search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பி கனிமொழி"

    • குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
    • நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

    மக்களவையில் இன்று நாடாளுமன்ற திமுக குழு தலைவரும் எம்.பியுமான கனிமொழி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

    கேந்திரிய வித்யாலயாக்கள் உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் மொழி கொள்கைகளை எப்படி நடந்து கொள்வீர்கள் என்று உங்களுக்கும் இங்கு இருக்கும் சிலருக்கு விளக்குவதார்காக நான் சொல்கிறேன்.

    அங்கே இருக்கக் கூடிய மாநில மொழியே கற்றுத்தருவோம் என்று சொல்கிறீர்கள். தமிழ் நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயாக்கள் இருக்கிறது. ஆனால், அங்கு நீங்கள் எப்படி தமிழ் சொல்லி தருவீர்கள்.

    அங்கே இருக்க கூடிய மாணவர்களே 20 பேர் ஒரு வகுப்பில் எல்லோரும் சேர்ந்து தலைமை ஆசிரியர்களிடம் வந்து கோரிக்கை வைக்க வேண்டுமாம்.

    அப்படி கோரிக்கை வைத்தால்தான் அதற்காக ஆசிரியர் நியமிக்கப்படும் என்றும் ஆசிரியர் கிடைத்தால் தான் அவர்களை நியமிக்கப்பட்டு அங்கே தமிழ் சொல்லித் தரப்படும் என்று சொல்கிறார்கள். இது தமிழ்நாட்டிலேயே.

    நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

    45 பள்ளிகளிலே 15 பள்ளிகளில்தான் தமிழ் சொல்லி தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது.

    உங்கள நம்பி மொழி கொள்கைகளிலே நீங்கள் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்று எப்படி நினைக்க முடியும்.

    ரெயில் நிலையங்களில் கூட டிக்கெட் வாங்க முடியவில்லை. அங்கையும் ஹிந்தி திணிக்கப்பட்டு இருக்கிறது.

    அப்படிபட்ட அரசாங்கம் எங்கள் மீது ஹிந்தியை மட்டும் இல்லாமல் சமஸ்கிருதத்தையும் திணிக்கின்றனர்.

    அதுமட்டும் இல்லை எங்களுடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேல் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    மதியம் உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது தமிழகம் என்ற பெருமையே நாங்கள் தலை நிமிர்ந்து சொல்லிக் கொள்வோம்.

    ஆனால், பி.எம்.போஷன் என்ற திட்டம் நாடு முழுவதும் இருக்கக் கூடிய திட்டத்திற்கு இந்த அரசாங்கம் அந்த திட்டத்திற்காக மதிப்பீடு 11ஆயிரத்து 600 கோடி. அதில் குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய திட்டத்திலே நீங்கள் ஒதுக்கீடு செய்திருப்பது 10 ஆயிரம் கோடி.

    குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய இந்த பி.எம்.போஷன் திட்டத்திற்கு கூட போதிய நிதியை ஒதுக்க முடியாத நீங்கள், எங்களுக்கு கல்வியை பற்றி சொல்லி தருகிறீர்கள். இதற்கு நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளவேண்டுமா ?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
    • எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கையும், உயிர் பலியும் அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    ×