search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231805"

    • ஆழ்குழாய் வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.
    • தென்னையில் நோய் மற்றும் பூச்சியின் கட்டுப்பாட்டு முறைகளை எடுத்துரைத்தார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டாரம் அக்கரைவட்டம் கிராமத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது.

    விழாவில் வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் பேசியதாவது:-

    குறுவை சாகுபடி நெல் சாகுபடியில்மற்ற பருவங்களை விட குறுவையில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை உள்ளதால் ஆழ்குழாய்வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.

    குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும்.

    குறுகிய கால ரகங்களான ஆடுதுறை 37, ஆடுதுறை 53, ஏஎஸ்டிடி 16 டி பி எஸ், கோ 5, போன்ற குறைந்த வயதுடைய ரகங்களின் சான்று பெற்ற விதைகளை குறுவை பருவத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    தென்னையில் நோய் மற்றும் பூச்சியின் கட்டுப்பாட்டு முறைகளையும் எடுத்துரைத்தார்.

    முன்னதாக அக்கரை வட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணையன் வரவேற்றார்.

    விழாவில் உதவி வேளாண்மை அலுவலர் பதிராஜன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் முத்துக்குமரன், உதவி தொழில் நுட்ப மேலாளர் அணு, பவதாரணி, ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.
    • தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி, மெஞ்ஞான புரம், செட்டியாபத்து, தண்டுபத்து, சீர்காட்சி, வெள்ளாளன்விளை, லட்சுமிபுரம், நங்கைமொழி உட்பட 18 ஊராட்சி மன்ற பகுதிகளிலும், அதுவும் செம்மணல் மற்றும் வண்டல் மண் நிறைந்தபகுதிகளில் முருங்கை மற்றும் தென்னை பயிரிடுவதில் விவசாயிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.

    தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரையிலும், தேங்காய் ஒரு கிலோ ரூ.26-க்கும் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிக அக்கறை எடுத்து தீவிரமாக பயிரிட்டு வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட மரங்களை பராமரித்தல் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கி கூறினர்.
    • தென்னந்தோப்பில் பசுந்தாள் உரம் பயிர் வளர்ப்பு, அங்கக கழிவு சுழற்சி பற்றி விவசாயிகளிடம் கூறினார்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தென்னை ஒரு முக்கிய பயிராக ஏறத்தாழ 7500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு முக்கி யமான வாழ்வாதாரமாக தென்னை விவசாயம் இருந்து வருகிறது.

    சமீப காலமாக தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு கொண்டி ருக்கிறார்கள்.

    சென்னை வேளாண்மை உற்பத்தி ஆணையர், செயலர் மற்றும் வேளாண்மை இயக்குனர் அறிவுறுத்தலுக்கிணங்க வேளாண்மை உழவர் நலத்துறை தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் வேப்பங்குளம் கூட்டாக ஒன்று சேர்ந்து தீவிர வயல் ஆய்வு மருங்கப்பள்ளம், நாடியம் மற்றும் இரண்டாம்புளிக்காடு ஆகிய கிராமங்களில் மேற்கொண்டனர்.

    வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் விஞ்ஞானி டாக்டர் அருண்குமார், தென்னையை தாக்கும் பூச்சிகளான காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை கருத்தலை புழுக்களை பற்றியும், தஞ்சாவூர் வாடல் நோய் (அடித்தண்டழுகல் நோய்), கேரளா மாடல் நோய், குறுத்தழுகல் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் இடி மின்னலினால் பாதிக்கப்பட்ட மரங்களை பராமரித்தல் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கி கூறினர்.

    மேலும் தென்னை நடவு முறை, சொட்டு நீர் பாசனம், ஊடுபயிர்கள், தென்னையில் கலப்பு பண்ணை அமைத்தல், தென்னை மட்டைகள், ஓலைகள், தென்னை நார்க்கழிவு புதைத்தல், தென்னையில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை, நுண்ணூட்டச் சத்துகளின் முக்கியத்துவம், தென்னை டானிக், தென்னைக்கு நுண்ணுயிர் உர பரிந்துரைகள், தென்னந்தோப்பில் பசுந்தாள் உரம் பயிர் வளர்ப்பு, அங்கக கழிவு சுழற்சி பற்றி விவசாயிகளிடம் விரிவாக எடுத்து கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொறுப்பு), துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் செய்திருந்தனர்.

    • சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
    • தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.

    தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • நீர் நிர்வாகம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்.
    • தென்னையில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் நாற்றங்கால் மேலாண்மை குறித்து விளக்கி கூறினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் திருச்சி துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் தென்னை யில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி கருத்தரங்கம் நடை பெற்றது.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் கமல சுந்தரி தென்னையில் இளநீர் பாயாசம் ,தேங்காய் இட்லி பொடி, தேங்காய் எண்ணெய் ,தேங்காய் பர்பி ,தேங்காய் சீப்ஸ் தேங்காய் பவுடர் மற்றும் தேங்காய் பால் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை செய்து செயல் விளக்கம் விளக்கம் அளித்தார்.வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு தெ ன்னையில் ஒருங்கிணைந்த உர மேம்பாடு, நீர் நிர்வாகம் மற்றும் ஊடுபயிர் சாகுபடி தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    அருண்குமார் இணைப் பேராசிரியர் (தோட்ட க்கலை) தென்னையில் உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் நாற்றங்கால் மேலாண்மை பற்றி கூறினார்.

