என் மலர்
நீங்கள் தேடியது "முன்னாள் முதல்வர்"
- தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தார்.
- முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சங்கம் என்ற இடத்தில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மெகபூபா சென்றுக் கொண்டிருந்த வாகனம் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மெகபூபாவின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிடிபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் சிகிச்சை பெற்று வந்தார்.
- 1980-1983 மற்றும் 1990-1991 வரை திமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக அவர் பணியாற்றினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்
1980-1983 மற்றும் 1990-1991 வரை திமுக சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக பணியாற்றினார். மேலும் 2001- 2006 வரை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார்
- புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
இவர் 1980-1983 மற்றும் 1990-1991 வரை தி.மு.க. சார்பில் புதுச்சேரி முதலமைச்சராகவும் 2001- 2006 வரை புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராகவும் காங்கிரஸ் கட்சி சார்பில் பணியாற்றினார். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- அசாம் முன்னாள் முதல்வரின் மகள், தனது கார் ஓட்டுனரை செருப்பால் அடிக்கும் வீடியோ வைரல்
- அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் காஷ்யப், தனது கார் ஓட்டுநரை செருப்பால் வீடியோ வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், கார் ஓட்டுநர் மண்டியிட்டு அமர்ந்துள்ளார். அப்போது அவரை காஷ்யப், கடுமையாக திட்டி செருப்பால் அடிக்கிறார்.
அசாம் மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரின் மகள், "எனது ஓட்டுநர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை பற்றி தவறாக பேசி வந்தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. இப்போது குடித்துவிட்டு என் வீடு கதவை தட்டினான்" என்று தெரிவித்தார்.
பிரபுல்ல குமார் மஹந்தா, 1985 முதல் 1990 மற்றும் 1996 முதல் 2001 வரையில் 2 முறை அசாம் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உடுமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி (எக்ஸ்டன்ஷன்) மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை பள்ளி மாணவர்களுடன் கொண்டாடபட் டது.
உடுமலை :
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி உடுமலை10-வது வார்டுக்கு உட்பட்ட உடுமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி (எக்ஸ்டன்ஷன்) மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ,எழுது பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
இதில் உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன், 10வது வார்டு கவுன்சிலர் தண்டபாணி ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா ,ஆசிரியர்கள் பால அன்பு வள்ளி, சத்தியபாமா ,கனக சுந்தரி ,அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.