search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு-மாடு"

    • குமரி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
    • இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மூக்கறைக்கல் மற்றும் சிற்றாறு சிலோன் காலணி பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஆடு-மாடுகளை வேட்டையாடியது

    காட்டில் இருந்து குடியி ருப்புகளுக்குள் இரவு நேரத்தில் வரும் புலி ஆடு, பசுமாடு ஆகியவற்றை கடித்து கொன்றது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாமலும் தவிப்புக் குள்ளானார்கள். அவர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்கு மாவட்ட வனத்துறை சார்பாக பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன.

    புலியின் கால் தடங்கள் கண்டறியப்பட்ட பகுதியில் சுமார் 25 கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டது. அதன் மூலம் இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வந்த நிலையிலும் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    ஆனால் புலியின் தாக்குதல் மட்டும் குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஆடு மற்றும் நாய் புலியின் வாயில் சிக்கின. இதனால் மலைவாழ் மக்கள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து புலியை பிடிப்ப தற்க்காக மூக்க றைக்கல் பகுதியில் வனத்துறையினர் நேற்று கூண்டு அமைத்தனர். ஆனாலும் அதில் புலி சிக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் 2-வது கூண்டு அமைக்கப்பட்டது. இது பற்றி வனத்துறையினர் கூறுகை யில், இந்த 2 பகுதிகளில் தான் அதிக அளவு புலியின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இங்கு கூண்டுகள் வைத்து உள்ளோம். இந்த கூண்டு களுக்குள் ஆடு கட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து புலி வரும் போது கூண்டில் சிக்கி விடும். அதேநேரம் ஆடு வேறு பகுதிக்கு சென்று தப்பிவிடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. எனவே வெகு விரைவில் புலியை பிடித்து விடுவோம். பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் புலி வெளியே வருவதில்லை. இரவு நேரத்தில் தான் வருகிறது. எனவே மாலை 6 மணிக்கு மேல் சிறுவர்கள், குழந்தை களை வெளியில் விட வேண்டாம். தேவை யின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறி வுறுத்தி உள்ளோம்.

    மேலும் ஆடு, மாடு, நாய்களை இரவு நேரங்களில் கயிற்றினால் தான் கட்டி வைக்க வேண்டும் வெளியில் விடக் கூடாது. ஆடு, மாடு களை கட்டி வைத்திருக்கும் பகுதியில் இரவு நேரங்களில் மர கட்டைகள் வைத்து தீ மூட்டி வைக்க வேண்டும். கூண்டு அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் பகல் நேரங்களில் செல்லாமல் இருந்தால் புலி வெளியில் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றனர்.

    • விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு தாசில்தார்கள், வருவாய்த்துறையினர், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊத்துக்குளி தாலுகா புஞ்சை தளவாய்பாளையம், வடுகபாளையம், காவுத்தம்பாளையம், பல்லவராயன்பாளையம் கிராமங்களில் வெறிநாய் கடியால் ஆடுகள், கன்றுகள் ஏராளமானவை பலியாகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெறிநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊத்துக்குளி, அவினாசி, பொங்கலூர் ஒன்றியங்களில் மான்கள் இனப்பெருக்கம் அதிகரித்து, கூட்டம் கூட்டமாக வந்து விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இதை ஈடுகட்ட வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் மான்களை அப்புறப்படுத்தி வனப்பகுதியில் விடவும், வனத்தில் இருந்து மான்கள் வெளியேறாத வகையிலும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வாரந்தோறும் கால்நடை மருத்துவர்கள் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    அரசூர்-ஈங்கூர் உயர்மின் கோபுர திட்டத்தால் அவினாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பணிகளை தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்துக்கான இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் பொதுவாக பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள்.

    இழப்பீடு குறித்து தனித்தனி பட்டியல் வழங்கவும், வெளிப்படைத்தன்மை இருக்கவும் வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகை அந்த கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையம் ரேஷன் கடை பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படுகிறது. இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள குட்டையை தூர்வார வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ×