என் மலர்
நீங்கள் தேடியது "2 நாட்டு துப்பாக்கி"
- போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
- போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி கால்வாரை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (32). இவர் வீட்டில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவயிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது செல்லப்பன் வீட்டில் 2 நாட்டு துப்பாக்கி, மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை இருந்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து பால்ஸ் குண்டு ஆகியவை பறிமுதல் செய்து செல்லப்பனை கைது செய்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.