search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல் கைது"

    • ஈரானில் உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு விற்பது தவறில்லை என்பதால் அங்கு கொண்டு சென்று உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • கைது செய்யப்பட்ட பிரசாத், முதலில் சிறுநீரகம் தானம் செய்பவராக தான் வந்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    உடல் உறுப்புகள் தானத்துக்கு நமது நாட்டில் பல்வேறு கடுமையான விதிமுறைகள் உள்ளன. இதனால் சில கும்பல் சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை பெற்று, வெளிநாடுகளில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று சம்பாதித்து வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. கேரளாவில் இதுபோன்று உடல் உறுப்புகளை பெறுவதற்காக ஈரானுக்கு ஆட்களை கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கேரளாவை சேர்ந்த ஷாபித் நாசர் என்பவரை கேரள போலீசார் கைது செய்தனர்.

    இவர் ஏழ்மையில் உள்ள பலரை, பணத்தாசை காண்பித்து ஈரானுக்கு அழைத்துச் சென்று அவர்களது உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக பெற்றிருப்பதும், கடந்த 2019-ம் ஆண்டு 30-க்கும் மேற்பட்டபவர்களை ஈரானுக்கு கடத்திச் சென்று உடல் உறுப்புகளை பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. ஈரானில் உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு விற்பது தவறில்லை என்பதால் அங்கு கொண்டு சென்று உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த சம்பவத்தில் ஷாபித் நாசருடன் மேலும் பலருக்கு தொடர்ப்பு இருக்கலாம் என்று கருதிய போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, ஷஜித் சியாம் , அவரது உறவினராக கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கேரளாவை சேர்ந்த சில மருத்துவமனை ஊழியர்களும் உடல் உறுப்புகளுக்காக ஆள் கடத்தலுக்கு உதவிய தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உடல் உறுப்பு வர்த்தகம் மற்றும் அது தொடர்பான மனித கடத்தல் வழக்கை விசாரிக்கும் எர்ணாகுளம் ஊரக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விசாரணை நடத்தியது.

    இந்த நிலையில் ஐதராபாத்தை தளமாகக் கொண்டு உடல் உறுப்பு மோசடி கும்பலின் மன்னன் செயல்படுவது தெரியவந்தது. அவனை ரகசியமாக கண்காணித்த கேரள போலீசார் ஒரு ஓட்டலில் வைத்து கைது செய்தனர். அவன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பிரசாத் (வயது 41) ஆவார். பல்லம்கொண்டா ராம் பிரசாத் என அழைக்கப்படும் அவரை கொச்சிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட பிரசாத், முதலில் சிறுநீரகம் தானம் செய்பவராக தான் வந்துள்ளார். ஆனால் அவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு தான் அவர் நன்கொடையாளர்களை கண்டுபிடித்து, ஈரானுக்கு கடத்தி உடல் உறுப்புகளை விற்கும் செயலில் இறங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவருடன் தொடர்புடைய மது என்பவர், இன்னும் ஈரானில் உள்ளார். அவரை கைது செய்து அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஏராளமானோரை இதுபோன்று அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாழப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர். இவர் மனித உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக பெற்று வெளிநாடுகளில் அதிகவிலைக்கு விற்று வந்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவரது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர்.

    இந்நிலையில் அவர் ஈரான் நாட்டுக்கு சென்றுவிட்டு விமானத்தில் கேரளாவுக்கு திரும்பி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் பயணித்த விமானம் வந்த கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு சபித் நாசரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் அவருடன் உடல் உறுப்பை சட்டவிரோதமாக பெறுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட நபரும் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது சிறுநீர கத்துக்காக தன்னை ஈரானுக்கு அழைத்துச் சென்றிருந்தாக தெரிவித்தார். இதையடுத்து சபித் நாசரை போலீசார் கைது செய்தனர்.

