என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார் வியாபாரி"
- கார் வியாபாரி கடத்தப்பட்டதில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரூ.50 லட்சம் தந்தால் அவரை உயிருடன் விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
மதுரை
மதுரை சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் சகாதீன் (வயது 33). இவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் சம்பவத்தன்று இரவு சின்ன சொக்கிகுளத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது என்பவரை பார்ப்பதற்காக காரில் சென்றார். அப்போது அவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றது.
அந்த கும்பல் சகாதீன் மனைவிக்கு போன் செய்து, "உன் கணவரை நாங்கள் கடத்தி வைத்து உள்ளோம். ரூ.50 லட்சம் தந்தால் அவரை உயிருடன் விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்துபோன அவரது மனைவி, அக்கம் பக்கத்தில் பணம் திரட்டி ரூ.1 லட்சத்தை அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். இதனை ெதாடர்ந்து அந்த கும்பல் சகாதீனை மதுரை- சிவகங்கை ரோட்டில் இறக்கி விட்டு சென்று விட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தர விட்டார். அதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகன் நாதன் ஆலோசனைபேரில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் முதல்கட்டமாக சகாதீனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், நான் முனிச் சாலை இஸ்மாயில்புரம் எல்.கே.டி. நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்த ஆத்திப் (27) என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். அதனை நான் திருப்பி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் ஆத்திப் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து, தெப்பக்குளம் போலீசில் என் வாகனம் திருட்டு வழக்கில் சிக்கி உள்ளது. நீங்கள் எனக்கு ரூ.20 ஆயிரம் உடனடியாக தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து நான் அவருக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர் திருப்பி தரவில்லை. அதனை நான் அவரிடம் கேட்டு வந்தேன். இதற்கி டையே ஆத்திப் தலைமை யிலான கும்பல் என்னை காரில் கடத்தி சென்றது என்றார்.
இதன் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது முனிச்சாலையில் பதுங்கி இருந்த அவர்கள் பிடிபட்ட னர். விசாரணையில் அவர்கள் ஆத்திப், அப்துல் இம்ரான் (23), அகில் ஆஷிக் (24), முகம்மது சபீக் (23) என்பது தெரியவந்தது. அவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.மேலும் தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் சிக்கினர். அவர்கள் பாலாஜி அண்ணாமலை (22), வாசிம் அக்ரம் (23), கார்த்திக் (24) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- வாகன வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா அவிநாசியில் நடைபெற்றது.
- குறைந்த வாடகையில் வாகனச் சந்தை அமைக்க வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் திருப்பூா் நல மாநில கூட்டமைப்பு, திருப்பூா் வடக்கு மாவட்ட வாகன வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா அவிநாசியில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வாடகையில் வாகனச் சந்தை அமைக்க வேண்டும். இணைய வழி வாகன விற்பனையைத் தடை செய்ய வேண்டும். வாகன வியாபாரிகளை நல வாரியத்தில் இணைக்க வேண்டும்.
வியாபாரிகளின் நலன் கருதி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தடைச்சான்று உள்ளிட்டவை பெற காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்