search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவிச்சந்திரன் அஸ்வின்"

    • ஸ்ரீசாந்தின் அலட்சியத்தால் டோனி கோவமடைந்தார்.
    • டோனி அப்படி இருந்து நான் பார்த்ததில்லை.

    மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையை பெற்று தந்தவர்.

    இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இவரை குல் கேப்டன் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். காரணம் மைதானத்தில் அழுத்தமாக இடங்களிலும் அமைதியாக இருந்து சாதித்து காட்டியவர்.

    இந்நிலையில் 2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் டோனி கோபப்பட்ட சம்பவத்தை தமிழக வீரர் அஸ்வின் நினைவு கூர்ந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடி கொண்டிருந்த டோனிக்கு நான் ட்ரிங்க்ஸ் எடுத்துச் சென்றேன். அப்போது ஸ்ரீசாந்த் எங்கே என கேட்டார். அவர் ஓய்வு அறையில் இருக்கிறார் என கூறினேன். அவரை உடனடியாக வீரர்கள் அமரும் இடத்திற்கு வர சொல் என்றார். ஆனால் ஸ்ரீசாந்த அதை புறக்கணித்தார்.

    அடுத்த முறை ஹெல்மெட்டுடன் மைதானத்துக்குள் செல்கிறேன். அப்போது டோனி கோபத்துடன் இருந்தார். அவர் அப்படி இருந்து நான் பார்த்ததில்லை. ஸ்ரீ எங்கே அவர் என்ன செய்கிறான் என மீண்டும் கேட்டார்.

    அவர் ஓய்வு அறையில் மசாஜ் செய்கிறார் என்று நான் அவரிடம் சொல்கிறேன். அதற்கு டோனி எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஓவரில், ஹெல்மெட்டைத் திருப்பித் தரும்படி என்னை அழைத்தார். அப்போது அமைதியாக இருந்தார். ஹெல்மெட் கொடுக்கும்போது, ஒரு காரியம் செய். ரஞ்சிப் சார் கிட்ட போங்க. ஸ்ரீ-க்கு இங்கு இருக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். நாளைக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யச் சொல்லுங்கள். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என கூறினார்.

    நான் திகைத்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்க்கிறேன். உடனே டோனி 'என்ன நடந்தது? உனக்கு நான் பேசும் ஆங்கிலம் புரியவில்லையா என கேட்டார்.

    இதனை கேட்ட ஸ்ரீ உடனே எழுந்து உடைகளை அணிந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து ட்ரிங்க்ஸ் கொடுக்கும் கடமைகளை அவரே ஏற்றுக்கொள்கிறார். அடுத்த முறை டோனிக்கு ட்ரிங்க்ஸ் தேவைப்படும்போது, ஸ்ரீசாந்த் அங்கு இருப்பார் என்று எனக்கு தெரியும்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • இந்திய அணிக்காக தற்போது டெஸ்ட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
    • இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர். அவர் டெஸ்ட் அணியின் மட்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்திருக்கிறார். மேலும் டெஸ்ட்டில் 516 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் 9-வது இடத்திலும் இந்திய அளவில் கும்பேவுக்கு அடுத்த (2-வது) இடத்திலும் உள்ளார்.

    இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

    இந்நிலையில் அவர் தற்போது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் பெரிய புத்தக கடையில் அஸ்வின் வாழ்க்கை பயணம் புத்தகம் இருந்தது. என்னை போன்ற ஒருவருக்கு இது ஒரு கனவு எனவும் நானும் எனது தந்தையும் பல புத்தக கடைகளுக்கு சென்றிருக்கிறோம் மற்றும் நிறைய கதை ஆசிரியர்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம் எனவும் வீடியோவுக்கு தலைப்பிட்டிருந்தார். 

    • சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.
    • அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் ஆனார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொரில் ஹோம் கிரவுண்டில் தனது கடைசி லீக் போட்டியை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.