    இதில் மதுக்கூர் சுற்று வட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் என பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த விவசா யிகள் தங்களது கருத்து க்களை கேட்டறிந்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டை பாசன மேலாண்மை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செல்வம் செய்தார். முடிவில் உதவி பேராசிரியர் சுகன்யா தேவி நன்றி கூறினார்.

    • தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது
    • விவசாயிகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

     உடுமலை :

    மழை இன்றி வறண்ட வானிலை காணப்படுவதால் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் ஓலைகள் கருகி மரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க முடியாமல் காய் உற்பத்தி திறன் குறைந்து வருகிறது. அரசு பரிந்துரைக்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் வெள்ளை ஈ தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தென்னை வருமானம் குறைவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சிலர் கூறியதாவது :- நாட்டு ரக தென்னையை அவ்வளவாக நோய் பாதிப்பதில்லை. உயர்ரக தென்னையை அதிக அளவில் வெள்ளை ஈ தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிலர் உயர் ரக தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு நாட்டு ரகங்களை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அரசு உயர் ரகதென்னையை பயிரிட்டால் அதிக காய் உற்பத்தி கிடைக்கும் என்று பேராசையை தூண்டி விவசாயிகளை படுகுழியில் தள்ளி விட்டது. நோய் பாதித்த பின் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் உள்ளது. நோய் தாக்கிய மரங்களை வெட்டி விட்டு மறு நடவு செய்து வருமானம் பார்க்கும் வரை ஒரு மரத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும். புதிய ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் முன் அரசு பல ஆண்டுகள் சோதனை செய்து வெற்றி அடைந்தால் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வேளாண் இயக்குனர் விளக்கம்
    • புதுகோட்டையில் கோடை காலத்தில் தென்னையை தாக்கும் வண்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 493 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னையில் காண்டா மிருக வண்டுகள் தாக்கு தல் ஜூன் முதல் செப்டம்பர்மாதம் வரை அதிகமாக இருக்கும். நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளர்ந்த அனைத்து வயதுடைய தென்னை மரங்களையூம் காண்டமிருக வண்டுகள் தாக்கி சேதம் விளைவிக்கும்.இதனை கட்டுப்படுத்து வது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இயக்குனர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.தென்னந்தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும். மேலும் எருக்குழிகளில் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம்தெளித்து அதன் புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.மரத்தின் குருத்து பாகத்தில் வளர்ந்த வண்டுகள் இருந்தால் கம்பி (அல்லது) சுளுக்கியால் அதனைக் குத்தி வெளியில் எடுத்து கொன்றுவிட வேண்டும்.கோடை மற்றும் மழை காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறியினை தென்னந்தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.ரைனோலியூ ர்இன க்கவர்ச்சி பொறியினை 2 எக்டருக்கு 1 எண் வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.வேப்பங்கொட்டை தூளுடன், மணலை 1 : 2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்க வேண்டும்.ஒரு மண்பானையில் 5 லிட்டர்நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட உதவும் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.

    • தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை வழங்கினார்
    • தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கி–ணைந்த முறையில் கட்டுப்படுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்கு–நர் மா.பெரி–யசாமி கூறியிருப்ப–தாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,505 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலை–யில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரண–மாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படு–கிறது. மேலும், தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.

    தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் டிராக்டரில் இயங்கும் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் மஞ்சள் ஒட்டுப்பொறிகளின் 5x1½ நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். இயற்கை–யிலேயே காணப்படும் என் கார்சியா ஒட்டுண்ணி கூட்டுப்புழுக்களை கண்ட–றிந்து, கூட்டுப்புழுக்கள் காணப்படும் ஓலை துணுக் குகளை ரூகோஸ் வெள்ளை ஈக்கள் காணப்படும் தோப்புகளில் உள்ள தென்னை மரங்களில் பர–வலாக ஓலை–யில் பொருத்த வேண்டும்.

    கிரைசோபெர்லா இரை விழுங்கி ஒரு ஏக்கருக்கு 400 எண்கள் வீதம் வெளி–யிடவேண்டும். கிரைசோ–பெர்லா இரை விழுங்கிகள், குடுமியான்மலை உயிரி–யல் கட்டுப்பாட்டு காரணி–கள் உற்பத்தி மையத்தி–லிருந்து தற்போது வழங் கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த கேட்டுக்கொள் ளப்படுகிறது. ரூகோஸ் வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பு–றத்தில் கூட்டமாக இருந்து சாறு உறிஞ்சும்போது தேன் போன்ற திரவத்தை வெளியிடுகிறது. இத்திரவம் கீழுள்ள மட்டைகளில் மேற்புறத்தில் படிந்து கருப்பு நிற பூஞ்சணம் வளர்வதால் இலைகள் கருப்பாக காணப்படும்.

    இதனை கட்டுப்படுத்த 2 சதவீத ஸ்டார்ச் கரைசலை தெளிப்பதன் மூலம் இலைகளின் மேல் உள்ள கரும்பூசணம் காய்ந்து விழுந்துவிடும். தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது. தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் அசாடிராக்டின், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட தென்னை சாகுபடி–யாளர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை–களை கடைபிடித்து சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    • கிருஷ்ணராயபுரத்தில் தென்னை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது
    • மரக்கன்றுகளுக்கு, பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளுக்கு, பஞ்சாயத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. மேலும், மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்பு பணி செய்யப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பணிகளை மேற்பார்வையிட்டனர்.


    • ஒரு ஏக்கரில் 80-க்கும் மேற்பட்ட தென்னை மர கன்றுகளை வைத்து வளர்க்கிட்டனர். தென்னை மர ரகத்தை பொறுத்து 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளில் காய் காய்க்க தொடங்கிவிடும்.
    • கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு ஒரு வருடத்துத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை குத்தகைக்கு எடுத்திருந்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு ரூ.1000 என விலை குறைந்து போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா

    மணியனூர், கந்தம்பா ளையம், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிபாளையம், சோழசிரா மணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், திகவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், இருக்கூர், கொந்தளம், கோப்பணம் பாளையம், வெங்கரை, பாண்ட மங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர், பரமத்தி, மோகனூர், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை மர சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஒரு ஏக்கரில் 80-க்கும் மேற்பட்ட தென்னை மர கன்றுகளை வைத்து வளர்க்கிட்டனர். தென்னை மர ரகத்தை பொறுத்து 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளில் காய் காய்க்க தொடங்கிவிடும். அப்போது விவசாயிகள் தென்னை மர குத்தகைக்காரர்களுக்கும், தேங்காய் மண்டி உரிமையாளர்களுக்கும் மர எண்ணிக்கையில் குத்தகைக்கு விடுவது வழக்கம். ஒரு மரத்துக்கு எவ்வளவு தொகை என நிர்ணயம் செய்து மொத்தமாக ஒரு ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டுவிடுவார்கள்.

    கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு ஒரு வருடத்துத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை குத்தகைக்கு எடுத்திருந்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு ரூ.1000 என விலை குறைந்து போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து பருவமழை பெய்ததால் தென்னை மரத்தில் காய்கள் அதிக விளைச்சல் பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மும்பை மற்றும் வெளிமாநில, வெளி மாவட்டத்திற்கு செல்லும் தேங்காய்கள் விலை குறைந்து விற்பனையாவதால் குத்தகைகாரர்கள் மற்றும் தனியார் தேங்காய் மண்டி வியாபாரிகள் தென்னை மர குத்தகையை விலை குறைத்து விட்டனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். 

    • உயர் ரக தென்னை நடவு செய்த விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • உயர் ரகத் தென்னை தோல்வியை தழுவியது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல நர்சரிகள் மீண்டும் தென்னங்கன்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்

    திருப்பூர் :

    பசுமை புரட்சிக்கு பின் உயர்ரக தென்னை ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் இனிப்பு சுவை மற்றும் காய்ப்பு திறன் அதிகம் என்பதால் பல விவசாயிகள் உயர் ரக தென்னை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர்.

    துவக்கத்தில் நன்றாகத்தான் இருந்தது. காலநிலை மாற்றம் காரணமாக தென்னையிலும் பூச்சி தாக்குதல் அதிகரித்தது. வீரியமிக்க பூச்சிக்கொல்லிகள் தெளித்தும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பாரம்பரிய நாட்டுத் தென்னை மரங்கள் பூச்சி தாக்குதலை சமாளித்து நிற்கின்றன.ஆனால் உயர் ரக தென்னை மரங்கள் காய்ப்பு திறனை இழந்து விட்டது. பல்லாண்டு பயிரான தென்னையை வளர்த்த விவசாயிகள், அழிக்கவும் மனமில்லாமல் பராமரிக்கவும் முடியாமல் தவிக்கின்றனர். இதனால் உயர் ரக தென்னை நடவு செய்த விவசாயிகள் முற்றிலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    உயர் ரகத் தென்னை தோல்வியை தழுவியது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பல நர்சரிகள் மீண்டும் தென்னங்கன்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவி விவசாயிகள் இவற்றை வாங்கி ஏமாறுவது தொடர் கதையாக உள்ளது.எனவே அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து உயர் ரகத் தென்னங்கன்று உற்பத்திக்கு மற்றும் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    ×