4), ஒன்றரை வயது பெண் குழந்தை சஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்து 10-ந் தேதி வந்துவிட்டார்.

    இவர் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் வெளியில் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என உறவினர்கள் நினைத்திருந்தனர்.

    இந்த நிலையில் கூனிமேடு கடற்கரையோரம் ஒரு பெண் குழந்தையின் உடலும், அனுமந்தைகுப்பம் கடற்கரை ஓரம் ஒரு பெண் குழந்தையின் உடலும் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் இது குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இத்தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

    பொதுமக்கள் விரைந்து சென்று பார்த்த போது, கரை ஒதுங்கி கிடந்த குழந்தைகளின் உடல் ஆனந்தவேலுவின் பெண் குழந்தைகள் என தெரியவந்தது. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆனந்த வேலு எங்குள்ளார் என்ற விபரம் தெரியவில்லை.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், 2 பெண் குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேலு தனது குழந்தைகளுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகி விட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனந்தவேலு அல்லது அவரது உடல் கரை ஒதுங்கினால் மட்டுமே நடந்தது என்ன என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகளின் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.
    • சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் 7-வது வார்டு குறுக்கு தெரு, நடுத்தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.

    இதனால் இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.

    சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சேரும் சகதியமாக உள்ள இந்த தெருவில் நெல் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். இந்த சாலையை சீரமைக்கவிட்டால் அதிகாரிகளை கண்டித்து அடுத்த கட்டமாக மீன் பிடிக்கும் போராட்டம், நீச்சல் அடிக்கும் போராட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

    • கோவிலின் உண்டியலை உடைத்து உண்டியலிலிருந்த சுமார் 20 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பொன்னியம்மன் கோவில். நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று கோவிலின் உள்ளே இருந்த ஒரு பவுன் வேல் மற்றும் 1¼ பவுன் தாலியை திருடி சென்றுள்ளனர்.

    மேலும் கோவிலின் உண்டியலை உடைத்து உண்டியலிலிருந்த சுமார் 20 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

    இதே போல் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். நள்ளிரவில் ஆஞ்சநேயர் கோவிலுக்குள் சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு உண்டியலில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.
    • அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டந்தோறும் கள ஆய்வு என்று நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்ட உங்களில் ஒருவனான நான், கடந்த 14,15-ம் தேதிகளில் அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு, இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி, கழக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.

    மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், 'ரோடு ஷோ' என்கிறார்கள். ஷோ என்றால் காட்சி எனப் பொருளாகும். நம்மைப் பொருத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல, மக்கள் நமக்கு காட்சிப் பொருளுமல்ல. திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்குக் கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.

    ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூருக்கு செல்லும் வழியெங்கும் மக்கள் திரண்டு நின்றனர். உங்களில் ஒருவனான என்னைப் பார்த்ததுமே மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்து, ஆரவாரம் செய்ததுடன், "இனி எப்போதும் நம்ம ஆட்சிதான்", "திராவிட மாடல் ஆட்சி சூப்பர்.. அடுத்ததும் நாமதான்" என்றதுடன், 234 தொகுதிகளில் 200-க்கு மேல் நாம் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் நான் வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து "நிச்சயம் 200 ஜெயிப்போம்" என்று உற்சாகக் குரலுடன் உத்தரவாதம் அளித்தனர்.

    மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசமடைந்ததுடன், மக்களுக்கான திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டியதை இத்தகைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன்.

    இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கழகத்தின் ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி.
    • மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் இன்று நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த திட்டத்தில் 65 ஆயிரத்து 503 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தில் உருவான மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறி வருகிறது. 2 கோடி பயனாளிகளை நெருங்கி கொண்டிருக்கிறது.

    வருகிற 29-ந் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க செல்கிறார். அப்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியை திருப்பசாவடி மேடு, கோவிந்தபுரம், ஏணதி மங்கலம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்.

    அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச மருந்து பெட்டகத்தை வழங்குவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.
    • முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக வருகிற 28-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்கிறார். 29-ந்தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    அரசு சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்.

    விழுப்புரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 21 சமூக நீதி போராளிகளுக்கான மணி மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியும் அப்போது நடைபெறுகிறது.

    29-ந் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சமூக நீதி போராளிகள் குடும்பத்தினர் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சியினர் என முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராம தாஸ் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்ப ஏற்பாடு கள் நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், சமூக நீதி போராளிகள் மணிமண்ட பம் திறப்பு விழாவில் பங்கேற்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அவருக்கும் மற்ற பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.