    மேலும், இந்த போட்டியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதே போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை தொடர்ந்து பிராவோ 44 விக்கெட்டுகளையும், மார்கெல் 36 விக்கெட்டுகளையும், ஜடேஜா 30 விக்கெட்டுகளையும், பொலிஞ்சர் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 

    • வருகிற 22-ந் தேதி சென்னையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த போட்டியின் டிக்கெட்டுகள் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. அடுத்த சிறிது நேரத்தில் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கு நம்ப முடியாத அளவுக்கு டிக்கெட்டுக்கு டிமெண்ட் இருக்கிறது. தொடக்க விழாவையும், ஆட்டத்தையும் காண என்னுடைய குழந்தைகள் விரும்புகின்றனர். உதவி செய்யுங்கள் சிஎஸ்கே நிர்வாகம்.

    என அஸ்வின் கூறியிருந்தார்.

    • ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.
    • சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 2-வது போட்டியில் 500-வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது நாள் இரவோடு இரவாக பாதியிலேயே தனி விமானம் மூலம் வெளியேறினார். குறிப்பாக குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே இந்திய அணிக்காக விளையாட வந்தார்.

    இந்நிலையில் அந்த கடினமான நேரத்தில் ரோகித் சர்மா சுயநலமின்றி உதவினார் என தமிழக வீரர் அஸ்வின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் பாய் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள்.

    ரோகித் எனக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார். இருப்பினும் அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன்.

    ஆனால் கீழே கமலேஷும் செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோகித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன். அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். வீட்டுக்கு திரும்பும் பயணம் முழுவதும் ரோகித் கமலேஷ்க்கு போன் செய்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

    அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது.

    அன்றைய நாளில் தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார். டோனிக்கு நிகராக அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார். ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.

    கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • கும்ப்ளே சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
    • அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    அதன்பின் களமிறங்கிய இந்தியா, முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அஸ்வின் 36 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக போட்டியிலும் மற்றும் தனது 100-வது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.

    இதன்மூலம் 100-வது டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜாம்பவான்கள் பட்டியலில் அஸ்வின் இணைந்துள்ளார். 2006-ம் ஆண்டு முத்தையா முரளிதரன் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு பிறகு அஸ்வின் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    100வது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

    அஸ்வின்இந்தியா 2024 இங்கிலாந்து 9/128 5/77

    முத்தையா முரளிதரன் இலங்கை 2006 பங்களாதேஷ் 9/141 6/54

    ஷேன் வார்ன் ஆஸ்திரேலியா 2002 தென்னாப்பிரிக்கா 8/231 6/161

    அனில் கும்ப்ளே இந்தியா 2005 இலங்கை 7/176 5/89

    • ராஜ்கோட்டில் டெஸ்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றினார்.
    • குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகினார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. தாயாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இந்திய அணியில் இருந்து விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். இது தொடர்பான தகவலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    திடீரென அணியில் இருந்து விலகியுள்ள அஸ்வினுக்கு தேவையான உதவிகளை செய்ய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராஜ்கோட்டில் நடைபெறும் 3வத் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மீண்டும் இணைகிறார் என பிசிசிஐ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
    • டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    இந்திய அணியின் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    • அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 முதல் 8 விக்கெட்டுகள் வரை எடுத்தால் 5 சாதனைகளை படைப்பார். அஸ்வின் தற்போது வரை 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    நாளை போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரரான பகவத் சந்திரசேகரின் (95 விக்கெட்டுகள்) சாதனையை அஸ்வின் (93 விக்கெட்டுகள்) முறியடிப்பார்.

    4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 97 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார். முன்னதாக இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை கடந்த 2006 -ம் ஆண்டு கைப்பற்றினார்.

    அஷ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டால் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த 9-ஆவது வீரர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்துவார்.

    இதேபோன்று இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை அஸ்வின் (தற்போது வரை 34 முறை) கைப்பற்றினால் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே (35 முறை) சாதனை தகர்ப்பார்.

    7 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2-வது வீரர் அஸ்வின்(93) ஆவார். முதல் இடத்தில் ஆண்டர்சன் (139 விக்கெட்டுகள்) உள்ளார்.

