search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-2 மாணவர்கள்"

    • ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.
    • சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    மார்ச் 2-வது வாரத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பெரும்பாலான மாணவர்களை தேர்வுக்கு ஒரு மாதம் முன்பே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தயார்படுத்தியுள்ளனர். ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.

    நன்றாக படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற செய்வதற்கான பணிகள் நடந்து வந்தாலும், தேர்வெழுத தகுதியான மாணவர்களில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் சூழலுக்கு ஏற்ப சிறப்பு வகுப்புகளை காலை, மாலை நேரங்களில் நடத்திக் கொள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

    அவ்வகையில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5 மணி முதல் 7:30 மணி வரை சிறப்பு வகுப்பு பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு துவங்கப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வுகள் நடந்தாலும், பொதுத்தேர்வு தொடங்கும் வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வருவதால், ஒவ்வொரு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளியிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு துவங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென தனி ஆசிரியர் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறுகையில், மாலை, இரவு நேர வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்து வழங்கி வருகிறோம்.

    மாணவர்கள் பள்ளியில் இருந்து சிறப்பு வகுப்புகளுக்கு வரும் நேரம், வீடு சென்றடையும் நேரம் பெற்றோருக்கு அறிவுறுத்தி விடுவதால் பெற்றோரும் இரவு வரையிலான வகுப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.100சதவீத தேர்ச்சியை பள்ளிகள் எட்டவேண்டும் என்பதை மனதில் கொண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

    கள்ளக்குறிச்சியில் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி பிளஸ்-2 மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 மாணவர் களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு தலைமை தாங்கி னார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ் வரி பெருமாள், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜய லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் மணிக்கண்ணன் சிறப்பு ரை ஆற்றினார். இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் தமிழக அரசின் சார்பில் திறமையான வழிகாட்டும் நபர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடை பெறுகிறது. அவர்கள் சொல்லும் தகவலை கேட்டு மாணவ,மாணவிகள் பயனடைய வேண்டும். எப்போதும் அரசு பள்ளி மாணவர்கள் திறமையான வர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கனவு கள் நம்மை தூங்க விடாது என டாக்டர் அப்துல்கலாம் சொன்னது போல மாணவ, மாணவிகள் உங்கள் எதிர்கால எண்ணங்களை கனவுகளாக மாற்றிக்கொண்டு அந்த கனவு நிறைவேறும் வரை குடும்ப சூழ்நிலை நினைத்துப் பார்த்து கவனம் சிதறாமல் படிக்க வேண்டும்.

    படிப்பு மட்டுமே உங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் அவ்வாறு உங்கள் வாழ்க்கைத் தரம் மாறு வதற்காக மாணவர் களின் கண்களை திறக்கச் செய்யும் நிகழ்ச்சி தான் இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு எனும் கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி களை அனைவரும் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மாணவர் சேர்க்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    திருப்பூர்:

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 20ந் தேதி வெளியிடப்பட்டது. இதனால், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது. தவிர, அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவையாக உள்ளது. அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் துவங்கி உள்ளது.உடுமலையிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில், கல்லூரிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தற்காலிக சான்றிதழ் வாங்கிச்செல்கின்றனர் என்றனர்.

    ×