என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்ற வாலிபர்"

    • எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு சென்ற ஆறுமுகம் குடிபோதையில் இருந்ததால் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.
    • சென்னிமலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன் அம்மாபாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (33). இவர் மீன்பிடித்தல், எலி பிடித்தல் போன்ற வேலைகள் செய்து வந்தார்.

    இவரது மனைவி செல்வி. ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் தனது மனைவி செல்வியிடம் எலி பிடிக்க செல்வதாக கூறி விட்டு சென்னிமலையில் உள்ள காட்டூர் வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஆறுமுகம் குடிபோதையில் இருந்ததால் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தார்.

    இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×