search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People’s Court"

    • மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது.
    • ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப் படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வருவாய் துறை வழக்குகளும், விசா ரிக்கப்பட்டது.

    தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, ஊழல் மற்றும் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் 15 வங்கி கடன் வழக்குகளும், 91 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 31 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 27 காசோ லைகள் வழக்குகளும், 90 குடும்ப நல வழக்குகளும் இதர குற்ற வழக்குகள் 220 என மொத்தம் 474 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 11 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது.

    இதன்மூலம் ரூ.62 லட்சத்து 35ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.

    • மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.23 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டது.
    • வாகன விபத்து வழக்குகள், சிவில், குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் ராமநாதபுரம், முதுகுளத்துார், பரமக்குடி, ராமேசுவரம், திருவாடானை, கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் நடந்தது. இதில் 8 அமர்வுகளில் வங்கி காசோலை வழக்குகள், கடன் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில், குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    ராமநாதபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி கதிரவன், கூடுதல் மகிளா நீதிபதி இ.வெர்ஜின்வெஸ்டா, நீதித்துறை நடுவர் எண் 2 பிரபாகரன், வழக்கறிஞர் சங்க இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 535 வழக்குகள் எடுத்துக்கொண்டு அதில் 57 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு தீர்வுத்தொகையாக 2 கோடியே 23 லட்சத்து 568 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் 66 வழக்குகள் முடித்து வைத்து 6 பயனாளிகளுக்கு ரூ.1,42,78,84 வரை கிடைத்தது.
    • வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை

    தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சிவகங்கை மாவட்டத்தில் 2 மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில்முரளி ஆகியோர் வழக்குகளை விசாரித்தார்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2 குற்ற வியல் வழக்குகள், 65 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், அதே போல் 19 குடும்ப பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் 16 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 20 வங்கிக்கடன் வழக்குகள் என மொத்தம் 122 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 19 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.86,28,346 வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Prelitigation) வழக்குகளில் 305 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 47 வழக்கு தீர்வு காணப்பட்டு ரூ.56,50,500 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.
    • 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமை வகித்தார்.

    இதில் எடுத்துக்கொண்ட 337 வழக்குகளில் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2 கோடியை 78 ஆயிரம் தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.

    நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணிதரன், மகிளா கோர்ட்டு மாவட்ட நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர்கள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, வழக்க றிஞர் சங்க பொருளாளர் பாபு, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
    • பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படியும் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா வழிகாட்டுதலின் படியும் சிவகங்கை மாவட்டத்தில் 3 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நீதிமன்றங்களில் போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதிகள் சுந்தரராஜ், கீதா, வக்கீல்கள் ராமலிங்கம், சவுந்திரபாண்டியன், குருமூர்த்தி. சேது ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 102 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 6 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை வழக்கா டிகளுக்கு கிடைத்தது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • விழுப்புரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 12 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டன.

    விழுப்புரம்

    விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பூரணி அம்மாள் வழிகாட்டுதலின்பேரில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் விழுப்புரம்ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    மக்கள் நீதிமன்றத்தில்மோட்டார் வாகன இழப்பு காசோலை வழக்கு குடும்ப வழக்கு உள்ளிட்ட2000 வழக்குகள் விசாரிக்கப்பட்டுதீர்வு காணப்பட்டு ரூ. 12 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டன.

    மாவட்டதலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் சார்ந்த நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    ×