search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக உயர்கல்வித்துறை"

    • முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது.
    • வகுப்புகள் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கும்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.எஸ்.சி. பி.காம். பி.ஏ என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன.

    இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள்.

    இந்த சூழலில், கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களை பெற்றார்கள்.

    இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டுக்கான பொதுத் பிரிவு கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாரகள். 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறும்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 608 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அமைச்சர் பொன்முடி அவர்களால் வழங்கப்பட்டது.
    • வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகம் முன்பு நடந்தது. கல்லூரியின் முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார்.சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்.சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன்,

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன்..ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமநாதன்.புவனகிரி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர்டாக்டர் மனோகர்ஆ கியோர்முன்னிலை வகித்தனர்.

    வேலூர் மண்டல இயக்குனர் காவேரி வரவேற்றார்.இந்த பட்டமளிப்பு விழாவில்.தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு 608 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

    பட்டமளிப்பு விழாவில் முன்னாள் துணைவேந்தர் சபாபதி முருகன், பரங்கிபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்.பினர் கிள்ளைரவீந்திரன், ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி உள்பட கல்லூரி பேராசிரியர்கள், பட்டம் பெற்ற மாணவ மாணவிகள்பெற்றோர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.முடிவில் உதவி முதல்வர்மீனா நன்றி கூறினார்.

    ×