    சபித் நாசர் பணம் தேவைப்படும் கஷ்டப்பட்ட குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்தால் பணம் கிடைக்கும் என்றுஆசை வார்த்தை கூறுவார். அவ்வாறு கூறும்போது தனது வலையில் விழுபவர்களை ஈரானுக்கு அழைத்துச்சென்று, அறுவை சிகிச்சை செய்து அவரது உடல் உறுப்புகளை பெற்றிருக்கிறார்.

    பின்பு அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்குவிற்று சம்பாதித்து வந்திருக்கிறார். அவர் ஏராளமானோரை இதுபோன்று அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சபித் நாசரின் செல்போனை ஆய்வு செய்ததில் உடல் உறுப்புகளுக்காக ஆட்களை கடத்தியது, கடத்தப்பட்ட நபர்களின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதிக விலைக்கு விற்றது உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆதாரங்கள் சிக்கின.

    சபித் நாசர் மீது உடல் உறுப்புகளை சட்டவிரோத மாக எடுத்து ஈரானுக்கு கடத்தி கொண்டுசென்றது தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், உடல் உறுப்புகள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக அவர் செயல்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடத்தல் கும்பல் அறையில் 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
    • கடத்தல் தொடர்பாக அப்பாஸ், மதன்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கலீலர் ரஹ்மான். இவரது மகன்கள் நூருல்ஹக், ஷேக் மீரான். இவர்களில் ஷேக் மீரான் சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஷேக் மீரான் மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது மோட்டார் சைக்கள்களில் வந்த மர்ம கும்பல் ஷேக் மீரானை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.

    பின்னர் ரூ.40 லட்சம் கேட்டு ஷேக்மீரானை தாக்கினர். மேலும் பணத்தை கொடுக்கும்படி அவரது அண்ணன் நூருல்ஹக் மற்றும் தந்தை கலீலர் மீரானுக்கு போன் செய்து கூறும்படி மிரட்டினர். இதுபற்றி ஷேக்மீரான் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கலீலர் ரஹ்மான் தனது மகன் கடத்தப்பட்டது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுபற்றி எஸ்பிளனேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கடத்தல் கும்பல் மண்ணடி, முத்து மாரி செட்டித் தெருவில் உள்ள லாட்ஜில் ஷேக்மீரானை அடைத்து வைத்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று லாட்ஜில் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஷேக்மீரானை மீட்டனர். மேலும் அங்கிருந்த மண்ணடியைச் சேர்ந்த முகமது ராவுத்தர், முகமது ரிபாயிதீன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த விஜயன், லட்சுமணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    விசாரணையில் ரூ.40 லட்சம் கடன் தகராறில் இந்த கடத்தல் நடந்து இருப்பது தெரிந்தது. கடத்தப்பட்ட ஷேக் மீரானின் அண்ணன் நூருல் ஹக்கும், கடத்தல் கும்பலில் இருந்த ஒருவரும் அக்கடி வெளிநாடு சென்று வந்து உள்ளனர்.

    இதில் ரூ.40 லட்சம் பணத்தை நூருல்ஹக் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த தகராறில் நூருல் ஹக்குக்கு பதிலாக அவரது தம்பி ஷேக்மீரானை கடத்தி பணம் கேட்டு மிரட்டி இருப்பது தெரிய வந்தது.

    கடத்தல் கும்பல் அறையில் 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

    இந்த கடத்தல் தொடர்பாக அப்பாஸ், மதன்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குட்கா, புகையிலை விவகாரத்தில் ஜெயராம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
    • சேலத்திற்கு அழைத்து வந்த அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் டவுன் பட்டை கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாராம் (வயது 52), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டவுன் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22), கடந்த 2-ந் தேதி காலை ஜெயராம் கடையில் இருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் காரில் அவரை கடத்தி சென்றது.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விவகாரத்தில் ஜெயராம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூர் சென்று ஜெயராமை போலீசார் விரைந்து சென்று மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தெரிந்து கொண்டனர். பின்னர் ஜெய்ராம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ஜெய்ராமை கடத்தி சென்ற கும்பல் பெங்களூரிவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த பாகாராம், பிரகாஷ், தினேஷ் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் சேலத்திற்கு அழைத்து வந்த அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×