    8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை எடுத்த கும்ப்ளேவை (350) பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை அஸ்வின்(343) பிடிப்பார்.

    • ஒருமுறை அவர் என்னை ஒரு கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்து சென்றார்.
    • நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கை கையாளும் போது மீண்டும் அவரை சந்தித்தேன்.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.

    அஸ்வின் தனது தோழியான பிரீத்தியை காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே அஸ்வின் மனைவி பிரீத்தி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். இதை சானியா மிர்சா, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது பிரீத்தியிடம், காதல் வாழ்க்கை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    நானும், அஸ்வினும் ஒரே பள்ளியில் படித்தோம். அன்றிலிருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். அதன்பின் நாங்கள் வளர்ந்து மீண்டும் பெரியவர்களாக சந்தித்தோம். நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அஸ்வினுக்கு என் மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது.

    அது முழு பள்ளிக்கும் தெரியும். அவர் கிரிக்கெட்டை தொடர பள்ளிகளை மாற்றினார். அதே வேளையில் நாங்கள் தொடர்பில் இருந்தோம். பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சந்தித்தோம்.

    நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கை கையாளும் போது மீண்டும் அவரை சந்தித்தேன். திடீரென்று அவரை ஆறு அடி உயரத்தில் பார்த்தேன்.

    ஒருமுறை அவர் என்னை ஒரு கிரிக்கெட் மைதானத்துக்கு அழைத்து சென்றார். அவர் எதையும் நேரடியாக சொல்பவர். அவர் என்னிடம், என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை மிகவும் விரும்பினேன். அது 10 ஆண்டுகளாக மாறவில்லை என்றார்.

    • ஹர்சல் படேலின் அந்த தைரியத்தை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
    • இது போல மேலும் பல பவுலர்கள் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாடின. இந்த போட்டியின் கடைசி பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ரவி பிஷ்னோயை 'மன்கட்' முறையில் ஹர்ஷல் படேல் அவுட் செய்ய முயற்சி செய்திருப்பார். அவரது அந்த தைரியம் தனக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    ஆட்டத்தின் இக்கட்டான கட்டத்தில் ஹர்ஷல் படேல் இதை செய்திருப்பார்.

    இது குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை. ஒரு பந்து தான் எஞ்சி உள்ளது. நான்-ஸ்ட்ரைக்கர் எப்படியும் ரன் எடுக்கவே முயற்சிப்பார். அந்த சூழலில் எப்போதுமே நான் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யவே முயற்சிப்பேன். அதன் விளைவுகள் என்ன என்பது குறித்தெல்லாம் யோசிக்க மாட்டேன்.

    நான் அந்தப் போட்டியை பார்த்த போது. அவர் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய வேண்டும் என என் மனைவியிடம் சொன்னேன். பவுலரும் அதை செய்தார். அவரது அந்த தைரியத்தை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இது போல மேலும் பல பவுலர்கள் செய்ய வேண்டுமென விரும்புகிறேன். இது விதிகளுக்கு உட்பட்ட ஒன்றுதான்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் விளையாடிய போது இதே முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார். அது அப்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் பள்ளியில் இதற்கான பயிற்சி நடக்கிறது.
    • இதே போல மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள் உள்பட 60 பேருக்கு கால்பந்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின்.

    சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் 25 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    36 வயதான அஸ்வின் 92 டெஸ்டில் விளையாடி 474 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். விரைவில் அவர் 500 விக்கெட்டை தொட்டு சாதனை படைக்க இருக்கிறார்.

    இதற்கிடையே அஸ்வின் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் பள்ளியில் இதற்கான பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சிக்காக 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி கொடுக்க முடிவு செய்துள்ளார்.

    மாநகராட்சி பள்ளியில் கிரிக்கெட் உள்கட்டமைப்பு வசதியை உருவாக்கும் முயற்சியில் பெருநகர மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது. அதன்படி இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    இதே போல மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள் உள்பட 60 பேருக்கு கால்பந்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    ×