    தற்போது பா.ம.க., பா.ஜனதா கூட்டணியில் இருந்து வருகிறது. தி.மு.க. எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பா.ம.க.க்கும் தலைவர்கள் தி.மு.க. அரசு விடுத்துள்ள அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து பா.ம.க. நிர்வாகி கூறியதாவது:-

    சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் நிகழ்ச்சி இது. பா.ம.க.வின் நீண்டகால கோரிக்கையும் கூட. அதனால் இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள போவாரா? இல்லையா? என்பது இனி மேல் தான் தெரியவரும். ஆனால் இதில் அன்புமணி ராமதாசை பங்கேற்குமாறு கண்டிப்பாக அனுப்பி வைப்பார்.

    அடுத்து ஆளப்போகும் கட்சியுடன்தான் கூட்டணி என்று அன்புமணி தொடர்ந்து கூறி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பா.ம.க. பங்கேற்க இருப்பது அரசியலுக்கான கூட்டணி அச்சாரம் என்று பலர் பேசுவார்கள். அது போக போகத்தான் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்காணத்தில் 23.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
    • தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், மரக்காணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

    விழுப்புரத்தைத் தொடர்ந்து மரக்காணத்தில் 23.8 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கடலூரில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் கடலூர், மரக்காணம், விழுப்புரம் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகரந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். 

    • 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் அங்குள்ள தென் ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

    இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 செ.மீ. மழை பெய்திருந்தது. தற்போது 47 செ.மீ. மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மயிலம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது.

    நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயல் இரவு 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள் கரையை கடந்தது. பின்னர் நகராமல் ஒரே இடத்தில் நீடித்தது.

    இதனால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையில் இருந்தே இந்த பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் கரையை கடந்த போதும், கரையை கடந்து முடித்த பின்னரும் மிக கனமழை கொட்டி தீர்த்தது.

    புதுச்சேரி மற்றும் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே தொடர்ச்சியாக பெய்த மழை இரவு முழுவதும் நீடித்ததால் புதுச்சேரி மற்றும் மயிலத்தில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டி தீர்த்தது. மயிலத்தில் 50 செ.மீ. அளவுக்கும், புதுச்சேரியில் 47 செ.மீ. அளவுக்கும் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது.

    இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இதே போன்று மயிலம் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    புயல் கரையை கடந்தபோது காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. நேற்று மாலையில் இருந்தே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் புதுவை மாநிலம் இருளில் மூழ்கியது. புதுச்சேரி வெங்கட்டா நகர், பாவாணர் நகர், ரெயின்போ நகர், ஞானபிரகாசம் நகர், கிருஷ்ணா நகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் தவித்தனர். உயிருக்கு பயந்து வீடுகளின் மாடியில் தஞ்சம் புகுந்தனர்.

    புதுச்சேரி நகர பகுதியில் உள்ள உப்பனாறு வாயக்கால் நிரம்பி வழிவதால் அதை ஒட்டியுள்ள கோவிந்த சாலை, திடீர் நகர், கென்னடி நகர், வாணரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையொட்டி புதுச்சேரி மாநில அரசு துறை அதிகாரிகள் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் சுமார் 10 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கு வசித்து வந்த மக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. 208 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த முகாம்களில் 1½ லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்று காலையில் நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

    புதுச்சேரியை போன்று விழுப்புரம் மாவட்டமும் ஃபெஞ்சல் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மயிலம் பகுதியில் பெய்துள்ள மிக கன மழையால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அப்பகுதியில் ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 26 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 570 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    மரக்காணத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. 17 இடங்களில் மரம் முறிந்து விழுந்தது.

    2 கோழிப்பண்ணைகளில் மழை நீர் புகுந்தது. அங்குள்ள பயிரிடப்பட்டுள்ள புடலங்காய், உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, தர்ப்பூசணி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் மூழ்கிது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும் தண்ணீரை உடனடியாக வடிய வைக்க முடியவில்லை. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் வீடு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. மழை காரணமாக விடூர் அணை நிரம்பியது. இதன் கொள்ளளவான 32 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணையில் இருந்து தற்போது 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இது 10 ஆயிரம் கன அடியாக உயர வாய்ப்புள்ளது. இதனால் தென் பெண்ணையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் 36 ஏரிகள் உள்ளது. மழை காரணமாக 20 ஏரிகள் நிரம்பி உள்ளது. மழை காரணமாக ஒட்டை பகுதியில் உள்ள ஏரி உடைந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், சவுக்கு, உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது.

    ஏரி கிராம பகுதிக்கு வெளியில் இருப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. திண்டிவனம், மயிலம் சாலை தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
    • வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

    இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

    • புயல் இன்று காைல 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
    • புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    புயல் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் இன்று காைல 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

    புயலால், புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    அதன்படி, மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 120 பேர் கொண்ட, 65 இருளர் குடும்பங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

    அவர்களுக்கு, உணவு, அரிசி, பாய், பெட்சீட், பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு சென்ற அவர், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சென்றார்.

    அங்கு புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.

    இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விழுப்புரம் செல்கிறார்.

    அங்கு, ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

    ×